சன்னி லியோனுடன் செல்ஃபி; இணையத்தை அதிரவைக்கும் ரசிகர்கள்

சன்னி லியோனுடன் செல்ஃபி; இணையத்தை அதிரவைக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sunny leone in tamilகவர்ச்சி வேடங்களில் நடித்து வந்த சன்னி லியோன் முதன் முறையாக வரலாற்று பின்னணி கொண்ட, தென்னிந்திய மொழிகளில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே ரசிகர்கள் மத்தியிலும், திரைத்துறையினர் மத்திலும் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த படத்தின் தலைப்பை யூகித்து சரியாக சொல்லும் ரசிகர்கள் பட பூஜை அன்று சன்னி லியோனுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம் என்ற செய்தியும் இணையதளங்களில் பரவி மிகுந்த பரபரப்பை உண்டு பண்ணியது.

இதனை தொடர்ந்து Sunny Leone in South என்ற ஹேஷ்டேக் நேற்று இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. லட்சக்கணக்கான ரசிகர்கள் தலைப்பை யூகித்து சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

வேலைக்காரன் மாபெரும் வெற்றியால் மோகன்ராஜா மகிழ்ச்சி

வேலைக்காரன் மாபெரும் வெற்றியால் மோகன்ராஜா மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and mohan rajaசிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று ரிலீசான படம் ‘வேலைக்காரன்’. இப்படம் திரை இடப்பட்ட எல்லா இடங்களிலும் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது.

ரிலீசான முதல் நான்கு நாட்களில், சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களில் வசூலை இந்தப்படம் முறியடித்துள்ளது. இந்த செய்தி வணிக தரப்பினராலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாபெரும் வெற்றியை சுவைத்துக்கொண்டிருக்கும் இயக்குனர் மோகன் ராஜா கூறும்போது, ”நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய ஆதரவும் வரவேற்பும் ‘வேலைக்காரன்’ படத்திற்கு கிடைத்துள்ளது.

கர்நாடகாவில் சிவகார்த்திகேயன் படங்களிலேயே இந்த படத்திற்கு தான் மிகப்பெரிய வசூல் கிடைத்துள்ளது. படத்தின் அமோக வரவேற்பினால் இப்படத்திற்கு கேரளாவில் முப்பது ஸ்க்ரீன்கள் கூடுதலாக தரப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலும் ‘வேலைக்காரன்’ படத்திற்கு பேராதரவு கிடைத்து வணிக அளவில் மிக பலமாக வலம் வந்துக் கொண்டு இருக்கிறது.

சமுதாய அக்கறை கொண்ட நல்ல படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள் என்பது மறுபடியும் இப்படம் மூலம் நிரூபணமாகியுள்ளது.

குடும்பங்களோடு திரையரங்கத்திற்கு மக்கள் வந்து இப்படத்தை ரசிப்பது எங்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சமுதாய அக்கறை உள்ள கதையை ஜனரஞ்சகமான முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்ந்ததில் எனக்கு பெரும் திருப்தி’ என்றார்.

ரஜினியிடம் வியூகம் உள்ளது; ரசிகர்களிடம் வீரம் உள்ளது : ஜீவா

ரஜினியிடம் வியூகம் உள்ளது; ரசிகர்களிடம் வீரம் உள்ளது : ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lollu sabha jeeva and rajinikanthவருகிற டிசம்பர் 31ஆம் தேதி தன் அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என ரஜினிகாந்த் இன்றைய ரசிகர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அரசியல் என்ற யுத்த களத்திற்கு வருவதற்கு வீரத்தை விட வியூகம் முக்கியம். அப்போதுதான் களத்தில் ஜெயிக்க முடியும் என்று பேசினார்.

இதுகுறித்து ரஜினியின் தீவிர ரசிகரான லொள்ளு சபா ஜீவா கூறியதாவது…

ரஜினி ரசிகர்களிடம் வீரம் உள்ளது. தலைவர் ரஜினியிடம் வியூகம் உள்ளது.

தூய்மையான அரசியலே ரஜினியின் நிலைப்பாடு, அதற்காகவே அவர் காலம் தாழ்த்தி வந்தார். விரைவில் அரசியல் களம் வருவார்” என்றார் ஜீவா

டிச-31ல் ஹாப்பி நியூ இயர் வாழ்த்து சொல்வார் ரஜினி.. : எஸ்வி.சேகர்

டிச-31ல் ஹாப்பி நியூ இயர் வாழ்த்து சொல்வார் ரஜினி.. : எஸ்வி.சேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and SVE Shekherவருகிற டிசம்பர் 31ஆம் தேதி தன் அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என ரஜினிகாந்த் இன்றைய ரசிகர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

கடந்த 20 வருட காலமாக அலசி ஆராயப்பட்ட ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு அன்றைய தினம் ஒரு முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரஜினியின் பேச்சு குறித்து நடிகரும் ரஜினியின் நண்பருமான எஸ்வி. சேகர் கூறியுள்ளதாவது…

கரைக்கு வரும் அலை பின்பு திரும்பி போய்விடும். புலி வருது புலி வருது கதையாக ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பேசுகிறோம்.

வருவதாக சொல்லிவிட்டு ஒருவேளை அவர் வராமல் போய்விட்டால், அவருடை இமேஜ் கடுமையாக பாதிக்கப்படும்.

டிசம்பர் 31ல் ரஜினி ஹாப்பி நியூ இயர் வாழ்த்து நிச்சயம் சொல்வார்.

அவர் அரசியலுக்கு வருவாரா? என்பது உலகத்தின் மிகப்பெரிய சூதாட்ட கேள்வியாக உள்ளது.”என்று தெரிவித்தார் எஸ்.வி.சேகர்.

காலா உடன் வடசென்னையை கனெக்ட் செய்த தனுஷ்

காலா உடன் வடசென்னையை கனெக்ட் செய்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush connected with VadaChennai with Kaala movie setரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கி வரும் காலா படத்தை தனுஷ் தயாரித்து வருகிறார்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இப்படத்திற்காக ஒரு சேரி பகுதியை போன்று செட் போட்டு சில காட்சிகளை உருவாக்கியிருந்தனர்.

அந்த செட்டை சில மாறுதல்கள் செய்து, வடசென்னை படத்துக்கு பயன்படுத்தும் நோக்கத்தில் இருக்கிறாராம் தனுஷ்.

வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்தையும் தனுஷ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Dhanush connected with VadaChennai with Kaala movie set

முதன்முறையாக பேய்க்கு ப்ளாஸ்பேக் இல்லாத படம் ஆறாம் திணை

முதன்முறையாக பேய்க்கு ப்ளாஸ்பேக் இல்லாத படம் ஆறாம் திணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

First time Ghost movie without Flashback Aaram ThinaiMRKVS சினி மீடியா சார்பாக ஆர். முத்துக்கிருஷ்ணன் மற்றும் எம். வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. அருண்.சி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார்.

முக்கியமான கதாபாத்திரங்களில் மொட்ட ராஜேந்திரன், ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர்.

மலையும் மலை சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும் என இலக்கியங்களில் ஐந்திணைகள் பற்றி சொல்லப்படுவது உண்டு. ஆனால் ‘பேயும் பேய்சார்ந்த இடமும்’ ஆக இந்த ‘ஆறாம் திணை’ உருவாகியுள்ளது.

பொதுவாக பேய்ப்படங்களில் முக்கியமான அம்சமே பேய்களுக்கென இடம்பெறும் பிளாஸ்பேக் தான். ஆனால் அந்த மரபை உடைத்து, ஒவ்வொரு காரியங்களுக்கான காரணங்களையும் படம் பார்க்கும் பார்வையாளர்கள் தாங்களாகவே உணர்ந்து கொள்ளும் விதமாக புதிய பாணியில் திரைக்கதை வடிவமைக்கப்படுள்ளது.

இது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.

எப்போதும் பாசிடிவான எண்ணங்கள் தான் நல்ல விளைவுகளை கொடுக்கும் என்கிற கருத்தை முன்னிறுத்தி இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பேயை தாறுமாறாக விரட்டி விரட்டி காதலிக்கும் மொட்ட ராஜேந்திரனின் கதாபாத்திரம் புதியதாகவும் கலகலப்புக்கு உத்தரவாதம் தருவதாகவும் இருக்கும் அதுமட்டுமல்ல நடிகர் ரவிமரியாவுக்கும் இது பேர்சொல்லும் படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் அருண்.சி.

மொட்ட ராஜேந்திரனுடன் விஜய் டிவி கலக்கப்போவது யாரு டைட்டில் வின்னர் குரேஷியும் காமெடியில் கலக்கியுள்ளார்.

இப்படத்திற்கு ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் கே.சோழன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு – திருமலை.

கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பகுதியில் கடும் மழையில் கூட இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை டிச-27ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

First time Ghost movie without Flashback Aaram Thinai

More Articles
Follows