மாலத்தீவு பறக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல்.

இது மலையாள படத்தின் ரீமேக் என்பதும், அப்படத்தை இயக்கிய சித்திக்கே இப்படத்தை தமிழில் இயக்கி வருகிறார் என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப்ஷிவ்தசானி நடிக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் நிகிஷா பட்டேலும் நடிக்கிறார்.

தற்போது சென்னையில் இறுதிகட்ட படபிடிப்பு நடந்து வரும் நிலையில், படத்தின் ஒரு பாடல் காட்சி படமாக்க மால்தீவ்ஸ் தீவில் படப்பிடிப்பு நடைபெற்று அத்துடன் நிறைவடைகிறது.

வருகின்ற 27-ஆம் தேதி மாலத்தீவிற்கு செல்கின்றனர்.

அம்ரேஷ் இசையமைக்க வசனங்களை ரமேஷ் கண்ணா எழுதி வருகிறார்.

ஒளிப்பதிவை விஜய் உலகநாதன் மேற்கொள்ள எடிட்டிங்கை கே.ஆர்.கௌரி சங்கர் இயக்குகிறார்.

எம்.ஹர்சினி இப்படத்தை தயாரித்து வருகிறார்.

Bascar Oru Rascal team flies to Maldives for next shoot schedule

விவேகம் ரிலீஸ்; அஜித் ஆசையை நிறைவேற்றும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் தனக்கென பெரிய ரசிகர் வட்டமிருந்தும் அதை தன் சுய நலத்துக்காக பயன்படுத்தாவர் அஜித்.

ரசிகர் மன்றங்கள் வேண்டாம். கட்-அவுட் வேண்டாம். பாலாபிஷேகம் வேண்டாம் என்பார்.

என்னுடைய படங்கள் ரிலீஸ் ஆகும் சமயத்தில் நீங்கள் ஏதாவது செய்ய விரும்பினால், அந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவுங்கள்.

பாலை வீணாக்க வேண்டாம் என்றெல்லாம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் நாளை மறுநாள் வெளியாகவுள்ள விவேகம் படத்திற்கு அஜித்தின் அறிவுரைகளை அப்படியே செய்துக் காட்டப்போகிறார்களாம் கோவை மாவட்ட ரசிகர்கள்.

அன்றைய தினத்தில் பால் வாங்கி இல்லாதவர்களுக்கு கொடுப்பதும், உணவு வாங்கி பசியால் இருப்பவர்களுக்கு கொடுப்பது என தீர்மானித்திருக்கிறார்களாம்.

இதுபோன்று மற்ற நடிகர்களின் ரசிகர்களும் செய்வார்களா? என்பதை பார்ப்போம்.

Ajith fans Celebrates Vivegam release by helping poor peoples

ஏடிஎம்மில் ஆட்டய போட்டு பணம் கொடுத்த வழக்கு; பாலாஜி கோர்ட்டில் ஆஜர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில மாதங்களுக்கு முன்பு, மனைவியை அடித்த சர்ச்சையில் சிக்கினார் காமெடி நடிகர் பாலாஜி.

இந்நிலையில் மற்றொரு வழக்கு ஒன்றில் இன்று திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அதன் விவரம் வருமாறு…

கடந்த 2014ஆம் ஆண்டு திருப்பூரில் உள்ள ஏ.டி.எம்-மில் பணம் நிரப்பும் ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டதாக, தனியார் செக்யூரிட்டி நிறுவன மேலாளர் பரதன் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் தொடர்பாக விஷ்ணுவர்தன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அந்த விசாரணையின் போது, திருடிய பணத்தில், கலைநிகழ்ச்சி நடத்த பாலாஜிக்கு 5 லட்சம் முன்பணம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்து இருந்தார்.

மேலும் சொன்னப்படி குறிப்பிட்ட தேதிக்குள் நடத்தாததோடு அந்த பணத்தையும் பாலாஜி திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

அதன்படி இது தொடர்பான வழக்கில் இன்று திருப்பூர் நீதிமன்றத்தில் ’தாடி’ பாலாஜி ஆஜரானார்.

Actor Thadi Balaji in Thirupur Court for Cash Cheating issue

விவேகத்துடன் இணைந்தார் வேலைக்காரன்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படம் வருகின்ற ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இப்படம் தமிழகத்தில் மட்டும் 900க்கும் அதிம்மான தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பட டீசரை விவேகம் வெளியாகும் தியேட்டர்களில் திரையிட போகிறார்களாம்.

இத்தகவலை வேலைக்காரன் பட தயாரிப்பு நிறுவனமான ‘24 ஏஎம் ஸ்டூடியோஸ் அதிகாரபூர்வமாக ட்விட்டரில் தெரிவித்திருக்கின்றனர்.

‘வேலைக்காரன்’ படம் செப்டம்பர் 29ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaikkaran teaser screening with Vivegam movie in theatres

24AM STUDIOS®‏Verified account @24AMSTUDIOS
Happy to Announce #VelaikkaranTeaserInTheatres with Thala’s #Vivegam Worldwide on 24thAug.ThankYou @SathyaJyothi_ #Thala @directorsiva

விவேகத்தை விட அஜித்தே பெருசு; விஜய்யை பாராட்டிய பார்த்திபன் பல்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது பேசிய பார்த்திபன், ‘ஓபிஎஸ்-ம் ஈபிஎஸ்-ம் ஒண்ணு சேர்ந்தா என்ன ஆகும்னு தெரியாது.

ஆனா விஜய்யும், அவரது ரசிகர்களும் சேர்ந்தால் அது மாஸ். பின்னர் விஜய் ஒரு மிகச்சிறந்த CM என்றார்.
பின்பு அவரது ஸ்டைலில் CM-ன்னா கலெக்‌ஷன் மன்னன்” என்றார்.

இதனையடுத்து பார்த்திபன் பேச்சுக்கு பல்வேறு ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

முக்கியமாக அஜித் ரசிகர்கள் கைதட்டுறாங்க.. அதுக்காக எப்படி வேண்டுமானலாலும் பேசலாமா? கொடுத்த காசுக்கு மேல கூவுறாரு என பார்த்திபனை கலாய்த்தனர்.

எனவே இது குறித்து பார்த்திபன் அவரது ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களில் பதில் கருத்து ஒன்றை கவிதை வடிவில் பதிவிட்டுள்ளார்.

“காசுக்கு மாரடிக்காத Mass-ஆன பேச்சுக்கு மாசு நிறைந்த ஏச்சுக்கு ஆளானது இதுவே முதன்முறை!

வாயார/மனதார வாழ்த்துவது என் மேடை நாகரீகம். அவர் அழைத்தாலும் தலை நிமிர இப்படி சொல்வேன்.

“வேகத்தை விட விவேகம் பெருசு-ஆனா விவேகத்தை விட அஜீத்தே பெருசு!”-நான் கலைஞர்கள் அனைவருக்கும் நண்பன். ஆனால், சினிமாவுக்கு மட்டுமே ரசிகன்.

‘ஆளப்போறான்(?)சிறந்த(?)மனிதன்(?) வாழப்போறான் விவசாயி’-அதுவே நம்பிக்கை நிறைந்த என் பேச்சின் மெர்சலான மெசேஜ்!” என்று பதிவிட்டுள்ளார்.

லதா ரஜினியின் பள்ளிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லதா ரஜினிகாந்த் அவர்கள் சென்னை கிண்டியில் ஆஸ்ரம் பள்ளியை நடத்தி வருகிறார்.

இப்பள்ளி, ஒரு வாடகை கட்டிடத்தில்தான இயங்கி வருகிறது.

இதற்கான வாடகையை சில வருடங்களாக செலுத்தவில்லை என்று கூறி பள்ளிக்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர் அதன் உரிமையாளர்கள்.

எனவே அங்கு படித்த மாணவர்கள் ஆஸ்ரம் பள்ளியின் மற்றொரு கிளையில் படித்து வருதவாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லதா ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் பள்ளியை பூட்டி, நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால் ரூ.6 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாணவ-மாணவிகளின் படிப்பைக் கருத்தில் கொண்டு முதலில் சீலை அகற்ற உத்தரவிட்டுள்ளது.

மேலும் கோர்ட் உத்தரவுப்படி அந்த சீல் அகற்றப்பட்டதா என்பதையும் ஆய்வு செய்யவும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Court orders landowners to unseal Latha Rajinis Ashram school

More Articles
Follows