தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நீட் தேர்வு அச்சத்தால் தமிழக மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்தனர்.
இதனால் நீட் தேர்வு எதிர்ப்பு தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
எனவே நடிகர் சூர்யா நீட் தேர்வுவை கண்டித்து கடுமையான அறிக்கையை வெளியிட்டார்.
இதனால் நீட் தேர்வை ஆதரிக்கும் பாஜக & இந்து அமைப்புகள் சூர்யாவுக்கு எதிராக திரும்பினர்.
இதனை தொடர்ந்து… திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய இந்து மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தர்மா என்பவர், நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த நிலையில் கோவை காந்திப்பார்க் பகுதியில் சூர்யாவை கண்டித்து இந்து இளைஞர் முன்னணியினர் இன்று போராட்டம் நடத்தினர்.
“இயலாமையில் இருக்கும் சில மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் விதமாக சூர்யா பேட்டிகள் அறிக்கைகள் உள்ளன.
சூர்யா மாதிரியான ஆட்கள் நீட் வந்து மாணவர்களுக்கு ஆகாது நீட் ங்கிற மாதிரி பேசி வருகின்றனர்” என்றார் இந்து இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சூர்யாவின் படத்தை கிழித்தும் காலில் மிதித்தும் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நடிப்பை மட்டும் பாருடா சூர்யா…. வேலையை மட்டும் பாருடா சூர்யா… என கோஷங்கள் எழுப்பினர்.
coimbatore hindu munnani youth protest against suriya