தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் மற்றும் நடிகர் சங்க பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ளார் நடிகர் விஷால்.
தற்போது திடீரென அரசியல் களத்திலும் குதித்துள்ளார்.
மாற்றம் வரவேண்டும் என கூறி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தான் போட்டியிட போவதாக கூறி, இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.
மனுதாக்கல் செய்வதற்கு முன், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சமாதிகளில் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் விஷாலின் இந்த அரசியல் முடிவுக்கு சேரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் தயாரிப்பாளர் சங்க பதவியில் இருந்து விஷால் விலகும் வரை தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இருந்து உள்ளிருப்பு போராட்டம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
இதுபற்றி பத்திரிகையாளர்களை சந்தித்த சேரன் கூறியதாவது…
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒரு நடிகராக விஷால் அரசியல் தேர்தலில் போட்டியிடலாம்.
ஆனால் ஒரு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்துக் கொண்டு அவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது.
நடிகர் சங்கம் அரசாங்கத்தை நம்பியில்லை. ஆனால் தயாரிப்பாளர் சங்கம் தமிழக அரசை நம்பியுள்ளது. அதனை சார்ந்தே சங்கத்தை நடத்த வேண்டியுள்ளது.
தற்போது ஜிஎஸ்டி (உள்ளாட்சி) வரியை குறைத்துள்ளார்கள். அவர் அரசியலில் எதிர்த்தால் அவர்கள் மீண்டும் வரியை உயர்த்துவார்கள்.
இதனால் 1230 தயாரிப்பாளர்களின் வாழ்வதாரம் பாதிக்கப்படும்.
8 ஆண்டுகளுக்கு பிறகு சின்ன பட்ஜெட் படங்களுக்கு மானியம் கொடுக்கப்பட்டது.
விஷாலின் அரசியல் முடிவால் அந்த மானியம் நிறுத்தப்படலாம்.
அவர் தலைவர் பதவியை ராஜினாமாசெய்து விட்டு தேர்தலில் நிற்பதேநல்லது இல்லையெனில் நிறைய “அசோக்குமார்களை” (தற்கொலை செய்துக் கொண்டவர்) சங்கம் சந்திக்கும்.
தலைவர் பதவியை ராஜினாமா செய்யட்டும் அல்லது தேர்தலில் போட்டியிடாமல் இருக்கட்டும். அதன்பின்னர் என்னிடமுள்ள 75 கேள்விகளுக்கு பதில்சொல்லட்டும்.” என்று பேசினார் சேரன்.