அசத்திட்டார் தல..; அஜித்தை பாலிவுட்டுக்கு அழைக்கும் போனிகபூர்

அசத்திட்டார் தல..; அஜித்தை பாலிவுட்டுக்கு அழைக்கும் போனிகபூர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Boney Kapoor invites Actor Ajith to act in Hindi moviesநடிகை ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்குறுதிப்படி அவர் மறைந்த பின்னும் அவரின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

வினோத் இயக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார்.

இதில் வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வந்தனர். இதன் சூட்டிங் அண்மையில் நிறைவு பெற்றது.

இப்படத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்த நிலையில் படத்தின் ரஷ்ஷைப் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளதாவது…

“நேர் கொண்ட பார்வை’ படத்தின் ரஷ்ஷைப் பார்த்தேன். மகிழ்ச்சி. அஜித் அற்புதமாக நடித்திருக்கிறார்.

விரைவில் ஹிந்திப் படங்களில் நடிக்க அவர் சம்மதிப்பார் என நினைக்கிறேன். கைவசம் மூன்று ஆக்சன் கதைகளை வைத்திருக்கிறேன்.

குறைந்தபட்சம் ஒரு படத்திலாவது அவர் நடிக்க சம்மதிப்பார் என நினைக்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.

அவரின் அழைப்பை ஏற்று ஹிந்தி சினிமாவில் நடிப்பாரா அஜித்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Boney Kapoor invites Actor Ajith to act in Hindi movies

ஆண்ட்ரியா ஒரு சகலகலாவல்லி… விஜய் ஆண்டனி பாராட்டு

ஆண்ட்ரியா ஒரு சகலகலாவல்லி… விஜய் ஆண்டனி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Andrea is multifaceted person says Vijay Antony in Maaligai Teaser launchநடிகை ஆண்ட்ரியா, தான் நடிக்கிற ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக முத்திரை பதிக்கக் கூடியவர். அந்த வரிசையில் தற்போது, அதிரடி காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் “மாளிகை”. “சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்” சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா.

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளர்கள் கமல் போரா மற்றும் ராஜேஷ் குமார் இருவரும் வந்திருக்கும் அனைவரையும் வரவேற்று பேசி தொடங்கி வைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் தில் சத்யா பேசும் போது,

“இந்தப்படத்தை இயக்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் எனக்கு இது முதல் படம். இந்தப்படத்தில் ஆண்ட்ரியா ஆங்கிலப் பட நாயகியைப் போல் நடித்துள்ளார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஜே.கே, இந்தப்படம் கதாநாயகிக்குதான் முக்கியத்துவம் என்றாலும், நல்லக் கதையம்சம் கொண்ட படம் என்பதற்காக நடித்துக் கொடுத்தார்.

கே.எஸ்.ரவிக்குமார் சாரைப் பற்றி நான் சொல்லவே வேண்டாம். அவர் உண்மையிலேயே பெரிய மனிதர். சகஜமாக பழகி நடித்துக் கொடுத்தார். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு நல்ல ஆக்‌ஷன் திரில்லர் படம், ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்றார்.

நடிகை ஆண்ட்ரியா பேசும்போது,

“இந்தப்படம் முதலில் கன்னடத்தில் பண்ண வேண்டிய படமாகத்தான் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஆண்ட்ரியாவிற்கு தமிழில் மார்க்கெட் இருக்கு. அதனால், தமிழில் எடுக்க வேண்டும் என்று சொன்னார். ஒரு இந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குனர் இருவருக்கும் எனக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது என்று தோன்றி இருப்பது மகிழ்ச்சி. ஆனால் இங்கு இருப்பவர்களுக்கு ஏதும் தோன்றவில்லை.

நான் நிறைய பெரிய இயக்குனர்களிடம் வேலை செய்திருக்கிறேன். இந்தப் படத்தின் அனுபவம் முக்கியமானது. நாயகிக்கு முக்கியத்துவம் அதிகமுள்ள படத்தில் நடித்ததிற்காக ஹீரோ ஜே.கே-வுக்கு எனது நன்றிகள்.

ஆலி சார் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் சார் இருவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் எனக்கு இரண்டு வேடம் என்பதால் தான். இந்த மாதிரியான கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்றார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது,

‘இந்தப்படத்தின் இயக்குனர் தில் சத்யாவிற்கு நிறைய விசயங்கள் தெரிந்திருக்கிறது. ஆனாலும் என்னிடம் யோசனைகள் கேட்பார். நான் இப்போது ஏழு தமிழ் படங்களில் நடித்து வருகிறேன்.

இந்தப் படத்தில் நான் கமிஷனர் வேடத்தில் நடிக்கிறேன். இந்த இயக்குனர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் தான் உடனேயே நடிக்க சம்மதித்தேன். இப்படத்தின் ஹீரோ ஜே.கே அழகாக இருக்கிறார்.

ஆண்ட்ரியா திறமையானவர். நடனம், பாட்டு, நடிப்பு என பன்முக திறமை அவரிடம் உண்டு. அவர் நடிப்பில் தரமணி படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப்போல் இந்தப்படத்திலும் நன்றாக நடித்திருக்கிறார்’ என்றார்.

இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில்,

“நான் அண்மையில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இது மிகப்பெரிய நிகழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் டைட்டில், டீசர், இந்த விழா என எல்லாமே பாசிட்டிவாக இருக்கிறது.

இந்தக்கதை மிக வித்தியாசமாக அமைந்திருப்பதால் நிச்சயம் இந்தப்படம் ஜெயிக்கும். தயாரிப்பாளர் கமல்போரா சார் இன்னும் நிறைய படங்களை தமிழில் தயாரிக்க வேண்டும்.

சகலகலாவல்லி ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்தப்படத்திலும் அவர் கலக்கி இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப்படத்தின் இயக்குநருக்கு மிகப்பெரிய வாழ்த்துகள்” என்றார்.

Andrea is multifaceted person says Vijay Antony in Maaligai Teaser launch

Andrea is multifaceted person says Vijay Antony in Maaligai Teaser launch

லதாவை தடவிய எம்ஜிஆர்..; கஸ்தூரியின் கருத்துக்கு லதா கண்டனம்

லதாவை தடவிய எம்ஜிஆர்..; கஸ்தூரியின் கருத்துக்கு லதா கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kasthuri under trouble for vulgar tweet Actress Latha condemn herநடிகை கஸ்தூரி அவ்வப்போது ட்விட்டரில் ஏதாவது ஒரு கருத்தை சொல்லிவிட்டு சர்ச்சையாக்கி கொண்டே இருப்பார்.

தற்போது எம்ஜிஆர் மற்றும் லதாவை இணைத்து ஒரு தடவல் ட்விட் போட்டுள்ளார்.

அதில்…

Kasturi Shankar‏Verified account @KasthuriShankar
என்னய்யா இது. பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க. #CSK 81 -3 (14 overs)
எனவே அவரின் கருத்துக்கு பிரபல நடிகை லதா தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது…

“ நான் 50 வருஷமா நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்போவரைக்கும் எனக்குன்னு ஒரு மரியாதையை தக்க வைச்சுக்கிட்டிருக்கேன்.

‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரை தெய்வமா மதிக்கிற கோடானுகோடி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமா மன வருத்தப்படுற மாதிரி இப்படியெல்லாம் எழுதலாமா..?

கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே. அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே..? எதுக்கு நானும், ‘மக்கள் திலகமும்’ நடிச்ச படத்தைச் சொல்லணும்..

அவங்கதான் எதுக்கெடுத்தாலும் பெண்ணியம்.. அது… இதுன்னு கருத்துச் சொல்லிட்டிருக்காங்களே.. இதெல்லாம் பெண்ணியம் பேசுறவங்க பேச்சா.. ஒரு பொண்ணே, இன்னொரு பொண்ணை பொதுவெளில அவமானப்படு்த்துற மாதிரி பேசலாமா..?

கஸ்தூரிக்கு பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொண்ணுக்குத் தேவையில்லாத வேலை. இதுவொரு சீப்பான பப்ளிசிட்டி..

இதற்கு நடிகர் சங்கத்தில் இருந்து கண்டன கடிதம் அனுப்பி உள்ளதாக என்னிடம் சொன்னார்கள் அவர்களுக்கு மிக்க நன்றி. அதுமட்டும் இல்லாமல் அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களிலும் இருந்து கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இப்படிக்கு
நடிகை லதா

தற்போது லதாவின் கண்டனத்திற்கு பதிலளிக்கும் வகையில் கஸ்தூரி தெரிவித்துள்ளதாவது…

Kasturi Shankar‏Verified account @KasthuriShankar
MGR காதல் காட்சியில் நடித்ததில் , கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை, தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது? இருப்பினும் இதில் யார் மனமும் புண் பட்டிருந்தால், என் மனமார வருந்துகிறேன்.

Kasthuri under trouble for vulgar tweet Actress Latha condemn her

கோவை மாவட்ட தொழில் மையத்தில் குளறுபடி.; பூனைக்கு மணி கட்டுவது யார்.?

கோவை மாவட்ட தொழில் மையத்தில் குளறுபடி.; பூனைக்கு மணி கட்டுவது யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

News about Kovai District Industries Centerகோவை மாவட்ட தொழில் மையத்தில் (District Industries Center) இதற்கு முன் பொது மேலாளராக இருந்தவர் ஓய்வு பெற்ற பிறகு, கண்ணன் என்பவர் தொழில் மையத்தில் இருந்து கோயமுத்தூர்தான் வேண்டும் என்று ஒத்த காலில் நின்று மேல் இருப்பவர்களை கவனித்து ட்ரான்ஸ்பர் வாங்கி வந்துள்ளார்.

இவர் வந்த பிறகு தொழில் மையத்தில் இவருக்கு கீழ் பணிபுரியும் பெண் உதவி பொறியாளர்கள் மற்றும் மேலாளர்களை மிகவும் கீழ்தரமாக நடத்துகிறாராம்.

இவர் “நான் யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை, என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது” என்று திமிராக பேசி அனைவரையும் மிரட்டுகிறாராம்.

தொழில் மையத்திற்கு வரும் தொழில் முனைவோரிடத்திலும் ஏக வசனத்தில் பேசி சத்தம் போடுகிறாராம். தன்னை கவனிக்காமல் ”எப்படி மானியம் பெறுகிறீர்கள்” என்று பார்த்து விடுகிறேன் என்று சவால் விடுகிறாராம்.

இவருடைய நிர்வாக திறமையின்மையால் பணிகள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் மற்றும் தொழில் முனைவோர்கள் மிகவும் கஷ்ட்டத்திற்கு உள்ளாகின்றார்களாம்.

மேலும் அவருக்கு கீழ் பணிபுரியும் பெண் ஊழியர்களில் சிலர் திருப்பூரில் இருந்து ட்ரான்ஸ்பரில் வந்தவர்களுக்கு மிகவும் உறுதுனையாகவும் மற்ற பெண் அதிகாரிகளை மிகவும் கீழ்தரமாகவும் நடத்துவதாக நம்மிடம் சில ஊழியர்கள் முறையிடுகிறார்கள்.

இதற்கு முன் இருந்த பொது மேலாளரிடம் இருந்த அனைவரையும் வேறு ஊருக்கு ட்ரான்ஸ்பர் செய்து விட வேண்டும் என்று சில பல உள்ளடி வேலைகளையும் செய்து வருகிறாராம்.

இது மட்டும்மல்லாமல் வருகிற தொழில் முனைவோர்களிடம் இதற்கு முன் இருந்த தொழில் மேலாளர் அசோகன் என்பவர் மேல் பொய் புகார் அளிக்க சொல்லி கட்டாயப்படுத்துகிறாராம் அப்படி புகார் கொடுக்கவில்லை என்றால் உங்களுக்கு மானியம் கிடைக்காது என்று மிரட்டுகிறாராம்.

இதையெல்லாம் பார்த்து வரும் தொழில் முனைவோர்கள் நொந்து கொண்டு செல்கின்றனர் என்று சில ஊழியர்கள் புலம்புகின்றனர்.

மேலும் அலுவலகத்தில் பணிபுரியும் கோபாலகிருஷ்ணன் என்ற ஊழியர் ஒருவர் சக ஊழியர்களுக்கு கம்யூட்டர் மற்றும் பிற அலுவலக ப்ரிண்டர்களை உபயோகப்படுத்த விடமாட்டேன் என்று சக பெண் ஊழியர்களை மிரட்டுகிறாராம்.

இதை பொது மேலாளரிடம் முறையிட்டால் அவர் அந்த ஊழியரை பார்த்து பயப்படுகிறாராம்.

பொது மேலாளர் ஏன் இந்த ஊழியருக்கு பயப்பட வேண்டும் என்று குழம்பி போய் உள்ளனர் மற்ற ஊழியர்கள்.

இதையெல்லாம் பொது மேலாளரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கும்படி கூறினால் “உங்கள் அனைவரையும் வேறு ஊருக்கு மாற்றல் செய்துவிட்டு என்னுடன் முன்னால் திருப்பூரில் பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கோயமுத்தூருக்கு கொண்டு வந்துவிடுவேன் என்று மிரட்டுகிறாராம்.

இதையெல்லாம் பார்த்து அவரிடம் பணிபுரியும் நேர்மையான ஊழியர்கள் தமக்கு எப்போது மாறுதல் உத்தரவு வரும் என்று புலம்பி கொண்டு உள்ளனராம்.

மேலும் “என்னை இன்னும் மூன்று வருடங்களுக்கு எதுவும் செய்ய முடியாது. நான்தான் இங்கு அரசன் நான் யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை. commissioner முதல் minister வரை எல்லோரையும் கவனித்துதான் இங்கு வந்துள்ளேன்”என்று மார்தட்டிக் கொண்டு இருக்கிறாராம்.

பொதுமேலாளர் கண்ணன், மேலாளர் சந்திரசேகர் மற்றும் திருப்பூர் மேலாளர் திருமுருகன் ஆகிய மூவரும் கூட்டனி சேர்ந்துதான் இத்தனை அக்கிரமங்களையும் செய்கின்றனர்.

இதுமட்டுமல்லாமல் தங்களுக்கு ஆகாத நேர்மையான ஊழியர்கள் மேல் பொய் புகார்கள் கூறி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

News about Kovai District Industries Center

செல்ல பிராணி நாய்யின் சாகசம்… வாட்ச்மேன் படம் பார்த்த மாணவர்கள் உற்சாகம்…

செல்ல பிராணி நாய்யின் சாகசம்… வாட்ச்மேன் படம் பார்த்த மாணவர்கள் உற்சாகம்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)டபூள் மீனிங் புரோடஷன் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் GV.பிரகாஷ்குமார் நாயகனாக AL.விஜய் இயக்கதில் “வாட்ச்மேன்” படத்தை பார்த்த மாணவர்கள் அரங்கமே அதுரும் அளவிற்க்கு ஆராவாரத்துடன் ஆடினர்.படம் பார்த்த மாணவர்கள் கூறும் போது…”

“படத்தின் ஆரம்ப முதல் முடிவு வரை படத்தில் வந்த செல்லபிராணி ப்ரவ்ணி நாய் (browni) பண்ணும் சகாசங்கள் செம. படத்தில் நாய்ய பார்த்தவுடன் என்ன அறியாமையிலே சீட்டை விட்டு எழுந்திருச்சி கத்தினேன்.திரும்பி பார்த்த அரங்கமே நாயை பார்த்து அலருது. ஒரு முதலாளி உயிறை காப்பாற்ற நாய் பண்ணும் சாகசம் மற்றும் சுட்டித்தனம் எங்களை கவர்ந்தது..இப்ப நல்லா புரியுது.ஒவ்வொரு வீட்டுக்கும் வாட்ச்மேன் நாய் தான்.இனி எங்களோட ஹிரோ ப்ரவ்ணி நாய் தான்.கண்டிப்பா நாய்க்காக இன்னொரு முறை நாங்கள் மட்டும்மல்லாமல் எங்க நண்பர்களையும் கூட்டிகிட்டு தியேட்டர்ல பார்ப்போம்.

மேலும் கரிப்பா தலைமையாசிரியர் பெருமாள் கூறும் போது.இந்த கோடை விடுமுறைக்கு ஒவ்வொரு குழந்தைகளும் பார்க்க வேண்டிய படம் வாட்ச்மேன் அந்த அளவுற்க்கு எல்லா தரப்பு மக்களுக்கும் இந்த படம் பிடிக்கும்.

இந்த நிகழ்வில் சாலி கிராமம் கரியப்பா கார்த்திகேயன் பள்ளி மாணவர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் பி.டி.செல்வகுமார் அவர்கள் கலந்துக்கொண்டனர்.

மில்கா எஸ்.செல்வகுமார் இயக்கும் ” பியார் “

மில்கா எஸ்.செல்வகுமார் இயக்கும் ” பியார் “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)விண்டோபாய் பிக்சர்ஸ் V.பாலகிருஷ்ணன் R.சோமசுந்தரம் மற்றும் மாரிசன் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ” பியார்” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் முன்னணி நடிகர் கதா நாயகனாகவும் முன்னணி நாயகி கதா நாயகியாகவும் நடிக்கிறார்கள். அதற்காக பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்கிறார்.

மற்றும் சாம்ஸ், ஆர்த்தி, வாசுவிக்ரம், ஷபிபாபு ஆகியோருடன் இன்னும் சில முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – N.ஆனந்தகுமார்

இசை – A.K.ரிஷால் சாய்

பாடல்கள் – வ.கருப்பன்

எடிட்டிங் – ரமேஷ் வேலுகுட்டி

நடனம் – அசோக்ராஜா

ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன்

கலை – முத்துவேல்

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் மில்கா எஸ்.செல்வகுமார். இவர் ராகவா லாரன்ஸிடம் உதவியாளராக பணியாற்றியவர்.. தற்போது நட்ராஜ் மனிஷா யாதவ் நடிக்க முடிவடையும் நிலையில் உள்ள சண்டி முனி என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இவர் இயக்கும் இரண்டாவது படம் ” பியார் ”

தயாரிப்பு – விண்டோபாய் பிக்சர்ஸ் V.பாலகிருஷ்ணன் R.சோமசந்தரம், மாரிசன் மூவிஸ்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..

வழக்கமாக ஒரு ஹீரோ காதலர்களைத்தான் சேர்த்து வைப்பார்கள் ..இந்த படத்தில் வித்தியாசமாக ஒரு ஹீரோ இரண்டு பேய்க் காதலர்களை சேர்த்து வைக்கிறார்.அ தாவது பேயை பேயுடன் சேர்த்து வைப்பது தான் இதன் கதை. பேய்க்காதல் என்றும் சொல்லலாம்.

ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.

ஊட்டி குன்னூர் பழனி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது..

ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் முன்பே அடுத்த படம் கமிட்டானது எப்படி என்று இயக்குனரிடம் கேட்ட போது. சண்டி முனி படத்தின் படப்பிடிப்பை தயாரிப்பாளரிடம் சொன்னது போல் முடித்துக் கொடுத்ததை கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் என்னை பியார் படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர்களுக்கும் நான் திட்டமிட்டு சொன்ன படி முடித்துக் கொடுப்பேன் என்கிறார் மில்கா எஸ்.செல்வகுமார்

More Articles
Follows