தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனோ வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழக அளவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் சென்னையில் கொரோனா பாதிப்புகள் தினம் தினம் அதிகரித்து வருகிறது.
சென்னையில் மக்கள் தொகை அதிகளவில் இருப்பதால் கட்டுக்குள் கொண்டு வருவது சிரமமாக உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் தெரிவித்திருந்தார்.
இன்று ஏப்ரல் 30ஆம் தேதி சென்னை கோயம்பேடு பூக்கடையில் வேலை செய்யும் 36, 71,19 வயதுடைய 3 ஆண்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே பூக்கடைக்காரர் மகனுக்கு தொற்று உறுதியாகியிருந்தது.
இதனால் பூக்கடைகளில் மட்டும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், அண்ணா பழக்கடையில் 36,42,29 வயதுடைய 3 ஆண்களுக்கும், பெரியார் பழக்கடையில் 30, 29 வயதுடைய 2 ஆண்களுக்கும் தொற்று உறுதியானது.
எனவே, கோயம்பேட்டில் கடைகளில் பணியிலிருந்த 9 பேருக்கு இன்று தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளை கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மே 2 முதல் கொரோனா தடுப்பு பணிகளுக்கு பள்ளிகளை பயன்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
Chennai Corporation decides to Change Chennai schools as Corona wards