அஜித் பட ரீமேக் ரிலீஸ்.: தியேட்டரை அடித்து நொறுக்கிய பவர் ஸ்டார் ரசிகர்கள்

அஜித் பட ரீமேக் ரிலீஸ்.: தியேட்டரை அடித்து நொறுக்கிய பவர் ஸ்டார் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமிதாப் நடித்த ‘பிங்க்’ படம் தமிழில் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படமானது.

தற்போது தெலுங்கு ரீமேக்கில் வக்கீல் சாப் ஆகியுள்ளது.

இதில் பவர் ஸ்டார் பவன் கல்யாண், அஞ்சலி, நிவேதா தாமஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் இன்று வெளியானது.

இந்த நிலையில், தெலங்கானாவின் ஜகுலம்பா கத்வால் என்ற ஒரு பகுதியிலுள்ள தியேட்டர் ஒன்றில் படம் திரையிடப்பட்டது.

அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பவர் ஸ்டார் பவன் கல்யாண் ரசிகர்கள், தியேட்டரை அடித்து நொறுக்கினர்.

சில தினங்களுக்கு முன் ’வக்கீல் சாப்’ பட் ட்ரெய்லர் வெளியானது.

அப்போது வேறு ஒரு தியேட்டரின் கண்ணாடி கதவுகளை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் நுழைந்தனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Cinema theatre vandalised in Andhra as Pawan Kalyan’s ‘Vakeel Saab’ shows cancelled

கமல் அஜித்தால் ஆண்களிடம் ஏற்பட்ட கல்யாண பயம்..; உண்மையை உடைக்கும் குமார சம்பவம் இயக்குனர்

கமல் அஜித்தால் ஆண்களிடம் ஏற்பட்ட கல்யாண பயம்..; உண்மையை உடைக்கும் குமார சம்பவம் இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Sai Sri Ramமுப்பது வருடங்களுக்கு மேலாக பரதக்கலையை தனது உயிர் மூச்சாக கொண்டு கலைச்சேவை செய்துவருபவர் இயக்குநர் கே.சாய்’ஸ்ரீராம்.

தற்போது முழுக்க முழுக்க பரதக்கலையை மையமாக வைத்து ‘குமார சம்பவம்’ என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இந்தப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், நடனம், தயாரிப்பு, இயக்கம் என்பதோடு மட்டுமில்லாமல் அவரே கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.

படத்தில் என்னோடு நிகிதா மேனன், சாய் அக்‌ஷிதா, மீனாட்சி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

வெஸ்டர்ன், ராப் என இளசுகள் கவனம் திரும்பி கிடக்க, இந்தசமயத்தில் பரதத்தை மையப்படுத்தி இந்தப்படத்தை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் தனது மனக்குமுறல்களை பகிர்ந்து கொண்டார் இயக்குநர் சாய்ஸ்ரீராம்..

“நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டியத்துறையில் இருக்கிறேன். என்னுடைய அப்பா பி.கே.முத்து பரதக்கலைஞராக இருந்தவர்.

ஏழைபடும்பாடு, சுதர்ஸன், மக்களைப் பெற்ற மகராசி, மாங்கல்யம் போன்ற படங்களில் டான்ஸ் மாஸ்டராக இருந்திருக்கிறார். சிவாஜிக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்திருக்கிறார். நானும் இதே துறைக்கு வந்து விட்டேன்.

கடந்த பல வருடங்களாகவே சினிமாவில் பரத நாட்டியத்தை மிகவும் மோசமாக சித்தரிக்கிறார்கள்.

குறிப்பாக ஆண்கள் பரதம் கற்றுக்கொண்டால் பெண் தன்மை வந்து விடும் என்ற தவறான ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக ‘வரலாறு’ படத்தில், நாயகன் அஜித் பரதம் கற்றுக்கொண்டதால் தனக்கு திருமணம் ஆகவில்லை என ஒரு காரணம் சொல்வார்.

அதே போல ‘விஸ்வரூபம்’ படத்தில் நடிகர் கமல்ஹாசன் நாட்டியக்கலைஞராக இருப்பதால், குறிப்பாக பெண் தன்மை கொண்டவராக இருப்பதால், அவரது மனைவி அவரை புறக்கணிப்பதாக காட்டப்பட்டிருக்கும்.

நன்றாக பரதம் தெரிந்த ஜெயம் ரவியே கூட, டண்டணக்கா என்கிற பாடலில் அதை அவமதிக்கும் விதமாகத்தானே ஆடியிருந்தார்

பரதம் என்பது புனிதமான விஷயம். அதை இப்படியெல்லாம் சிறுமைப்படுத்துவது பற்றி யாருமே கவலைப் படவில்லை. என்னிடம் பரதம் கற்க விரும்புபவர்கள் எல்லாம் கேட்கும் முதல் கேள்வி, இதை கற்றுக்கொண்டால் நமக்கு பெண் தன்மை வந்துவிடுமா, திருமணத்திற்கு பெண் தர மாட்டார்களா என்கிற சந்தேகத்துடனேயே கேட்கிறார்கள்..

அந்தவகையில் இந்த விஷயத்தில் கமலும், அஜித்தும் பரதக்கலைக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்றே சொல்வேன்.

இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் இதுபற்றிய உண்மையையும் எனது மனக்குமுறலையும் வெளிப்படுத்தியபோது, அது அறியாமல் நடந்துவிட்ட தவறு என பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டார்.

அதேபோல நடிகர் அஜித்தாவது அதுபற்றி தெரியாமல் யாரோ சொல்லிக்கொடுத்ததை செய்தார் என்று வைத்துக்கொள்ளலாம்…

ஆனால் கமல் பரதம் பற்றி எல்லாம் தெரிந்திருந்தும், ஆண் பரத கலைஞர்களை அவமதித்து விட்டார். அவர் ஜாம்பவான் என்பதற்காக தவறை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியுமா..?

இப்படி ஒவ்வொரு படத்திலும் பரதக்கலையையும் ஆண் பரத கலைஞர்களையும் தவறாக சித்தரிப்பதை இனியேனும் தடுக்க வேண்டும்.. அதேசமயம் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக போய் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்பதால் தான், தற்போது பரதத்தை மையப்படுத்தி ‘குமார சம்பவம்’ என்ற படத்தை நானே எடுத்து முடித்திருக்கிறேன்.

இந்தப் படத்திற்குப் பிறகு பரதத்தை இனிமேல் யாரும் தவறாக காட்டக்கூடாது.. அதேபோல ஆண்கள் பரதம் கற்றுக்கொண்டால் பெண் தன்மை வந்துவிடும் என்கிற பொய்யான கருத்தும் இனி பரவக்கூடாது.. ஆண்களும் பரதம் கற்றுக்கொள்ள ஆர்வமாக முன் வரவேண்டும்…. அதுதான் என்னுடைய நோக்கம்” என கூறினார்.

இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார் இயக்குனர் சாய்ஸ்ரீராம்.

Kumara Sambavam director slams Kamal and Ajith

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரஜினி-கமலின் ரீல் மகள்..; இப்போ நலமா?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரஜினி-கமலின் ரீல் மகள்..; இப்போ நலமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nivetha Thomas‘நவீன சரஸ்வதி சபதம்’ என்ற படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்தவர் நிவேதா தாமஸ்.

இவர் ‘ஜில்லா’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார்.

‘பாபநாசம்’ படத்தில் கமலுக்கு மகளாகவும் ‘தர்பார்’ படத்தில் ரஜினிக்கு மகளாகவும் நடித்திருந்தார்.

தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் இல்லை என்பதால் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார்.

தற்போது பவன் கல்யாண் & அஞ்சலியுடன் ‘வக்கீல் சாப்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் இன்று ஏப்ரல் 9ல் ரிலீசாகிறது.

இவர் சில தினங்களுக்கு முன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

வீட்டில் தன்னைத் தானே தனிமை படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் தன்னுடைய உடல்நிலை குறித்து வெளிப்படுத்தும் விதத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நிவேதா தாமஸ்.

“தன் பெட்டில் சிரித்தபடி படுத்திருக்கும் நிவேதா ஒவ்வொரு நாளும் வந்து போகிறது, நான் நலமாக இருக்கிறன் என கூறியுள்ளார்.

விரைவில் நிவேதா தாமஸ் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Nivetha Thomas opens up about her health

ஏஜிஎஸ் தயாரிப்பில் ‘குக் வித் கோமாளி’ பவித்ராவுடன் ஜோடி போடும் சதீஷ்

ஏஜிஎஸ் தயாரிப்பில் ‘குக் வித் கோமாளி’ பவித்ராவுடன் ஜோடி போடும் சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sathish Pavithra (2)ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’, விஜய் சேதுபதி நடித்த ‘கவன்’, தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘பிகில்’ உள்ளிட்ட பல தரமான திரைப்படங்களை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்து முத்திரை பதித்து வரும் கல்பாதி எஸ் அகோரம், கல்பாதி எஸ் கணேஷ் மற்றும் கல்பாதி எஸ் சுரேஷ், வித்தியாசமான மற்றும் புதுமையான கதை அம்சத்துடன் கூடிய புதிய படமொன்றை தயாரிக்கின்றனர்.

பல வெற்றிப்படங்களில் நடித்து வரும் சதீஷ், இப்படத்தின் மூலமாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.

‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனம் கவர்ந்த பவித்ரா லட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இவர்களுடன் ஜார்ஜ் மரியன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், இளவரசு, லிவிங்ஸ்டன், ஞானசம்பந்தன் மற்றும் ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பல குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்களை இயக்கி விருதுகளை வென்றுள்ளவரும், யார்க்கர் ஃபிலிம்ஸ் எனும் யூடியூப் சேனலை நடத்தி வருபவருமான கிஷோர் ராஜ்குமார் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் 21-வது படைப்பான இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அர்ச்சனா கல்பாதி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஆவார்,

திரைப்படத்தை பற்றி கூறும் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார்…

“மிகவும் வித்தியாசமான இந்த படத்தின் கதை நகைச்சுவை ததும்ப விவரிக்கப்பட உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பெரிய திரையில் கண்டு மகிழும் வகையிலான ஃபேண்டசி காமெடியாக இத்திரைப்படம் திகழும்,” என்கிறார்.

நடிகர்கள்: சதீஷ், பவித்ரா லட்சுமி, ஜார்ஜ் மரியன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், இளவரசு, லிவிங்ஸ்டன், ஞானசம்பந்தன் மற்றும் ஸ்ரீமன் உள்ளிட்ட பலர்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கிஷோர் ராஜ்குமார்

தயாரிப்பு நிறுவனம்: ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்

தயாரிப்பாளர்கள்: கல்பாதி எஸ் அகோரம், கல்பாதி எஸ் கணேஷ் மற்றும் கல்பாதி எஸ் சுரேஷ்

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அர்ச்சனா கல்பாதி

ஒளிப்பதிவு: பிரவீன் பாலு

இசை: அஜீஷ் அஷோக்

படத்தொகுப்பு: ராம் பாண்டியன்

கலை: எம் ஜி முருகன்

சண்டை பயிற்சி: மைக்கேல்

நிர்வாக தயாரிப்பு: எஸ் எம் வெங்கட் மாணிக்கம்

தயாரிப்பு நிர்வாகம்: டி சரவணகுமார்

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

Sathish Pavithra Lakshmi to make debut as lead actors

‘குக் வித் கோமாளி’ அஸ்வின் உடன் இணையும் விஜய்சேதுபதி பட நாயகி

‘குக் வித் கோமாளி’ அஸ்வின் உடன் இணையும் விஜய்சேதுபதி பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tanya ravichandran karuppanஇளம் திறமைகளுக்கான புகலிடமாக, தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளமாக Vels Film International நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் திரைத்துறையில், தங்களின் படைப்புகளின் வழியே சாதிக்க துடிக்கும் திறமையாளர்களை, அடையாளப்படுத்தும் விதமாக “Vels Signature” எனும் புதிய டிஜிட்டல் தளமொன்றை Dr ஐசரி K கணேஷ் நிறுவியுள்ளார்.

திரைத்துறையில் தனியே குறும்படம், சுயாதீன இசை ஆல்பம், போன்றவற்றை உருவாக்கி இணைய வெளியில் அடையாளம் தேடும், புதிய திறமையாளர்களை இந்த தளம் ஊக்குவித்து அறிமுகப்படுத்துகிறது.

இந்த டிஜிட்டல் தளத்தின் மூலம் முதல் ஆல்பம் பாடலாக Criminal Crush வெளியாகிறது.

இப்பாடலை Vels Film International நிறுவனம் தயாரித்து வெளியாகி வெற்றி பெற்ற “கோமாளி” படத்தின் இணை இயக்குநர் ருத்ரா மணிகண்டன் மற்றும் “பப்பி” பட இணை இயக்குநர் க.ச. ஆனந்த் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

Dream Big Entertainments நிறுவனத்தின் சார்பில் நீரஜ் M இந்த ஆல்பத்தினை தயாரித்துள்ளார்.

இப்பாடலை ராக்ஸ்டார் அனிருத் அவர்களும், சூப்பர் சிங்கர் புகழ் ஶ்ரீனிசா ஜெயசீலன் அவர்களும் இணைந்து பாடியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்தாலும் அனிருத் அவர்கள் இளம் திறமையாளர்களின் திறமையை மதித்து மிக எளிமையுடன் அவர்களுக்கு ஆதரவு தந்து இப்பாடலை பாடித் தந்துள்ளார்.

இப்பாடலில் நாயக பாத்திரத்தை ‘குக் வித் கோமாளி’ புகழ் அஷ்வின் நடிக்க, நாயகி பாத்திரத்தை விஜய்சேதுபதியின் ‘கருப்பன்’ பட நாயகி தன்யா ரவிசந்திரன் நடித்துள்ளார்.

சுயாதீன இசையமைப்பாளர் Godson இந்த ஆல்பத்திற்கு இசையமைத்துள்ளார்.

கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்ய, கோகுல் வெங்கட் படத்தொகுப்பு செய்துள்ளார். MGM பாடல் வரிகள் தந்துள்ளார்.

இளம் திறமைகளான அஷ்வின், தன்யா நடிப்பில் வித்தியாசமான வடிவில் அழகான ரொமான்ஸ் பாடலாக அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது Criminal Crush பாடல்.

Vijay Sethupathi film heroine to romance Cooku with Comali fame Ashwin

‘தர்பார்’ & ‘கர்ணன்’ பட ஸ்டைலில் சூர்யாவின் 40வது பட ஸ்டில் வெளியானது

‘தர்பார்’ & ‘கர்ணன்’ பட ஸ்டைலில் சூர்யாவின் 40வது பட ஸ்டில் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya 40 (1)‘சூரரைப் போற்று’ படத்தை முடித்துவிட்டு மணிரத்னம் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்துள்ளார் சூர்யா.

இதனையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க தனது 40-வது படத்தில் ஒப்பந்தமானார் சூர்யா.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார்.

இவர்களுடன் சத்யராஜ், வினய், சரண்யா, இளவரசு, சுபு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடிக்க டி.இமான் இசையமைக்கிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இப்பட படப்பிடிப்பு கடந்த பிப்ரவரியில் தொடங்கிய போது சூர்யா கொரோனா தொற்றினால் வீட்டில் தனிமையில் இருந்தார்.

விரைவில் படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொள்வார் என கூறப்பட்ட நிலையில் இன்று ஏப்ரல் 9 முதல் சூட்டிங்கில் நடித்து வருகிறார்.

அந்த பட ஸ்டில்லை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் கையில் ஒரு வாளோடு நிற்கிறார் சூர்யா.

கடந்த வருடம் ரிலீசான ‘தர்பார்’ படத்தில் ரஜினியும் இன்று ரிலீசாகியுள்ள ‘கர்ணன்’ படத்தில் தனுஷும் இதே போன்று மிகப்பெரிய வாளோடு நிற்கும் காட்சிகள் ஸ்டில்கள் வெளியானது.

தற்போது சூர்யாவும் அதே போல் நிற்கும் பட ஸ்டில் வைரலாகி வருகிறது.

Sun pictures shares shooting spot pic of Suriya 40

More Articles
Follows