கேஃபினோ சார்பாக விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கிய நாசர்

கேஃபினோ சார்பாக விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கிய நாசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cine celebrities at CAFINO The Game Yardநண்பர்களுடன் சேர்ந்து சிறப்பான பொழுதுபோக்கு, விளையாட்டுகளுடன் கூடிய உணவகம் அல்லது காபி ஷாப் போகவேண்டும் என்று விரும்பினால், உங்களது தேர்வு நிச்சயம் சாலிகிராமத்தில் உள்ள ‘கேஃபினோ’வாகத் தான் இருக்கமுடியும்.

சென்னை சாலிகிராமத்தில் ‘கேஃபினோ’ தி கேம் யார்டு’ என்கிற பொழுதுபோக்கு மையம் கடந்த மாதம் துவங்கப்பட்டது.. இதனை இயக்குநர் மீரா கதிரவன், நடிகர் அபி சரவணன், நடிகை அதிதி ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர்.

அந்த சமயத்தில் நடிகர் அபிசரவணன் விவசாயிகளுக்கான போராட்டங்களில் முன்னின்று பங்கேற்று வந்தார். அவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் மூலமாக சிறுசிறு உதவிகளையும் செய்து கொடுத்து வந்தார்.

அதனால் இந்த ‘கேஃபினோ’ திறப்பு விழா நிகழ்விலும் விவசாயிகள் பற்றி பேசிய அபிசரவணன், இந்த ‘கேஃபினோ’வின் ஒரு மாத லாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை விவசாயிகளுக்கு அளித்தால் நன்றாக இருக்கும் என ஒரு கோரிக்கையையும் பேச்சுவாக்கில் வைத்துவிட்டு சென்றார்.

ஆனால் ‘கேஃபினோ’ தி கேம் யார்டு’ உரிமையாளர்களோ அபிசரவணனின் இந்த கோரிக்கையை சீரியஸாகவே எடுத்துக்கொண்டார்கள்.

இந்த ‘கேஃபினோ’ தி கேம் யார்டு’ மையம் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் முடிந்தநிலையில் இந்த ஒரு மாதத்தில் வந்த லாபத்தை மட்டுமல்ல, ஒருமாத மொத்த வருமானமான ரூ.58 ஆயிரத்தையும் டில்லியில் போராடிய விவசாயிகளுக்கு வழங்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.

நேற்று மாலை இந்த தொகையை விவசாயிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர்சங்க தலைவர் நாசர் கலந்துகொண்டு ‘கேஃபினோ’ தி கேம் யார்டு’ சார்பாக அந்த உதவித்தொகைக்கான காசோலையை டில்லி போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளின் பிரதிநிதிகளிடம் வழங்கினார்.

விழாவில் பேசிய அபிசரவணன், “நான் பெரிய நடிகர் எல்லாம் இல்லை.. விவசாயிகள் டெல்லியில் போராடியதை ஒரு வீடியோவில் பார்த்துதான் நானும் டெல்லிக்கு கிளம்பினேன்.

நான் நடிகர்சங்கத்தின் உறுப்பினர் என்பதால் இங்கிருந்து கிளம்பியது முதல் அங்கே நடக்கும் நிகழ்வுகளை அவ்வப்போது நடிகர்சங்க செயலாளர் விஷால் சாரிடம் தெரிவித்தவாறே இருந்தேன்.

விஷால், பிரகாஷ்ராஜ் சார் அவர்கள் டெல்லி வந்ததும் தான் விவசாயிகளின் போராட்டத்துக்கே மீடியா வெளிச்சம் கிடைத்தது:” என கூறினார்.

அடுத்ததாக பேசிய நாசர், “அபிசரவணன் விவசாயிகளுக்கு உதவும் ஒரு நல்ல முயற்சியை மேற்கொண்டதாலேயே, வரலாற்றில் உனக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு.

இது ஒரு நல்ல நிகழ்வு.. பணம் பொருள் கொடுத்து உதவிசெய்ய முடிந்தவர்கள் ஒருபக்கம் செய்யட்டும்.. ஆனால் ஓவ்வொரு கிராமத்திலும் சிறு நகரத்திலும் உள்ள குளம், குட்டைகளை தூர்வாரி, ஏரிகளை சுத்தமாக்கி மழைபெய்யும் சமயங்களில் அவற்றில் நீர் தேங்க அங்கிருக்கும் இளைஞர்களும் தன்னார்வலர்களும் உதவினாலே அது விவசாயிகளுக்கு நாம் செய்யும் பேருதவியாக இருக்கும்.. அவர்களுக்கு தேவையானதும் அவர்களது முக்கிய பிரச்சனையும் நீர் தான்” என பேசினார்.

இந்த நிகழ்வில் நடிகைகள் அதிதி, அதுல்யா, மீரா மிதுன், நடிகர்கள் சௌந்தர்ராஜா, ஹரீஷ், நாசரின் மகன் லுத்புதீன், இசையமைப்பாளர் சாம் டி.ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு உதவும் விதமான இதுபோன்ற விஷயங்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார்கள்.

விழாவில் கலந்துகொண்ட விவசாய சங்க பிரதிநிதிகள் நாசருக்கும் நடிகர்சங்கத்திற்கும் இந்த தொகையை வழங்கிய கேபினோ மையத்திற்கும் இதற்கான முயற்சியை செய்த அனைவருக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.

CAFINO The Game Yard donates its one months revenue to farmers

farmers abi saravanan

ரயிலில் கேட்ட ஆச்சரிய கதையை படமாக இயக்கிய விஜய் கே.மோகன்

ரயிலில் கேட்ட ஆச்சரிய கதையை படமாக இயக்கிய விஜய் கே.மோகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Imai movie stills (12)மலையாளத்தில் ‘நளசரிதம் நாலாம் திவசம்’,’வேனல் மரம் ‘என இரு வெற்றிப் படங்களை இயக்கியவர் விஜய் கே.மோகன்.

தற்போது இமை என்ற படத்தின் முமூலம் தமிழுக்கு வருகிறார்.இவர் ஏற்கெனவே

இப்படத்தை ஜே அண்ட் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹார்பிக் வி. டோரி தயாரித்துள்ளார்.

நாயகனாக சரிஷ் நடிக்க, நாயகியாக அட்சய பிரியா நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே தமிழில் நடித்து இரண்டு படங்கள் வெளியாகவுள்ளன.

பிரகாஷ் ராஜின் மைத்துனரும் டிஸ்கோ சாந்தியின் சகோதரருமான அருண் திருமொழி வர்மன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் விஜய் கே. மோகன் தான் இயக்கும் முதல் படம் பற்றிப் பேசும்போது…

“திறமைகளுக்கும் புதுமைகளுக்கும் என்றும் தமிழில் வரவேற்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.

அந்தத் தைரியத்தில் தான் தமிழில் படம் இயக்கியுள்ளேன் ” என்கிறார் இயக்குநர்.

” ஒரு நாள் ரயிலில் கேட்ட ஒருவரது ஆச்சரியமான உண்மைக்கதையையே ‘இமை’ படமாக உருவாக்கியிருக்கிறேன்.” என்கிறார்.

சென்னை, பாண்டிச்சேரி, பொள்ளாச்சி, ஊட்டி, கேரளாவிலுள்ள கோவிந்தபுரம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

ஐம்பது நாட்களில் பம்பரமாகச் சுழன்று படத்தை முடித்திருக்கிறது படக்குழு.

நல்லதொரு விஷூவல் ட்ரீட்டாக இருக்கும் படி ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் வி.கே.பிரதீப். இவர் ஏராளமான விளம்பரப் படங்களில் பணியாற்றியவர்.

இசையமைப்பாளர்கள் மிக்கு காவில் மற்றும் ஆதி ஃப் என இருவர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

பாடல்கள்- யுகபாரதி , நடனம் _ தீனா, ஸ்டண்ட் – டேஞ்சர் மணி , ஒப்பனை மிட்டா ஆண்டனி.

அடுத்த மாதம் ஜூலையில் ‘இமை’ படம் வெளியாகவுள்ளது.

A real incident crude love script is mold as a film Imai

Imai movie stills (10)

பிரியங்கா டைவர்ஸ் பற்றி ரசிகர் ட்வீட்; அஜித்தால் ரசிகரின் ‘தல’ தப்பியது

பிரியங்கா டைவர்ஸ் பற்றி ரசிகர் ட்வீட்; அஜித்தால் ரசிகரின் ‘தல’ தப்பியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay tv priyanka ajithவிஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தொகுப்பாளினி பிரியங்கா.

இவருக்கு ஒரு ரசிகர் ட்வீட் செய்யும்போது “அடுத்து உனக்கும் உன் புருஷனுக்கும் விவாகரத்து கன்பார்ம் என ட்விட் செய்துள்ளார்.

அவர் ஏன் இதை தேவையில்லாமல் சொன்னார் எனத் தெரியவில்லை.

ஆனால் இதை பார்த்த பிரியங்கா.. மக்களே இவன என்ன செய்யலாம்?. என் தல புகைப்படத்தை DPயாக வைத்திருக்கிறாய் என்ற ஒரே காரணத்துக்காக உன்னை சும்மா விடுறேன் என்று டுவிட் செய்துள்ளார்.

Priyanka Deshpande‏ @Priyanka2804
Makkaleee.. ivanaa enna seiyalam? PS: en thala photo dp ah vachurka ndra oreyyy karnathuku unna summa vidren.

Ajith fan tweet about Vijay TV Priyanka’s personal life

விஜய்சேதுபதி-த்ரிஷா இணையும் ‘96’ பட சூட்டிங் தொடங்கியது

விஜய்சேதுபதி-த்ரிஷா இணையும் ‘96’ பட சூட்டிங் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi trisha 96சின்ன சின்ன வேடங்களில் நடித்து இன்று முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்துவிட்டார் விஜய் சேதுபதி.

கிட்டதட்ட அரை டஜன் படங்களில் நடித்து கொண்டிருக்கும் இவர் முதன்முறையாக த்ரிஷாவுடன் இணைந்து 96 என்ற படத்தில் நடிக்கிறார்.

பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம் குமார் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பாக எஸ் நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்திற்கு சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, இசை பணிகளை – கோவிந்த் மேனன் மேற்கொள்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பூஜை சற்றுமுன் போடப்பட்டது. இதனையடுத்து இதன் சூட்டிங்கை தொடங்கவிருக்கிறார்கள்.

விஜய்சேதுபதி, த்ரிஷா ஆகியோரின் சிறு வயது கேரக்டர்களில் புதியவர்கள் நடிக்கவிருக்கிறார்களாம்.

எடிட்டிங்- கோவிந்தராஜ்
கலை – வினோத் ராஜ்குமார்
பாடல்கள் – உமாதேவி, கார்த்திக் நேத்தா.

கார்த்தி-சிவகார்த்திகேயன் மோதல் கன்பார்ம்..?

கார்த்தி-சிவகார்த்திகேயன் மோதல் கன்பார்ம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi sivakarthikeyanமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஸ்நேகா நடித்துள்ள வேலைக்காரன் படம் செப்டம்பர் 29ஆம் தேதி ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியாகிறது.

இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இப்படத்துடன் கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படமும் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

‘சதுரங்க வேட்டை’ இயக்குனர் H.வினோத் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இதில் போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடிக்க, நாயகியாக ராகுல் பிரித்தி சிங் நடித்து வருகிறார்.

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இன்னும் ஒருசில தினங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்க உள்ளதாம்.

Karthi and Sivakarthikeyan movie may clash on Ayudha Pooja holidays

‘வல்லரசு அப்புறம்; இப்போ நல்லரசு வேண்டும்..’ விஜய்

‘வல்லரசு அப்புறம்; இப்போ நல்லரசு வேண்டும்..’ விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay new stillsநாட்டில் நடைபெறும் சில சம்பவங்கள் குறித்து தன் கருத்துக்களை அதிரடியாக அண்மைகாலமாக கூறிவருகிறார் இளைய தளபதி விஜய்.

ஜல்லிக்கட்டு போராட்டம், கருப்பு பணம் பற்றி பேசியிருந்த அவர் தற்போது விவசாயிகள் குறித்து பேசியுள்ளார்.

இன்று நடைபெற்ற ஒரு தனியார் விருது நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் விஜய்.

அப்போது அவர் பேசியதாவது….

“விவசாயிகள் பிரச்சனைக்கு அவசியமாக மட்டுமல்ல அவசரமாகவும் தீர்வு வேண்டும்.

நமக்கு இப்போது 3 வேளை உணவு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு நமக்கு தெரியாமல் போய்விட்டது.

நாம் நன்றாக இருக்கிறோம் ஆனால் நமக்கு சோறு போடும் விவசாயிகள் நன்றாக இல்லை.

இது இப்படியே போனால், அடுத்த சந்ததிக்கு உணவு இல்லாமல் போகும் நிலைதான் ஏற்படும்.

அரிசியை உற்பத்தி செய்த விவசாயிகளே அதை இலவசமாக பெற ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறார்கள்.

“நாடு வல்லரசாவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் முதலில் விவசாயிகளுக்கு நல்லரசாக மாறவேண்டும்.” என பரபரப்பாக பேசினார் விஜய்.

கத்தி படத்தில் விவசாயிகளின் பிரச்சினைக்காக விஜய் பேசியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Vijay open talk about Farmers struggle in our nation India

கத்தி படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி கீழே…

vijay kaththi

More Articles
Follows