தளபதி-62 அப்டேட்ஸ்… மலையாள கலைஞரை தமிழுக்கு அழைக்கும் விஜய்

தளபதி-62 அப்டேட்ஸ்… மலையாள கலைஞரை தமிழுக்கு அழைக்கும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalapathy 62 cinematographerமெர்சல் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கவிருப்பதாக வந்த செய்திகளை பார்த்தோம்.

இந்நிலையில் இதில் ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் இணைந்துள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இவர் இதுவரை களி, சோலோ உள்ளிட்ட மலையாள படங்களில் மட்டுமே பணிபுரிந்துள்ளார்.

கடந்த 2016ல் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான குப்பி படத்திற்காக கேரள அரசின் விருதைப் பெற்றிருக்கிறார்.

இவர் விஜய்யுடன் இணைவதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

cinematographer Girish Gangadharan joins with Murugadoss for Vijay 62

தியேட்டரை போல அரசு அலுவலகத்திலும் தேசிய கீதம் ஒலிக்கலாமே… அரவிந்த்சாமி கேள்வி

தியேட்டரை போல அரசு அலுவலகத்திலும் தேசிய கீதம் ஒலிக்கலாமே… அரவிந்த்சாமி கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Why not singing National Anthem in all Govt Offices Says Arvindswamiதியேட்டர்களில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது தேசிய கீதம் இசைக்கப்படும் போது தியேட்டர்களில் மக்கள் எழுந்து நின்று தங்கள் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை என்று சுப்ரீக் கோர்ட் உத்தரவிட்டது.

இது தொடர்பாக என் தேசப்பற்றை பொது இடத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயமில்லை என்றார் கமல்.

தற்போது அரவிந்த்சாமியும் இதுகுறித்து தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நான் எப்போதுமே தேசிய கீதம் இசைக்கப்படும்போது பெருமையோடு எழுந்து நின்று, பாடுவேன்.

அது தியேட்டர்களில் மட்டும் ஏன் கட்டாயம்? என்பது எனக்கு புரியவில்லை.

ஏன் அனைத்து அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், சட்டப்பேரவை, பாராளுமன்றக் கூட்டங்கள் தொடங்குவதற்கு முன்பு தினமும் இசைக்கக் கூடாது?

இவ்வாறு அரவிந்த்சாமி கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.

arvind swami‏Verified account @thearvindswami

I will always stand up for our Natl Anthem & sing along,which I do with great pride.Never understood why it ws mandatory n cinema halls only

arvind swami‏Verified account @thearvindswami

Why not everyday in all govt offices, courts, before assembly and parliament sessions?

Why not singing National Anthem in all Govt Offices Says Arvindswami

மெர்சல் பிரச்சினையில் ஆதரவளித்தவர்களுக்கு ஜோசப் விஜய் நன்றி

மெர்சல் பிரச்சினையில் ஆதரவளித்தவர்களுக்கு ஜோசப் விஜய் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay thanksமெர்சல் படம் பல பிரச்சினைகளைத் தாண்டி வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜோசப் விஜய் என்ற விஜய் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது…

மெர்சல் திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி மக்களின் பாரட்டுக்களுடன், நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மாபெரும் வெற்றி அடைந்துள்ள மெர்சல் திரைப்படத்திற்கு சில எதிர்ப்புகளும் வந்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் என் கலையுலகைச்சார்ந்த நண்பர்களான நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், திரையுலக அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் தேசிய அளவில் பிரபல மான அரசியல் தலைவர்கள் மாநில கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள், பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளம், பண்பலையைச் சேர்ந்த ஊடக நண்பர்கள், எனது நண்பா, நண்பிகள் (ரசிகர், ரசிகைகள்) பொதுமக்கள் அனைவரும் எனக்கும் மெர்சல் படகுழுவினருக்கும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள்.

மேலும் மெர்சல் திரைப்படத்தை மாபெரும் வெற்றி பெற செய்ததற்கும் , ஆதரவு கொடுத்ததற்கும், அனைவருக்கும் இத்தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நன்றி கலந்த வணக்கத்துடன் உங்கள் விஜய் என குறிப்பிட்டு உள்ளார்.

தன் லெட்டர் பேடில் ஜோசப் விஜய் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது இங்கே கவனித்தக்கது.

Joseph Vijay Thanks letter to all in Mersal issue

joseph vijay thanks letter

கீதன்-வர்ஷா இணையும் சீமத்துரை பர்ஸ்ட் லுக்கை ஆர்யா வெளியிட்டார்

கீதன்-வர்ஷா இணையும் சீமத்துரை பர்ஸ்ட் லுக்கை ஆர்யா வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aryaபுவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E.சுஜய்கிருஷ்ணா தயாரிக்கும் புதிய படம் “சீமத்துரை”.

கீதன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை சந்தோஷ் தியாகராஜன் எழுதி இயக்குகிறார்.

நாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். ஜோஷ் ஃப்ராங்க்ளின் இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Arya revealed first look of Seemathurai movie

மேயாத மான் சூப்பர்னு தலைவரே சொல்லிட்டாரு… கார்த்திக் சுப்புராஜ் குஷி

மேயாத மான் சூப்பர்னு தலைவரே சொல்லிட்டாரு… கார்த்திக் சுப்புராஜ் குஷி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth praises Meyaadha Maan movie Karthik Subburaj felt happyகடந்த அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளியன்று மெர்சல் படத்துடன் மேயாத மான் மற்றும் சென்னையில் ஒரு நாள் 2 ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது.

இதில் மெர்சல் படத்தை பார்த்த ரஜினிகாந்த் முன்பே பாராட்டியிருந்தார் என்பதை பார்தோம்.

இப்போது மேயாத மான் படத்தையும் அவர் பார்த்து பாராட்டியுள்ளதாக அப்பட தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில் தலைவரே சொல்லிடாரு என உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

ரத்னகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் வைபவ், பிரியா பவானிசங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் இசையமைக்க, விது அய்யனா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

படத்திற்கு பாசிட்டிவ்வாக விமர்சனங்கள் கிடைத்துவந்த நிலையில் சூப்பர் ஸ்டாரின் பாராட்டும் கூடுதல் எதிர்பார்ப்பை கொடுக்கும் என நம்பலாம்.

Rajinikanth praises Meyaadha Maan movie Karthik Subburaj felt happy

karthik subbaraj‏Verified account @karthiksubbaraj 37m37 minutes ago
Wow !! Thalaivar watched #Meyaadhamaan yesterday. He loved it & wished the team for giving a super fun film….Thanks Thalaivaaa…

meyadha maan rajini wish

பாபாஜி பக்தர்களுக்காக இமயமலையில் தியான மண்டபம் கட்டிய ரஜினி

பாபாஜி பக்தர்களுக்காக இமயமலையில் தியான மண்டபம் கட்டிய ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini baba symbolசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடிக்கடி இமயமலைக்கு செல்வது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

மேலும் டெல்லியில் உள்ள ராணிகேட் பாபாஜி குகைக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.

தனது வாழ்வின் பல முக்கிய முடிவுகளை அங்கு சென்ற பிறகுதான் ரஜினிகாந்த் எடுப்பதாக கூறப்பட்டு வருகிறது.

துவாரகா, ஹிரித்வார், ரிஷிகேஷ் உள்ளிட்ட புனித சுற்றுலாத் தலங்களைக் கடந்து அந்த குகைக்குச் செல்லும் அவர் காடு, மலை என கடினமான பாதைகளில் பயணித்து அங்கே போகிறார் என்று கூறப்படுகிறது.

பாபாஜி குகையில் உள்ள பாபாவின் அவதார புருஷர் ஒருவர் அந்த குகையில் வசித்துள்ளார் என்ற நம்பிக்கை அங்கே உள்ளது.

ரஜினி அங்கு செல்வதே அவருடைய ஆசிர்வாதம் பெறுவதற்குத்தான் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இமய மலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து ஸ்ரீ பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கும் தியானம் செய்வதற்கும் உதவும் வகையில் ஸ்ரீ பாபாஜி தியான மண்டபம் ஒன்றை கட்டியுள்ளனர்.

இக்கட்டிடத்தின் கிரஹபிரவேச விழா அடுத்த மாதம் நவம்பர் 10 அன்று நடைபெறவுள்ளதாம்.

மேலும் அடுத்த வருடம் இந்த மண்டபத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வரவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு:

Trustee Mr viswanathan,
Lawyer cell 9444382543
Information from Hari Himalaya friend of rajinikanth

Rajinikanth built Ashram cum House for Babaji devotees in Himalayas

baba rajini

More Articles
Follows