*அட்டு* பட இயக்குனரின் அடுத்த படத்தில் பிக்பாஸ் புகழ் ஷாரிக்

*அட்டு* பட இயக்குனரின் அடுத்த படத்தில் பிக்பாஸ் புகழ் ஷாரிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigg Boss fame Shariq join hands with Attu movie director Rathan Linga‘அட்டு ‘பட இயக்குநரின் அடுத்த படமாக ‘உக்ரம்’ என்கிற படம் மிகப் பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக உள்ளது .

அண்மையில் வந்த படங்களில் பட உருவாக்கத்தில் கவனிக்கப்பட்டு பேசப்பட்ட படம் ‘அட்டு’. ரத்தின் லிங்கா இப்படத்தை இயக்கியிருந்தார்.

திறமைசாலிகள் எப்போதும் கவனிக்கப்பட்டுக் கவனம் பெறுவர். அந்த வகையில் இவரது அடுத்த படமான, ‘உக்ரம் ‘படத்துக்கும் அதே எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
.
இப்படத்தின் நாயகனாகப் பிக் பாஸ் புகழ் ஷாரிக் நடிக்கிறார். நாயகியாக மிஸ் குளோபல் பட்டம் பெற்ற மாடல் அழகி அர்ச்சனா ரவி நடிக்கிறார். வில்லனாக மலேசிய சிவா அறிமுகமாகிறார்.

சஸ்பென்ஸ் ஆக்ஷன் த்ரில்லராகப் படம் உருவாகவுள்ளது.
விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

படத்துக்கு ஒளிப்பதிவு துரை K.C. வெங்கட், இசை – பூ பூ சசி, கலை இயக்கம் – சுரேஷ் கேலரி, படத்தொகுப்பு – ப்ரவீன் உள்ளிட்டோர் இயக்குநருடன் கைகோர்த்துள்ளனர்.

தயாரிப்பு: ரத்தின் லிங்கா, ராஜேஷ், ரவிகாந்த்

Bigg Boss fame Shariq join hands with Attu movie director Rathan Linga

கடமான் பாறை-க்கு எதிர்பார்த்த மாதிரியே ஏ சர்ட்டிபிகேட் கிடைச்சிட்டு… : மன்சூர் அலிகான்

கடமான் பாறை-க்கு எதிர்பார்த்த மாதிரியே ஏ சர்ட்டிபிகேட் கிடைச்சிட்டு… : மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mansoor Ali Khans Kadamaan Paarai censored A certificateமன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “கடமான்பாறை“ என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – மகேஷ்.
இசை – ரவிவர்மா
பாடல்கள் – விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான்,
கலை – ஜெயகுமார்
நடனம் – டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், சந்துரு, சிவா. ஸ்டன்ட் – ராக்கி ராஜேஷ்,
தயாரிப்பு நிர்வாகம் – J.அன்வர்
ஒருங்கிணைப்பு – ஜே,ஜெயகுமார் ஆக்கம் , இயக்கம் – மன்சூரலிகான்.

கடமான் பாறை படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்திற்கு A சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

இது பற்றி குறிப்பிட்டுள்ள மன்சூரலிகான்…

நான் எதிர்பார்த்ததுதான். என் படத்தில் என்ன கமர்ஷியல் இருக்க வேண்டுமோ அது இருக்கிறது. அதனால் “ A “ தான் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன் சரியாக கிடைத்திருக்கிறது.

காதல், மோதல், காமெடி எல்லாம் இருக்கு படத்தில்.” என்கிறார் மன்சூரலிகான்.

படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடை பெற உள்ளது.

Mansoor Ali Khans Kadamaan Paarai censored A certificate

டிக் டாக் தளத்தில் ஆரி & ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் பட ப்ரொமோஷன் ரிலீஸ்

டிக் டாக் தளத்தில் ஆரி & ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் பட ப்ரொமோஷன் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aari aishwrya duttaஆரி – ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் ப்ரொமோஷன் வீடியோ ‘டிக் டாக்’ தளத்தில் ரிலீஸ் செய்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது படக்குழு.

விரைவில் படத்தின் தலைப்பும் டிக் டாக் தளத்தில் ரிலீஸாக உள்ள இந்தப் படத்தினை S.S.ராஜமித்ரன் இயக்குகிறார். இவர் ‘அய்யனார்’ என்ற படத்தை இயக்கியவர். A.G.மகேஷ் இசை அமைக்க, ‘அண்ணாதுரை’, ‘தகராறு’ புகழ் தில்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கிரியேட்டிவ் டீம்ஸ் E.R.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் B. தர்மராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்த ப்ரொமோஷன் வீடியோ ரிலீஸ் குறித்து பட நாயகன் ஆரி கூறியதாவது :

இந்திய அளவில் ஏன் சர்வதேச அளவில் ஒரு படத்தின் ப்ரொமோஷன் வீடியோ டிக் டாக்கில் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. எல்லா மனிதர்களும் தங்களோட வாழ்நாளில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காதலை கடந்தே வந்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் தங்களுடைய காதலை முதலில் கடக்கும் பருவம் இளமைப் பருவம் என்பதால் இன்னும் சுவாரஸ்யமாக உணர்வார்கள். அப்படிப்பட்ட காதலை மையமாக வைத்து சுழலும் படம்தான் இது. ஆகவே, இப்படத்தினை எங்கள் காதல் கதை என்று சொல்லாமல் உங்கள் காதல் கதை என்று சொல்வதிலேயே படக்குழுவினராக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

காதலிக்கும் நாம் கால ஓட்டத்தால் மாறுவோம். ஆனால் காதல் எப்போதும் மாறாது. எல்லா காலகட்டத்திலும் அது இளமையாகவே இருக்கும். அப்படி ஒவ்வொருவருக்குக்குள்ளும் உலாவும் காதலை பெரிய அளவில் கொண்டாடுகிற இன்றைய இளைஞர்கள் அதிகம் கூடும் இடம் சமூக வலைதளமாக இருக்கிறது. அதனால்தான் அவர்கள் தங்களது காதல் விஷயத்துக்காக பெரிதும் பயன்படுத்தும் ‘டிக் டாக்’ தளத்திலேயே படத்தின் ப்ரொமோஷன் வீடியோவை வெளியிட்டோம். அடுத்து விரைவில் படத்தின் தலைப்பும் அறிவிக்க உள்ளோம். அதையும் இதே போல டிக் டாக் தளத்திலேயே வெளியிட உள்ளோம். இனிமேல் இந்தமாதிரி படத்தின் பர்ஸ்ட் லுக், இசை, பாடல்கள் எல்லாம் இந்த தளத்தில் வெளியாவது அதிகரிக்கும்!’’ என்கிறார், படத்தின் நாயகன் ஆரி.

ரஜினிக்காக பாடியது சந்தோஷம்..; பேட்ட பாடல் குறித்து பாடகர் எஸ்பிபி

ரஜினிக்காக பாடியது சந்தோஷம்..; பேட்ட பாடல் குறித்து பாடகர் எஸ்பிபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and SPBகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மரண மாஸ் என்ற சிங்கிள் டிராக் பாடலை சில தினங்களுக்கு முன் வெளியிட்டனர்.

பாடலாசிரியர் விவேக் எழுதிய அந்த பாடலை எஸ்.பி.பியுடன் இணைந்து அனிருத்தும் பாடியிருந்தார்.

சில வருடங்களுக்கு பிறகு ரஜினி பட பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருப்பதால் அனைவரும் இதை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் அந்த பாடலில் சில நொடிகள் மட்டுமே எஸ்.பி.பி. பாடியிருந்தார்.

இதனால் இசை பிரியர்கள் சற்று வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில், அந்த பாடல் குறித்து எஸ்.பி.பி., விடுத்துள்ள ஒரு செய்தியில் கூறியுள்ளதாவது…

பேட்ட படத்தில் நான் பாடிய மரண மாஸ் பாடலில் எனக்கான போர்ஷன் கம்மிதான் என்பது எனக்கு தெரியும். என்றாலும் நான் பாடியது ரஜினிகாந்துக்காக என்பதால் வருத்தப்படவில்லை. மாறாக, மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

பேட்ட படத்தை 2019 பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது

றெக்க பட இயக்குனருடன் ஜீவா இணையும் படத்தை விஜய்சேதுபதி தொடங்கி வைத்தார்

றெக்க பட இயக்குனருடன் ஜீவா இணையும் படத்தை விஜய்சேதுபதி தொடங்கி வைத்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi and jiivaநடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் வரிசையாக ரிலீசுக்கு தயாராகவுள்ளன.

கீ, கொரில்லா, ஜிப்ஸி என ஒவ்வொரு படங்களாக விரைவில் வெளியாகவுள்ளது.

இதனிடையில் நடிகர் அருள்நிதியுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளார்.

இப்படத்தை முடித்துவிட்டு றெக்க பட இயக்குனர் ரத்னசிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

வேல்ஸ் பிலிம் இப்படத்தை தயாரிக்கிறது. இதை நடிகர் விஜய் சேதுபதி துவக்கி வைத்தார்.

ரத்னசிவா இயக்கிய றெக்க படத்தில் நடித்தவர் விஜய்சேதுபதி என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மூட்டை தூக்கிய பணத்தில் கஜாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய விஷால்

மூட்டை தூக்கிய பணத்தில் கஜாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

puratchi thalapathy vishalமூன்று வாரங்கள் கடந்த நிலையிலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகள் இன்னும் மீளாத் துயரில் தத்தளிக்கிறது.

இந்நிலையில் கஜா புயலில் பாதித்த 14 குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக கடலூர் கவிதாலயா தியேட்டரில் திண்பண்டங்கள் விற்பனை செய்தும், அந்தப் பகுதியில் மூட்டைத் தூக்கி அதில் கிடைத்த தொகையையும் கஜா புயலில் பாதித்தவர்களுக்காக அளித்துள்ளார் விஷால்.

இது வரும் ஞாயிற்றுக்கிழமை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சன் நாம் ஒருவர்’ நிகழ்ச்சியில் வரவிருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் இதுவரை வாரம் ஒரு நபருக்கு மட்டுமே உதவி என்ற வரிசையில் நடைபெற்று வந்தது. ஆனால் வரும் வாரம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு உதவி செய்யும் அத்தியாயம் வர உள்ளது.

நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்களின் பரிதாப நிலை குறித்தும் பேசுகிறார்கள்.

நடிகர் விஷால் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் சமுத்திக்கனி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்வதை கேட்டு கண்ணீர் வடித்ததோடு,

‘‘கஜா புயல் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களை தின்றுவிட்டது. இது ஏதோ வேறு ஒரு நாட்டில் நடந்ததைப் போல இப்போதும் பலர் நினைப்பதுதான் வேதனையாக இருக்கிறது!’’ என்றார்.

More Articles
Follows