கபாலிக்கு ஒரு தீர்ப்பு..? சிங்கத்திற்கு வேறு தீர்ப்பா?

கபாலிக்கு ஒரு தீர்ப்பு..? சிங்கத்திற்கு வேறு தீர்ப்பா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali Singamஞானவேல் ராஜா தயாரித்து சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள படம் சி3.

இப்படம் வெளியாகும் பிப். 9ஆம் தேதியன்றே இணையத்தில் வெளியிடுவோம் என தயாரிப்பாளருக்கு பிரபல இணையத்தளம் சவால் விட்டது.

எனவே ‘சி3’ படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதிக்குமாறு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

ஆனால் சில மாதங்களுக்கு ரஜினி நடித்த கபாலி படத்திற்கும் இதுபோல் மனுத்தாக்கல் செய்யப்படவே, கிட்டதட்ட 200 இணையத்தளங்களை முடக்கிட கோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Chennai High Court reject movie piracy case about Singam3 movie filed by Gnanavelraja

200 வெப்சைட் முடக்கம்… கபாலி வழக்கில் தீர்ப்பு..!

கபாலி-தெறி எண்ணிக்கையை நெருங்குமா ‘சிங்கம்-3’?

கபாலி-தெறி எண்ணிக்கையை நெருங்குமா ‘சிங்கம்-3’?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Vijay Suriyaரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் விஜய் நடித்த தெறி ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் தயாரித்தவர் கலைப்புலி எஸ். தாணு.

இந்த இருபடங்களின் மலேசியா வெளியீட்டு உரிமையை மாலிக் என்பவர் பெற்றிருந்தார்.

கபாலி படத்தை 400 தியேட்டர்களிலும், தெறி படத்தை 200 தியேட்டர்களிலும் வெளியிட்டாராம்.

இந்நிலையில் பிப். 9ஆம் தேதி வெளியாகவுள்ள சூர்யாவின் சி3 படத்தையும் இதே நிறுவனம்தான் பெற்றுள்ளதாம்.

இதுவரை 120க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

இன்னும் ஓரிரு நாட்களில் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இருப்பதால், கபாலி-தெறி எண்ணிக்கையை நெருங்குமா? எனப் பார்க்கலாம்.

Will Singam 3 movie beat Kabali and Theri theatre counting

மீண்டும் ரஜினி படத்தலைப்பில் சிவகார்த்திகேயன்

மீண்டும் ரஜினி படத்தலைப்பில் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Sivakarthikeyanதான் ரஜினி ரசிகன் அல்ல. ரஜினி வெறியன் என்பதை கர்வத்துடன் கூறி வருபவர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிக்கும் படங்களில் அவ்வப்போது ரஜினியின் பன்ச் டயலாக்கை பயன்படுத்துவார்.

மேலும் தன் படத்திற்கு ரஜினிமுருகன் என்றும் பெயரிட்டு இருந்தார்.

தற்போது மோகன்ராஜா இயக்கும் படத்தில் நயன்தாரா, ஸ்நேகா, பஹத் பாசில், பிரகாஷ் ஆகியோருடன் நடித்து வருகிறார்.

இது உயிர் காக்கும் மருந்துவத்தின் பெயரில் நடக்கும் அரசியலை மையப்படுத்தி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு ரஜினியின் சூப்பர் ஹிட் படமான வேலைக்காரன் என்று தலைப்பிடப்படவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Mohan Raja and Sivakarthikeyan project got Rajini movie title

விஜய் ரசிகர்களை ஒரே நேரத்தில் தாக்கிய இன்ப-துன்ப செய்திகள்

விஜய் ரசிகர்களை ஒரே நேரத்தில் தாக்கிய இன்ப-துன்ப செய்திகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijayவிஜய் நடிப்பில் உருவான பைரவா படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியானது.

இப்படம் 25 நாட்களை கடந்துள்ள நிலையில், இன்றும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

எனவே இப்படக்குழுவினர் வெற்றிவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

இதனையறிந்த விஜய் ரசிகர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.

இதனை கொண்டாடி வரும் வேளையில் அட்லி இயக்கும் விஜய்யின் அடுத்த படத்தில் இருந்து ஜோதிகா விலகிவிட்டதாக செய்திகள் வந்தன.

திருமலை, குஷி உள்ளிட்ட படங்களில் நடித்த ராசியான ஜோடியை மீண்டும் திரையில் காணவிருந்த ரசிகர்களுக்கு இச்செய்தி வருத்தத்தை அளித்துள்ளது.

Happy and sad news at same time for Vijay fans

விஜய் படத்திலிருந்து ஜோதிகா விலக யார் காரணம்?

விஜய் படத்திலிருந்து ஜோதிகா விலக யார் காரணம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Jyothikaதெறி மற்றும் பைரவா படத்தை தொடர்ந்து மீண்டும் அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய்.

இவருடன் ஜோதிகா, சமந்தா, காஜல், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது என்பதை பார்த்தோம்.

இப்டத்தின் சூட்டிங்கை தொடங்கிய நிலையில் திடீரென ஜோதிகா விலகிவிட்டார்.

இதற்கு அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் காரணமாக இருக்கலாம் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Jyothika is out of Vijay Atlee Project

‘சினிமா ஸ்டார் என்பதில் எனக்கு பெருமையில்லை…’ – ரஜினி ஓபன் டாக்

‘சினிமா ஸ்டார் என்பதில் எனக்கு பெருமையில்லை…’ – ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthநடிகர் ரஜினிகாந்த் சினிமாவை விட அதிகம் நேசிப்பது ஆன்மிகத்தைதான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் தெய்வீக காதல் என்னும் ஆன்மீக புத்தகத்தை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார்.

அப்போது அவர் பேசும்போது…

நான் ஒரு சினிமா நட்சத்திரம். ஆனால் ஸ்டார் என்று சொல்லிக்கொள்வதை விட, நான் ஒரு ஆன்மிகவாதி என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

பணம், பேர், புகழ் என ஒரு பக்கம் வைத்து மற்றொரு பக்கம் ஆன்மிகத்தை வைத்தால் நான் ஆன்மிகம் பக்கம்தான் போவேன்.

ஆன்மிகத்திற்கு அவ்வளவு பவர் இருக்கு. அதனால்தான் அந்த பவரை நான் விரும்புகிறேன்.

ஒரு விருந்தாளி நம் வீட்டிற்கு வருகிறார் என்றால் நாம் வீட்டை சுத்தப்படுத்தி ஒழுங்குபடுத்துவோம்.

அதுபோல் கடவுள் என்கிற விருந்தாளி வர நம் மனதை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.” என்று பேசினார் சூப்பர் ஸ்டார்.

I am not proud to say that i am an actor says Rajinikanth

More Articles
Follows