தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் இசையமைத்த டாக்டர் படத்தின் ‘செல்லம்மா’ என்ற பாடல் அண்மையில் வெளியானது.
இந்த படத்தை நெல்சன் என்பவர் இயக்கியுள்ளார்.
செல்லம்மா என்ற இந்த பாடலும் இது உருவாக்கப்பட்ட விதமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த நிலையில் கவிஞர் கண்ணதாசனின் பேரனும் நடிகருமான ஆதவ் கண்ணதாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சிவகார்த்திகேயன் கவிஞரே பயங்கர ஃபார்முல இருக்கீங்க போல, செம கேட்சி சாங் அனிருத். அராஜகம் பண்றிங்க நெல்சன்” என்று வாழ்த்தி பதிவிட்டார்
இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “தயவு செய்து என்னை கவிஞர் என்றெல்லாம் சொல்லாதீர்கள். தாத்தா கனவில் வந்து உங்களை அடிப்பார்” என பதிவிட்டுள்ளார்.
Chellama song from Sivakarthikeyans Doctor goes viral