நிற்க முடியாமல் பேச முடியாமல் விஜயகாந்த் பிரச்சாரம்..; தேம்பி அழும் தேமுதிக தொண்டர்கள்

நிற்க முடியாமல் பேச முடியாமல் விஜயகாந்த் பிரச்சாரம்..; தேம்பி அழும் தேமுதிக தொண்டர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக சார்பாக போட்டியிடுகிறார் பிரேமலதா விஜயகாந்த்.

இவர் மற்ற தொகுதிகளுக்கு செல்லாமல் இங்கேயே தங்கி பிரசாரம் செய்து வருகிறார்.

இவரது தம்பி சுதீஷ்க்கு கொரோனா தொற்று உள்ளதால் அவராலும் பிரச்சாரம் செய்ய தொகுதிக்கு செல்ல முடியவில்லை்.

எனவே பிரச்சாரத்திற்கு வலு சேர்க்க தேமுதிக தலைவர் விஜயகாந்தை அழைத்து வந்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி தொகுதியில், அவரை திறந்த வேனில் நிற்க வைத்திருந்தனர்.

ஏற்கெனவே உடல்நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அவரால் வெகு நேரம் நிற்க முடியவில்லை.

மேலும் அவரால் பேசவும் முடியவில்லை என்பதால் கம்பியை பிடித்துக் கொண்டார்.

இதனைப் பார்த்த தேமுதிக தொண்டர்கள் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டனர்.

ஒரு காலத்தில் நடிகர் சிவாஜிக்கு பிறகு பக்கம் பக்கமாக வீர வசனங்களை சினிமாவில் பேசியவர் கேப்டன்.

சுவற்றில் பாய்ந்து அடித்து உதைத்து ஆக்சனிலும் அசத்தியவர்.

அந்த கம்பீரமானவரை பார்த்து ரசித்த ரசிகர்கள் இன்று அவரின் நிலையறிந்து எதுவும் செய்ய முடியாமல் கண்ணீர் விடுகின்றனர்.

Captain Vijayakanth health issue during Election Campaign 2021

10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூர்யா-முருகதாஸ் கூட்டணி..?

10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூர்யா-முருகதாஸ் கூட்டணி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாண்டிராஜ் இயக்கத்தி்ல் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ ஆகிய படங்களில் நடிக்கப் போகிறார் சூர்யா.

இந்த படங்களை முடித்து விட்டு முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிப்பார் என தகவல்கள் வருகின்றன.

ஏ.ஆர்.முருகதாஸ் – சூர்யா கூட்டணியில் ஏற்கெனவே வெளியான ‘கஜினி, ஏழாம் அறிவு’ ஆகிய படங்கள் இருவருக்குமே நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

10 வருடங்களுக்கு முன் அமைந்த கூட்டணி மீண்டும் அமையாதா? என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் விஜய் 65வது படத்திலிருந்து முருகதாஸ் விலகிவிட்டதால் டாப் ஹீரோவுடன் இணைய காத்திருக்கிறாராம் முருகதாஸ்.

எனவே தான் சூர்யா படத்தை இயக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

After 10 years Suriya and Murugadoss again joins hands together

பெப்சி தொழிலாளர்களுக்காக ரூ 1500 மதிப்புள்ள கூப்பன்களை 5 மாதம் வழங்கும் ‘நவரசா’ படக்குழு

பெப்சி தொழிலாளர்களுக்காக ரூ 1500 மதிப்புள்ள கூப்பன்களை 5 மாதம் வழங்கும் ‘நவரசா’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம், ஜெயேந்திரா தயாரிப்பில்‘நவராசா’ என்ற ஆந்தாலஜி படம் உருவாகி வருவதை நாம் ஏற்கெனவே தெரிவித்து இருந்தோம்.

இதில் சூர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நடிகர்களும் ஐஸ்வர்யா ராஜேஷ், ரேவதி, பூர்ணா, ரித்விகா, நித்யா மேனன் உள்ளிட்ட நடிகைகளும் நடித்து வருகின்றனர்.

கே.வி.ஆனந்த், கவுதம் மேனன், கார்த்திக் நரேன், பொன்ராம், ஹலிதா சமீம், அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார் உள்ளிட்ட 9 இயக்குநர்களின் இயக்கத்தில் இந்த ஆந்தாலஜி உருவாகுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான், ஜிப்ரான், இமான், கோவிந்த் வசந்தா, ஜஸ்டின் பிரபாகரன், அருள்தேவ், கார்த்திக், ஆகியோர் இசையமைப்பாளர்களாக பணிபுரிகின்றனர்.

ஒளிப்பதிவாளர்களாக சந்தோஷ் சிவன், பாலசுப்பிரமணியன், மனோஜ் பரஹம்சா, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா உள்ளிட்டோர் பணியாற்றுகிறார்கள்.

இதிலிருந்து இயக்குநர் கே.வி.ஆனந்த் விலகியதால் இயக்குநர் வசந்த் இணைந்திருக்கிறார்.

வசந்த் இயக்கத்தில் அதிதி பாலன் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

இந்த கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பெப்சி தொழிலாளர்களுக்கு நிதி அளிக்கும் வகையில் ரூ 1500 மதிப்புள்ள கூப்பன்கள் வழங்கப்படவுள்ளது.

இதனை வைத்து வீட்டிற்கு தேவையான 5 மாதங்களுக்கான (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை அவர்கள் வாங்கி கொள்ளலாம் என தெரிய வந்துள்ளது.

Navarasa teams great gesture to FEFSI Union

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ரித்திகா சிங்..; இயக்குனர் இவரா?

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ரித்திகா சிங்..; இயக்குனர் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓடிடி தளத்திற்காக உருவாகும் ஒரு படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்து வருகிறார்.

பாலியல் தொழிலாளியாக பூஜா நடித்த படம் ‘விடியும் முன்’. அந்த படத்தை இயக்கிய பாலாஜி குமார் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இதன் சூட்டிங் சென்னையை சுற்றி நடக்கிறதாம்.

ஒரே மாதத்தில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்குக்கு முன்பே இப்படி குறித்த தகவல்கள் வந்தன.

அக்னி சிறகுகள், காக்கி, கோடியில் ஒருவன் மற்றும் பிச்சைக்காரன் 2 ஆகிய படங்களில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.

பிச்சைக்காரன் 2 மற்றும் கோடியில் ஒருவன் ஆகிய 2 படங்களையும் ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார்.

Vijay Antony and Ritika Singh teams up for OTT

எலெக்சன் நேரத்திலும் பட்டைய கிளப்பும் ‘சுல்தான்’ ட்ரைலர்..; சென்சார் அப்டேட் இதோ..

எலெக்சன் நேரத்திலும் பட்டைய கிளப்பும் ‘சுல்தான்’ ட்ரைலர்..; சென்சார் அப்டேட் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா, நெப்போலியன், லால், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள படம் சுல்தான்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அமைத்துள்ளார்.

ஆனால், பாடல்களுக்கு விவேக் மெர்வினும் இசையமைத்துள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் பிரகாஷ் & எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இதன் டிரைலர் & பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்பு உள்ளதால் தேர்தல் பிரச்சார நெருக்கடிகளையும் பொருட்படுத்தாமல் தியேட்டர்களில் இப்படத்தை ஏப்ரல் 2-ந்தேதி வெளியிடுகின்றனர்.

இந்த நிலையில் ‘சுல்தான்’ படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

இந்த தகவலை பட நிறுவனம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

Sulthan movie release and Censor updates

தனுஷ் பாடலை போட்டு சிம்பு மாநாட்டுக்கு மோடியை அழைத்த புரொடியூசர்

தனுஷ் பாடலை போட்டு சிம்பு மாநாட்டுக்கு மோடியை அழைத்த புரொடியூசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், கல்யாணி, எஸ்ஜே சூர்யா, எஸ்ஏசி, பிரேம்ஜி உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘மாநாடு’.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

அரசியல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது சிம்புவின் ‘மாநாடு’.

தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார்கள்.

சென்னை பூந்தமல்லி அருகே ஒரு பிரம்மாண்டமான மாநாடு அரங்கம் ஒன்றை கடந்த 10 நாட்களாக அமைத்து வந்தனர்.

இங்கு தான் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட உள்ளதாம்.

இந்த நிலையில் ட்விட்டரில் RJ Rofina என்பவர் “அமெரிக்க அதிபர் ஜோ-பிடன் பருவகாலநிலை உச்சி மாநாட்டிற்கு இந்திய பிரதமர் உட்பட 40 தலைவர்களுக்கு அழைப்பு!” என்ற செய்தியை பதிவிட்டு இருந்தார்.

இந்த செய்தியை டேக் செய்த ‘மாநாடு’ தயாரிப்பாளர்…

*@SilambarasanTR_ மாநாடு க்கு வரசொல்லுங்க ….* என மோடியை அழைப்பது போல் பதிவிட்டு இருந்தார்.

தனுஷ் நடிப்பில் ரிலீசாகவுள்ள ‘கர்ணன்’ படத்தில்… கர்ணனை கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல் பெரும் ஹிட்டடித்து வருகிறது.

அதே பாணியில் சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Simbu movie Producer invites PM Modi for Maanadu

More Articles
Follows