தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘வி4 எம்.ஜி.ஆர்., – சிவாஜி 2019’ சினிமா விருது வழங்கும் விழா, சென்னையில் மிக பிரமாண்டமாக நடந்தது.
இதில் திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வழங்கிய கலைஞர்களுக்கும், படங்கள் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மற்றும்
மக்கள் தொடர்பாளர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் அபிராமி திரையரங்க உரிமையாளர் ராமநாதன் அவர்கள் பேசியதாவது…
”ஒரு படம் ரிலீசாகி குறைந்த பட்சம் 3 மாதங்களுக்கு பிறகே இணையத்தளங்களில் தயாரிப்பாளர்கள் வெளியிட வேண்டும்.
ஆனால் 1 மாதத்தில் இணையதள, ‘ஆப்’களில், தயாரிப்பாளர்கள் வெளியிடுகின்றனர்.
இதனால், அதில் பார்த்துக் கொள்ள மக்கள் தீர்மானித்து தியேட்டருக்கு வர மக்கள் விரும்புவதில்லை. தயாரிப்பாளர்கள் இந்த முடிவை
மாற்றிக் கொள்ள வேண்டும்,” என்றார்.
இவருக்கு அடுத்து பேசிய பிரபல தயாரிப்பாளர் தாணு… ”திரையரங்க வசூலில், தயாரிப்பாளர்களுக்கு உரிய பங்கை வழங்கினால், நாங்கள் ஏன், ‘ஆப்’களுக்கு படத்தை விற்கப் போகிறோம்?” எனக் கேள்வி எழுப்பினார்.
இந்த கருத்து மோதல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு முன்பே 30 நாட்களுக்குள், ‘ஆப்’களில் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர்களின் அடுத்தடுத்த படங்களுக்கு, தடை விதிப்போம்’ என, திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.
Cinema Producers and Theater owners clash in V4 Awards event