தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் பிரதமர் மோடி மௌனம் காப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
மேலும் தன்னுடைய ஆதரவாளர்களின் செயலை மோடி ஆதரிக்கிறாரா என கேள்வி எழுப்பினார்.
அதிலும் நரேந்திர மோடி தன்னைவிட சிறந்த நடிகர் என தெரிவித்தார்.
மேலும், தான் பெற்ற தேசிய விருதுகளைத் திரும்ப அளிப்பேன் என பிரகாஷ்ராஜ் கூறியதாக செய்திகள் வெளியானது.
ஆனால் தேசியவிருதை திரும்ப அளிக்க நான் ஒன்றும் முட்டாள் இல்லை. அது என் திறமைக்கு கிடைத்த விருது. திருப்பியளிப்பேன் என கூறவில்லை என மற்றொரு பேட்டியில் தெரிவித்தார்.
நான் எந்தவொரு கட்சியிலும் இல்லை. நாட்டின் குடிமகன் என்கிற முறையில் பிரதமரிடம் கேள்வி கேட்டேன் என்றார்.
இந்தக் கருத்துகள் மூலம் பிரதமருக்கு எதிராக பிரகாஷ்ராஜ் பேசியதாகக் கூறி வழக்கறிஞர் ஒருவர் லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு, அக்டோபர் 7ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
Case filed against PrakashRaj over his criticism of PM Modi