தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2002-ஆம் வெளியாகி வெற்றிப் பெற்ற திரைப்படமான ‘சார்லி சாப்ளின்’ படத்தின் 2ஆம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பாக டி.சிவா தயாரித்து வருகிறார்.
இதில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அதா சர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.
அம்ரிஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு செளந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்.
பிரபல நடிகரும், நகைக்சுவை எழுத்தாளருமான கிரேசி மோகன் இப்படத்திற்கான திரைக்கதை எழுதியிருக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறியுள்ளதாவது…
பிரபு தேவா, நிக்கி கல்ராணி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்காக பிரபுதேவா குடும்பமும், நிக்கி கல்ராணி குடும்பமும் திருப்பதிக்கு போகும் போதும், அங்கு போய் சேர்ந்த பிறகு நடக்கும் சம்பவங்களின் கலகலப்பான தொகுப்பே `சார்லி சாப்ளின்-2′.
திருப்பதிக்கு போனா திருப்பம் வரும் என்பார்கள். அது என்ன திருப்பம் என்பது படத்தின் சஸ்பென்ஸ் என்கிறார் இயக்குனர்.
உலக காமெடி மேதையான சார்லி சாப்ளினின் 125-வது பிறந்தநாள் விழா இந்த வருடம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த படம் உருவாகுவது அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கும் என்று தயாரிப்பாளா் டி.சிவா கூறினார்.
இப்பட படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது.