தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த ‘துணிவு’ ஆகிய இரு படங்கள் ஜனவரி 11ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.
இந்த படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்த நிலையில் தமிழகத்தில் குறிப்பிட்ட தியேட்டர்களில் நள்ளிரவு 1 மணி காட்சி மற்றும் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன.
இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
இந்த நிலையில் அனுமதி வழங்கப்படாத நாட்களில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டதாக மதுரை மாநகரில் உள்ள சில (30) தியேட்டர்களுக்கு மாவட்ட கலெக்டர் அணில் சேகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இரண்டு வாரங்களில் இதற்கு விளக்கம் வேண்டும் என தெரிவித்துள்ளார்.் இல்லையெனில் திரையரங்கு ஒழுங்குமுறை விதிகள் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலெக்டர் எச்சரித்துள்ளார்.
கூடுதல் தகவல்..
படம் ரிலீஸ் ஆன 11 & 12ஆம் தேதி முதல் பொங்கல் வரை சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து இருந்தது.
இதனை மீறி அனுமதி வழங்கப்படாத நாட்களில் திரையிட்ட தியேட்டர்களில் மீது நடவடிக்கை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
Collector warns theatres which screened special shows of Varisu Thunivu