தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக சார்பாக போட்டியிடுகிறார் பிரேமலதா விஜயகாந்த்.
இவர் மற்ற தொகுதிகளுக்கு செல்லாமல் இங்கேயே தங்கி பிரசாரம் செய்து வருகிறார்.
இவரது தம்பி சுதீஷ்க்கு கொரோனா தொற்று உள்ளதால் அவராலும் பிரச்சாரம் செய்ய தொகுதிக்கு செல்ல முடியவில்லை்.
எனவே பிரச்சாரத்திற்கு வலு சேர்க்க தேமுதிக தலைவர் விஜயகாந்தை அழைத்து வந்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி தொகுதியில், அவரை திறந்த வேனில் நிற்க வைத்திருந்தனர்.
ஏற்கெனவே உடல்நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அவரால் வெகு நேரம் நிற்க முடியவில்லை.
மேலும் அவரால் பேசவும் முடியவில்லை என்பதால் கம்பியை பிடித்துக் கொண்டார்.
இதனைப் பார்த்த தேமுதிக தொண்டர்கள் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டனர்.
ஒரு காலத்தில் நடிகர் சிவாஜிக்கு பிறகு பக்கம் பக்கமாக வீர வசனங்களை சினிமாவில் பேசியவர் கேப்டன்.
சுவற்றில் பாய்ந்து அடித்து உதைத்து ஆக்சனிலும் அசத்தியவர்.
அந்த கம்பீரமானவரை பார்த்து ரசித்த ரசிகர்கள் இன்று அவரின் நிலையறிந்து எதுவும் செய்ய முடியாமல் கண்ணீர் விடுகின்றனர்.
Captain Vijayakanth health issue during Election Campaign 2021