தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புதுடெல்லியில் கடந்த 80 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று போலீஸ் தடியடியுடன் கலவரமாக மாறியது.
இந்திய தேசிய கொடி பறந்த செங்கோட்டையில் அன்றைய தினம் சீக்கிய கொடியையும் பறக்க விட்டனர் விவசாயிகளில் சிலர்.
இன்று வரை தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்க பாப் பாடகி ரிஹானா என்பவர் “நாம் ஏன் விவசாயிகள் போராட்டம் பற்றி பேசுவதில்லை?” என டுவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அவரை தொடர்ந்து, சுவீடனை சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தம்பர்க் என்பவரும், இந்தியாவில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்” என தெரிவித்தார்.
இது தொடர்பாக, வெளிநாட்டினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“விஷயம் தெரியாமல் பேச வேண்டாம். கிளர்ச்சியை தூண்டும் வகையில் செயல்பட வேண்டாம்” என மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நம் நாட்டு விவகாரத்தில் தலையிட்டு கருத்து பதிவிட்ட பிரபலங்களுக்கு சச்சின் டெண்டுல்கர், நடிகர் அக்ஷய்குமார், நடிகை கங்கனா ரணாவத், டாப்சி உள்ளிட்டோர் தங்களது எதிர்ப்பை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Central Government launches India against Propaganda