தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
4 மாதங்களுக்கு பிறகு தற்போது கொரோனா உடன் மக்கள் வாழ தொடங்கியுள்ளனர்.
ஆனால் சினிமா தியேட்டர்களை மட்டும் இன்னும் திறக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் உத்தரவிடவில்லை.
தியேட்டர்கள் சங்கம் உள்ளிட்ட சில சங்கங்கள் தியேட்டர்களைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தன.
பாதுகாப்பு அம்சங்களை கண்டிப்புடன் பின்பற்றுகிறோம் என அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பலத்த கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்களைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
வயதானவர்கள், சிறியவர்களுக்கு அனுமதி கிடையாது, ஒரு இருக்கைக்கும் மற்றொரு இருக்கைக்கும் இடைவெளி, சானிட்டைசர் உள்ளிட்ட வசதிகள் என சில கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்கள் திறக்க வாய்ப்புள்ளது.
அது போல் சினிமா சூட்டிங்குகளுக்கும் கூட ஆகஸ்ட் முதல் அனுமதி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
அதிலும் குழந்தைகள் & வயதான நடிகர்களை அனுமதிக்கத் தடை வரும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் பலத்த பாதுகாப்புடன் ஆகஸ்ட் 1 முதல் தியேட்டர்கள் திறக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சினிமா டிக்கெட்கள் விலை இரண்டு மடங்காக உயர்வு எனவும் தகவல்.
அதுபோல் புதுச்சேரியில் ஆகஸ்ட் 1முதல் பேருந்துகள் இயங்கும் எனவும் தெரிய வந்துள்ளது.