ஹாலிவுட் படத்திலும் இணைந்த ‘தேசியத்தலைவர்’ நாயகன் பஷீர் & அரவிந்தராஜ்

ஹாலிவுட் படத்திலும் இணைந்த ‘தேசியத்தலைவர்’ நாயகன் பஷீர் & அரவிந்தராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாலிவுட்டில் பிரபலமான ‘பிங்க் ஜாகுவார் எண்ட்ர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தின் புதிய ஹாலிவுட் படத்திற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார் இயக்குனர் R. அரவிந்த்ராஜ்.

இந்த ஹாலிவுட் படத்தில் நாயகனாக தேசியத் தலைவர் படத்திற்கு பிறகு மீண்டும் இவருடன் கை கோர்க்கிறார் ஜெ எம் பஷீர்.

இந்தப் படத்திற்கான அறிவிப்பை நிறுவனத்தின் தலைவர் ஹிஸ் ஹைன்ஸ் பிரின்ஸ் ஜெகதீஷ் , மேடம் ஸ்வர்ணா விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.

தேசியத் தலைவர் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இந்த படத்திற்கான பணிகள் மார்ச் மாதம் முதல் தொடங்க இருக்கிறது.

கூடுதல் தகவல்…

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படம் தேசியத்தலைவர்.

முத்துராமலிங்கத் தேவராக ஜே.எம்.பஷீர் நடித்துள்ளார்.

எம்.எம்.பாபு, எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜி.ஜெயந்தி ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தை ‘ஊமைவிழிகள்’ புகழ் அரவிந்த்ராஜ் இயக்கி வருகிறார்.

இளையராஜா இசையில் தேவரய்யா என்ற பாடலை சினேகன் எழுதியுள்ளார்.

ப்ரமோஷனில் இதற்காகத்தான் கலந்துக்கல – நயன்தாரா ஓபன் டாக்

ப்ரமோஷனில் இதற்காகத்தான் கலந்துக்கல – நயன்தாரா ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பட ப்ரமோஷனில் பங்கேற்காதது குறித்து பேசிய நயன்தாரா, ‘நான் நடித்த ஆரம்பகால படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இல்லை.

நடிகைகளை வெறுமனே மேடையில் உட்காரச் சொல்லும் காலம் அது.

படத்திற்கு எந்த வகையிலும் உதவாது என்பதற்காகவே விளம்பர நிகழ்ச்சிகளை தவிர்த்துவிட்டேன்” என்றார்.

லேடி சூப்பர் ஸ்டார் மேலும் கூறுகையில், “இப்போதெல்லாம் அதிக ஹீரோயின் சார்ந்த படங்கள் வருகின்றன.

இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஹீரோயின் சார்ந்த படங்களை உருவாக்குகிறார்கள், இப்போது நான் படங்களை விளம்பரப்படுத்துவதில் அதிக அர்த்தம் உள்ளது” என தெரிவித்துள்ளார் நயன்.

சிம்புவின் அடுத்த ப்ராஜெக்ட் பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள்

சிம்புவின் அடுத்த ப்ராஜெக்ட் பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பத்து தல மார்ச் 2023 இல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதற்கிடையில், முன்னதாக அறிவிக்கப்பட்ட ‘கொரோனா குமார்’ படம் உட்பட சிம்புவின் அடுத்த திட்டம் குறித்து எந்த செய்தியும் இல்லை.

சிம்பு தனது அடுத்த திட்டத்தை அறிவிப்பதற்கு முன்பு ஒரு மாத இடைவெளி எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது.

சிலம்பரசன் தனது திறமைகளை வளர்த்துக் கொள்ள இந்த இடைவேளையின் போது தற்காப்பு கலைகளை பயிற்சி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மறுபுறம், விரைவில் ஒரு சூப்பர் ஹீரோ படத்திற்காக இயக்குனர் ஏஆர் முருகதாஸுடன் எஸ்டிஆர் இணையவுள்ளதாக ஒரு தகவல் உள்ளது.

2021ல் HUMAN.. 2022ல் கலைஞன்.. 2023ல்..??? மக்கள் செல்வனுக்கு மகுடம் சூட்டும் ராமசந்திரன்

2021ல் HUMAN.. 2022ல் கலைஞன்.. 2023ல்..??? மக்கள் செல்வனுக்கு மகுடம் சூட்டும் ராமசந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற படைப்பாளியான புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன், ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான தலைப்பைத் தேர்ந்தெடுத்து, தனது வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் பிரமிக்கத்தக்க வகையில் சர்வதேச தரத்திலான ஒரு புகைப்பட தொகுப்பை உருவாக்கி, அதனை மாதாந்திர நாட்காட்டியாக வடிவமைத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டவர்.

முந்தைய ஆண்டுகளில் “ஹூயூமன்”, “கலைஞன்” ஆகிய தலைப்புகளில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை தனித்துவமாகக் காட்சிப்படுத்திய எல். ராமசந்திரன் இந்த ஆண்டும், தொடர்ந்து மூன்றாம் முறையாக அவரோடு இணைந்து, ஒரு படைப்பாளியை பின்புலமாகக் கொண்ட “தி ஆர்டிஸ்ட்” என்ற தலைப்பில் காட்சிகளை வடிவமைத்து, அதனை 2023-ம் ஆண்டுக்கான மாதந்திர நாட்காட்டியாய் வடிவமைத்திருக்கிறார்.

ஓவியர், சிற்பி, கிராபிடி ஆர்டிஸ்ட் என பல பரிமாணங்களில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை புகைப்படம் எடுத்து, அதனை வண்ணமயமான நாட்காட்டியாக உருமாற்றியுள்ளார் சர்வதேச புகைப்பட கலைஞர் எல்.ராமசந்திரன்.

இந்த படைப்பிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் சுமார் பத்து நாட்களுக்கும் மேலாக அயராது உழைத்து 12 கண்கவர் செட்டுகளை, ஒவ்வொன்றையும் தனித்துவமான தலைப்பில் (Theme) வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“கலையும் கற்பனையும், பல சமூக மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது; பல முன்னெடுப்புகளுக்கு ஆதாரமாய் இருந்துள்ளது; பலரையும் மகிழ்வித்து வருகிறது.

அவ்வாறான எல்லா கலைஞர்களுக்கும் இந்த “ஆர்டிஸ்ட்” சமர்ப்பணம்” என குறிப்பிடும் எல் ராமசந்திரன், அயராத பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் இந்த கருத்துப்படிவத்திற்காக (கான்செப்ட்) உடனே நேரம் கொடுத்த விஜய் சேதுபதிக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய பணிகளில் முழு அர்ப்பணிப்புடனும் தன்னம்பிக்கையுடனும் செயலாற்றும் நடிகர்களில் விஜய் சேதுபதிக்கு என்றுமே ஒரு தனி இடம் உண்டு.

இந்த படத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு தலைப்பிற்கும், அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களை அணுகி, அதன் நுணுக்கங்களை உள்வாங்கி, அந்தந்த கதாபாத்திரமாகவே தன்னை மாற்றியிருக்கிறார் விஜய் சேதுபதி என்பதை நீங்கள் முதல் பார்வையிலேயே உணரலாம்.

கடந்த ஆண்டுகளைக் காட்டிலும், இத்தொகுப்பு ஒரு மாறுபட்ட – புதிய பாணியில் இருப்பதை நீங்கள் உணரலாம். சர்வதேச தரத்தில், ஒவ்வொரு மாதத்திற்கும் இரண்டு புகைப்படங்கள் என 24 புகைப்படங்களோடு, அழகுற வடிவமைக்கபட்டுள்ள இந்த நாட்காட்டி, உங்கள் உள்ளங்களையும் இல்லங்களையும் அழகாக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

கடந்த 2021ம் ஆண்டு கோவிட் ஊரடங்கு சமயத்தில் “HUMAN”, 2022ம் ஆண்டு “கலைஞன்” என்று தெருக்கூத்து கலைஞர்களை மையமாகக் கொண்டு வெளியிடப்பட்ட நாட்காட்டி ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இம்முறை “தி ஆர்டிஸ்ட்” நாட்காட்டி விற்பனைக்கு வருகிறது.

இதன் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய், காசா அறக்கட்டளை மூலம் கல்வி மற்றும் மருத்துவ நலன்களுக்காக பயன்படுத்தப்படும் என்பதையும் இத்தருணத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

வண்ணமயமாய் வாஞ்சையுடன் ஜொலிப்பான் இந்த “ஆர்டிஸ்ட்”.
ஆர்டிஸ்ட் காலண்டர் store.lramachandran.com, அமேசான் போன்ற இணையதளங்களிலும் மற்றும் முன்னணி புத்தகக் கடைகளிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

பையனூர் திரைப்பட நகரில் வீடு கட்டித்தர தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை

பையனூர் திரைப்பட நகரில் வீடு கட்டித்தர தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா இன்று 21.12.2022 சென்னையில் நடைபெற்றது.

மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.இராதாகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினர்.

துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் எஸ். சந்திரபிரகாஷ் ஜெயின் நன்றியுரை ஆற்றினார். இவர்களோடு சங்கத்து செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இவ்விழாவினில்..

வரவேற்புரை வழங்கிய செயலாளர் ஆர்.இராதாகிருஷ்ணன் பேசியதாவது…

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் 25 வருடங்கள் இருக்கும் மூத்த தயாரிப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு நன்றி. இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் உறுப்பினர்கள் அனைவரையும் பேரன்போடு வரவேற்கிறேன்.

இன்றைய விழாவில் நம் சங்கத்திற்காக உழைத்த மூத்த உறுப்பினர்களை ஆயுட்கால உறுப்பினராக அங்கீகரித்து அவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இவ்விழாவிற்கு வரச் சம்மதித்து எங்களை வாழ்த்திட்ட செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு மீண்டுமொருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர் ஃபைஸ்டார் கதிரேசன் பேசியதாவது..

இந்த விழாவானது நமது குடும்ப விழா போல் நடக்கிறது. நாம் எப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று மூத்த தயாரிப்பாளர்கள் கூறும் அறிவுரையுடன் நாம் இணைந்து செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசியதாவது..

இவ்விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி. நம் சங்கத்தில் மிக குறைந்த தயாரிப்பாளர்களே நிறைய படங்கள் செய்து வருகிறார்கள் மீதமுள்ளவர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை அரசு கவனத்தில் எடுத்து கொண்டு அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

நடிகர் டத்தோ ராதாரவி பேசியதாவது…

என் குடும்பத்தைச் சேர்ந்த சாமிநாதன் அவர்கள் இவ்விழாவிற்கு வந்தது எனக்கு ஆச்சரியமில்லை. இந்த அரசே திரைத்துறைக்குச் சாதகமான அரசு. அவர்கள் சினிமாவுக்கு நல்லது செய்கிறார்கள். இந்த இடத்தில் சான்றிதழ் பெறும் அனைவரின் சார்பாக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்… நன்றி.

தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் பேசியதாவது…

கொரோனா காலத்தை தாண்டி தமிழ் சினிமா எழுச்சி பெற்றதென்றால் அது தேனாண்டாள் முரளி அவர்களால் தான். பல நடவடிக்கைகள் எடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் பொற்காலமாக இந்த காலத்தை மாற்றியுள்ளார். அரசும் தயாரிப்பாளர்களுக்கான உதவிகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

தயாரிப்பாளர் காட்ரக்கடா பிரசாத் பேசியதாவது..

இந்த கமிட்டி எந்த நிதியும் இல்லாமல் தான் தனது பணியை துவங்கினார்கள். முன்பு இருந்தவர்கள் பேங்க் பேலன்ஸை, கஜானாவை காலி செய்து விட்டு போய் விட்டார்கள். இவர்கள் வந்த பிறகு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு பொங்கல், தீபாவளி பரிசு தருமளவு மாற்றியிருக்கின்றனர். இவர்கள் செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கிறது. மீண்டும் தேர்தல் நடந்தால் , 10 லட்சம் வரை செலவாகும் அதை தவிர்த்து இவர்களே தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி பேசியதாவது…

எங்கள் அழைப்பின் பேரில் வந்திருக்கும் அமைச்சர் சாமிநாதன் அவர்களுக்கு நன்றி. 25 ஆண்டுகள் இருக்கும் உறுப்பினர்களை ஆயுட்கால உறுப்பினர்களாக அங்கீகரிக்க வேண்டுமென்பது எங்கள் சங்கத்தில் எடுத்த சிறந்த முடிவு. முன்பு திரைத்துறை முழுமையாக தயாரிப்பாளர்கள் கையில் இருந்தது.

அனைத்து முடிவும் தயாரிப்பாளர்கள் தான் எடுப்பார்கள். ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை. அதை மாற்ற வேண்டும். அதற்கு சங்கம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் தான் நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள முடியும். அமைச்சர் நம் கோரிக்கைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளார்.

இந்த விழா மூத்த தயாரிப்பாளர்களை கௌரவிக்கும் விழா. அவர்களை நாம் மதித்து கௌரவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது…

வணக்கம். 25 வருடங்களுக்கு மேலாகத் தயாரிப்பாளர்களாக இருப்பவர்களுக்கு அங்கீகாரம் தரும் விழா இது. 25 ஆண்டுக்காலம் ஒரு துறையில் நீடித்திருப்பதே மிகப்பெரிய சாதனையில் வரும். நம் முதல்வர் இந்த துறையை அளித்த போது இந்த துறை சிறப்பாக செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

நான் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன், விவசாயிக்கு விளைவித்த பொருளுக்கு விலை கிடைக்காத நிலை தான் சினிமாவிலும் இருக்கிறது.

சங்கம் நிதி சிக்கலிலும் இருப்பதாக சொன்னார்கள். நம் முதல்வர் தலைமையிலான அரசும் இம்மாதிரியான சிக்கலான நிலையில் தான் அரசை எடுத்து நடத்தி வருகிறார். அவரிடம் உங்கள் கோரிக்கைகளை சொன்னால் எளிதில் புரிந்து கொள்வார்.

இந்த அரசு சினிமாவுக்கு இணக்கமான அரசாகவே செயல்பட்டு வருகிறது. இந்த அரசு உங்கள் கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றும், ஏற்கனவே தொழில் மிகவும் பின்தங்கி இருக்கின்ற நிலையில், கொரோனா பெரிய இடராக இருந்தது.

கொரோனாவில் மிகவும் பின் தங்கிய தொழிலில் சினிமா முக்கியமான ஒன்று. இந்த நிலையில் உதயநிதி போன்றவர்கள் உதவியாக இருப்பது எனக்கு மிகவும் பக்க பலமாக இருக்கிறது.

திரைத்துறையில் இருந்த உதயநிதி இப்போது அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார், அவருக்கு இந்த திரைத்துறை பற்றிய அனைத்து விவரங்களும் தெரியும், அதனால் எனக்கு இப்போது பாரம் குறைந்தது போல் இருக்கிறது.

தமிழ் சினிமா மீண்டு வெற்றிப்பாதையில் செயல்பட நீங்கள் குழுவாக இணைந்து என்ன செய்ய வேண்டுமென முடிவெடுத்தால் அதனை அரசாங்கம் செய்ய தயாராக இருக்கிறது என கூறிக்கொள்கிறேன்.

மானியம் வழங்குவது தொடர்பான இந்த செய்தியை நான் முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று, அது சீக்கிரம் நடக்க ஆவண செய்கிறேன். அதோடு விருது வழங்குவதற்கு உண்டான ஏற்பாடுகளையும், நான் முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று, அது விரைவில் நடப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்கிறேன். இந்த சிறப்புக்குரிய சங்கம் வெகு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1. தமிழ் திரைத்துறையில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது தமிழக அமைச்சரவையில் அமைச்சர் பொறுப்பை எற்று இருக்கிறார். அதற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்..

2. 20 வருடமாக புதுப்பிக்கப்படாமல் இருந்த சங்கத்தை புதுப்பிக்க உறுதுணையாக இருந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

3. பையனூரில் திரைப்பட நகருக்கான இடத்தில், தயாரிப்பாளர்களுக்கு வீடு கட்டி தருவதற்காக அரசு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

என் நெஞ்சில் குடியிருக்கும்.; விவேக் குரலில் ‘வாரிசு’ இசை வெளியீடு வீடியோ

என் நெஞ்சில் குடியிருக்கும்.; விவேக் குரலில் ‘வாரிசு’ இசை வெளியீடு வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் விஜய் – ராஷ்மிகா இணைந்து நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் 2023 பொங்கல் சமயத்தில் வெளியாகிறது.

இதில் இடம்பெற்ற 3 பாடல்களை இதுவரை வெளியிட்டுள்ளனர்.

முதல் பாடல் ‘ரஞ்சிதமே.. ரஞ்சிதமே..’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை அள்ளியது. இந்தப் பாடலை விஜய் பாடியிருந்தார்.

விஜய், மானசி இணைந்து பாடிய ‘ரஞ்சிதமே…’ பாடல் இதுவரை யூடியூப்பில் 10 கோடி (100 மில்லியன்) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.

இதன் பின்னர் சிம்பு பாடிய ‘தளபதி தீ தளபதி..’ என்ற பாடல் வெளியானது.

அதன்பின்னர் சின்ன குயில் சித்ரா பாடிய ‘அம்மா தாலாட்டு…’ பாடல் வெளியானது.

இந்நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளனர்.

அதில்… 2 வருடங்களுக்கு பிறகு விஜய்யின் குட்டி ஸ்டோரி.. என் நெஞ்சில் குடியிருக்கும்… SEE YOU SOON NANBA… உள்ளிட்ட வாசகங்கள் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

டிசம்பர் 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு தேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

The stage is set for the BOSS to arrive ?

#VarisuAudioLaunch is on Dec 24th from 4 PM onwards ❤️

#Thalapathy @actorvijay @directorvamshi @iamRashmika @MusicThaman @7screenstudio @TSeries #BhushanKumar #KrishanKumar #ShivChanana

#Varisu #VarisuPongal https://t.co/9l4CdpQNbt

More Articles
Follows