தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
எந்த சேனலில் எந்த நிகழ்ச்சியை அதிகம் பேர் பார்க்கின்றனர் என்பதை கணக்கிட்டு ஒவ்வொரு வாரமும் முடிவுகளை அறிவித்து வருகிறது பார்க் (BARC) நிறுவனம்.
இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படம் விஜய் படம் என்றும் 117.9 மில்லியன் பார்வைகளை பெற்று விஜய் பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியானது.
அதில், இரண்டாவது இடத்தில் ராகவா லாரன்ஸ் 76.2 மில்லியன், ரஜினிகாந்த் 65.8 மில்லியன், அக்ஷய்குமார் 58.8 மில்லியன், பிரபாஸ் 56.9 மில்லியன் என புள்ளி விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
தனக்கு பிடித்த நடிகரை முதலிடத்தில் அவரது ரசிகர்கள் வைப்பார்கள்.. எனவே இதை விஜய் ரசிகர்கள் செய்திருப்பார்கள் என கூறப்படுகிறது.
ஆனால் அந்த புள்ளி விவரம் போலியானது என்று மறுப்பு தெரிவித்துள்ளது பார்க் நிறுவனம்.
இந்த தவறான தகவலை விளம்பரப்படுத்த தங்கள் நிறுவனத்தின் அடையாளம் (LOGO) தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
Kindly note, we would like to intercept this, as this data isn’t published or shared by BARC India. Only consider data published by BARC India’s official accounts and website as authentic.
It has come to our attention that people are posting false data using BARC India’s logo. This is a serious breach and an offence. Please refer to data only published by BARC India and republished or shared by others using the official data.#BARCIndia #WhatIndiaWatched pic.twitter.com/HloK4z4TcB
— BARCIndia (@BARCIndia) July 20, 2020