தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சியில், இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று காலை பெரும் விபத்து ஏற்பட்டது.
5-வது அலகில் பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், 6 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 2வது சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 22 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து கடலூர், திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டுச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களில் பத்மநாபன், அருண், வெங்கடேசன், நாகராஜன், சிலம்பரசன் உள்ளிட்ட 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் காயமடைந்த 17 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்…
தீ விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கவும், காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தீ விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தி கேட்டு வருத்தம் அடைந்ததாகவம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், விபத்தில் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நெய்வேலி என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்த விபத்தில் 7 பேர் பலியான சம்பவத்தில் அதிரடி நடவடிக்கையாக பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக என்.எல்.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.