தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அந்த சேனலில் இந்துக் கடவுள்களை அவமதித்து வீடியோக்கள் வெளியானது.
முக்கியமாக கந்தர் சஷ்டி கவசம் வீடியோ சர்ச்சையானது.
இது தொடர்பாக இந்து அமைப்பினரும் பாஜகவும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.
இப்புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் வாசன் மற்றும் சுரேந்திரன் என்ற இரண்டு நிர்வாகிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது.
மேலும் கறுப்பர் கூட்டம், யூடியூப் சேனலை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன.
இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை தடை செய்ய யூடியூப் நிர்வாகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பி இருக்கிறார்களாம்.