தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும் என தமிழக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நான்கு நாட்களாக இப்போராட்டம் வரலாறு காணாத வகையில் உருவாகி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு இளைஞர்களின் போராட்டங்களுக்கு அடிப்பணிந்து அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
சட்டம், சுற்றுக்சுழல் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த ஒப்புதலை அளித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க கவர்னர் நாளை தமிழகம் வருகிறார்.
தமிழக அரசு அனுப்பியுள்ள அவசரச் சட்டத்துக்கான வரைவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
வரைவானது தற்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
எனவே ஓரிரு தினங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இது நிரந்தரமான சட்டமா? என்பதுதான் தெரியவில்லை.
Central Govt clears TN Govt ordinace for Jallikattu