அஜித்துக்காக காத்திருக்கும் பாலிவுட் புரொடியூசர்; மௌனம் காக்கும் தல

அஜித்துக்காக காத்திருக்கும் பாலிவுட் புரொடியூசர்; மௌனம் காக்கும் தல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’. படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தை அடுத்து மீண்டும் இதே கூட்டணி இணையவுள்ளது.

ஆனால் இதே கூட்டணி 3வது முறையாக இணையவுள்ளதாகவும் செய்திகள் வந்தன.

ஆனால், அதை தயாரிப்பாளர் போனி கபூர் மறுத்துள்ளார்.

“’நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு ஒரு ஆக்ஷன் படம் தயாரிக்க உள்ளோம். ஒரு ஹிந்திப் படத்தில் நடிப்பதற்காக அவரிடம் கேட்டுள்ளோம், ஆனால், அவர் இன்னும் சம்மதிக்கவில்லை,” என தெரிவித்துள்ளார்.

ஆனால் அஜித் எப்போது சம்மதிப்பார்? என்பது அவருக்கே வெளிச்சம்.

அஜித்-விஷாலை தொடர்ந்து விஜய்யுடன் இணையும் அர்ஜூன்

அஜித்-விஷாலை தொடர்ந்து விஜய்யுடன் இணையும் அர்ஜூன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)100க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்த அர்ஜூன், சமீபகாலமாக டபுள் ஹீரோ சப்ஜெக்டிலும், வில்லன் வேடத்திலும் நடித்து வருகிறார்.

அஜித்துடன் மங்காத்தா, விஷாலுடன் இரும்புத்திரை, விஜய் ஆண்டனியுடன் கொலைகாரன் படங்களிலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின்ன் 64-வது படத்தில் அர்ஜூன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் ராசிகண்ணா, ராஷ்மிகா மந்தனா நாயகிகளாக நடிக்கிறார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

கடாரம் கொண்டான் படத்தில் கமலுடன் இணைந்து மகிழ்ச்சி – லேனா

கடாரம் கொண்டான் படத்தில் கமலுடன் இணைந்து மகிழ்ச்சி – லேனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)மலையாள சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்படும் நடிகைகளில் ஒருவர் லேனா.

நாயகி வேடம் இல்லை என்றாலும் அதற்கு இணையான வேடம் இவருக்கு வழங்கப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தில் டாக்டராக நடித்திருந்ர் இவர்.

தற்போது கமல் தயாரித்துள்ள விக்ரமின்ள கடாரம் கொண்டான் படத்திலும் நடித்துள்ளார்.

கமல் தயாரித்துள்ள படத்தில் நடித்தது தன்னுடைய பாக்கியம் என கூறியுள்ளார் லேனா.

கடாரம் கொண்டான் இசை விழாவில் கமலுடன் நின்று புகைப்படமும் எடுத்து ஒரு ரசிகையாக மகிழ்ந்துள்ளார்.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற கண்ணே கலைமானே

சர்வதேச அங்கீகாரம் பெற்ற கண்ணே கலைமானே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இயக்குனர் சீனு ராமசாமி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு சிறந்த குணத்தைக் கொண்டிருந்தார். குறிப்பாக, அவர் மிகவும் யதார்த்தமான கதை முன்னுரை மற்றும் இயற்கையான கதாபாத்திரங்களுடன் நேட்டிவிட்டி அழகை வெளிப்படுத்தும் விதம் அவரது திரைப்பட உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இது அவரை நம் ஊரில் மட்டுமல்லாமல், பல்வேறு பிராந்திய சினிமா துறைகளிலும் பிடித்த இயக்குனராக ஆக்கியுள்ளது. இப்போது, அவரது சமீபத்திய படமான “கண்ணே கலைமானே” இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்த இந்த திரைப்படம் 2020ஆம் ஆண்டின் மும்பை தாதா சாஹேப் சர்வதேச திரைப்பட விழாவில் ஜூரி ரிவியூவுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், கல்கத்தா சர்வதேச வழிபாட்டு திரைப்பட விழாவின் 30வது சீசனில் ‘சிறந்த சாதனை விருதை’ வென்றிருக்கிறது.

இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டு, தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி கூறும்போது, “இது நம் ஒட்டுமொத்த தமிழ் திரைப்பட சகோதரத்துவத்திற்கும் கிடைத்த வெற்றியாக நான் உணர்கிறேன். மகிழ்ச்சியாக இருப்பதை விட, இது ஒரு அறிவூட்டும் செயல்முறையாக நினைக்கிறேன். மொழி மற்றும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட எவரையும் தொட்டு விடும் ‘மனித உறவுகள் மற்றும் உணர்ச்சிகள்’ என்ற புதிய வகை சினிமாவை இதன் மூலம் நான் கண்டு கொண்டிருக்கிறேன். இதுபோன்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு முன்பே, பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் பொது மக்களிடையே படத்துக்கு கிடைத்த விமர்சன வரவேற்பு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். விருதுகளை வென்ற படங்கள் ‘கலைப்படங்கள்’ என்று அழைக்கப்பட்ட காலங்களும், அவற்றிற்கு பொதுமக்களிடையே சரியான அங்கீகாரம் இருக்காது என்றும் பேசப்பட்ட காலங்கள் இருந்தன. ஆனால் ‘கண்ணே கலைமானே’ இரண்டையும் பெற்றிருப்பதை பார்க்கும் போது, எதிர்காலத்தில் இதுபோன்ற திரைப்படங்கள் எடுக்க எனக்கு அதிக தைரியத்தையும் நம்பிக்கையையும் தருகிறது. தாங்கள் நடித்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோருக்கும், ஒட்டுமொத்த குழுவினருக்கும் நான் நன்றி கூறுகிறேன்” என்றார்.

போதை ஏறி புத்தி மாறி ஒரு சிறந்த அனுபவத்தை தந்திருக்கிறது – நடிகை துஷாரா

போதை ஏறி புத்தி மாறி ஒரு சிறந்த அனுபவத்தை தந்திருக்கிறது – நடிகை துஷாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)நடிகை துஷாரா போதை ஏறி புத்தி மாறி விளம்பரங்களில் தனது தோற்றத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த படத்தை பற்றியும், தனித்துவமான திறமை வாய்ந்த கலைஞர்களுடன் பணிபுரிந்தது குறித்தும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்.

இது குறித்து நடிகை துஷாரா கூறும்போது, “இந்த குழுவுடன் இணைந்து பணியாற்றுவது உண்மையில் ஒரு சிறந்த அன்பான மற்றும் வேடிக்கையான அனுபவமாகும். உண்மையில், இந்த சுவாரஸ்யமான தருணங்கள் படப்பிடிப்பின் போது ஊக்கமளிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தின. மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததற்காக அணியில் உள்ள அனைவருக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். ஆரம்பத்தில், இயக்குனர் சந்துரு சார் என்னை அழைத்து, இந்த படத்தில் நடிக்க ஆர்வம் இருக்கிறதா என்று கேட்டார். படத்தின் முழு கதையை பற்றி கூட நாங்கள் பெரிதாக உரையாடவில்லை. ஆனால் இந்த திரைப்படத்தின் மையக்கரு படத்தின் ஒரு பகுதியாக இருக்க எனது ஆர்வத்தை தூண்டியது. இருப்பினும், இந்த படத்தை பற்றி மிக நீண்ட காலமாக அவரது தரப்பில் இருந்து எனக்கு எந்த தகவலும் இல்லை. ஆச்சரியம் என்னவென்றால், ஓரிரு மாதங்களுக்கு பிறகு, எனக்கு ஒரு அழைப்பு வந்தது. ஸ்கிரிப்டை கேட்க அலுவலகத்திற்கு வர முடியுமா என்று சந்துரு சார் கேட்டார். இந்த திரைப்படத்தின் பூஜைக்கு 4 – 5 மணி நேரத்திற்கு முன்பு தான் நான் இந்த படத்துக்கு கையெழுத்திடுகிறேன் என்று கேள்விப்பட்டபோது நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்” என்றார்.

மேலும், இயக்குனர் சந்துரு குறித்து அவர் பாராட்டி பேசும்போது, “நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களிடம் அவர் விரும்புவதை பெறுவதில் அவரது தெளிவு மிகவும் துல்லியமானது. இது படம் மிகச்சிறப்பாக வர வழி வகுத்தது. இருப்பினும், தொழில்நுட்ப அம்சங்களில் நான் தேர்ச்சி பெற்றவன் அல்ல என்று அவர் அவரை குறைத்து மதிப்பிட்டு கூறலாம். ஆனாலும், இறுதி வடிவத்தை எவ்வாறு சரியாக கொண்டு வருவது என்பது குறித்த தனித்துவமான பார்வை அவருக்கு உண்டு என்று நான் கூறுவேன்” என்றார்.

நாயகன் தீரஜ் உடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து கூறும்போது, “அவர் மிகவும் எனர்ஜியுடனும், முழுமையான அர்ப்பணிப்புடன் பணிபுரியும் ஒரு நடிகர். ஒரு வெற்றிகரமான கலைஞர் எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும், தீரஜ் அதை அதிகமாகவே வைத்திருக்கிறார். முதல் ஷாட்டில் நடிப்பவரை போலவே கடைசி நாள் படப்பிடிப்பிலும் கூட அவர் அதே ஆற்றலை கொண்டிருந்தார்” என்றார்.

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ள போதை ஏறி புத்தி மாறி படத்தை சந்துரு கே.ஆர் இயக்கியுள்ளார். வரும் ஜூலை 12ஆம் தேதி உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தீரஜ், பிரதாயினி மற்றும் துஷாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள, இந்த படத்தில் ராதாரவி, சார்லி, அஜய் மற்றும் இன்னும் சில நடிகர்கள் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் காட்சி ரீதியாக படத்துக்கு பக்கபலமாக இருக்க, கே.பி. இசையமைத்திருக்கிறார். வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். கதிர் நடராசன் திரைக்கதை எழுதியுள்ளார்.

இசை நிகழ்ச்சியை ஒத்தி வைத்ததால் யுவன் ஷங்கர் ராஜா அதிருப்தி

இசை நிகழ்ச்சியை ஒத்தி வைத்ததால் யுவன் ஷங்கர் ராஜா அதிருப்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஇசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தொழில்முறையில் எப்போதும் நம்பகமானவர். ஜூலை 13ஆம் தேதி சிங்கப்பூரில் நடக்கவிருந்த அவரின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் முடிவை அவர் எடுத்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜாவுடன் கலந்து ஆலோசிக்காமலேயே இந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ரத்து செய்ததை அறிவித்தனர். இதனை கடமைகளை மதிக்கும் யுவன் ஷங்கர் ராஜாவால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

“இசை நிகழ்வுக்காக ஆடிட்டோரியங்களில் குவியும் ரசிகர்களுக்கான எனது அர்ப்பணிப்பு அப்படியே இருக்கிறது. தவிர்க்கவே முடியாத சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல்லது இயற்கை பேரழிவு பாதிப்பு இன்றி, எந்தவொரு நிகழ்வையும் ஒத்திவைக்கும் யோசனையை நான் எந்த நிலையிலும் ஊக்குவிப்பதே இல்லை. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நிகழ்ச்சியை ஒத்தி வைப்பது குறித்து எங்களுக்கு அறிவிக்க எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களின் தேதிகள் வீணாகி இருக்கிறது. இந்த ரத்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கும், அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். பணத்தை விடவும் நேரம் என்பது மதிப்பு மிக்கது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்த ரசிகர்களுக்காக நான் வருந்துகிறேன். இந்த சம்பவம் எனக்கு ஒரு நிகழ்வை நடத்துவதற்கு “சரியான பங்குதாரரை தேர்ந்தெடுப்பது அவசியம்” என்ற பாடத்தை கற்பித்திருக்கிறது. மன்னிப்பு வழங்குவது மட்டுமல்ல, பார்வையாளர்கள் குறிப்பாக எனது ரசிகர்கள் எனது நிலைப்பாட்டை புரிந்து கொண்டு அவர்களின் நிபந்தனையற்ற அன்பை இப்பொழுது போலவே, என்றென்றும் தருவார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நிகழ்ச்சி திட்டமிட்டபடி அதே 13ஆம் தேதி நிகழும் பட்சத்தில் நான் கலந்து கொண்டு, இந்த நிகழ்வை நடத்திக் கொடுக்க தயாராக இருக்கிறேன்” என்றார் யுவன் ஷங்கர் ராஜா.

More Articles
Follows