தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இவர் ராஜமவுலியின் நான் ஈ மற்றும் விஜய்யின் புலி ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார்.
கேஎஸ். ரவிக்குமார் இயக்கிய முடிஞ்சா இவன புடி என்ற நேரடி தமிழ் படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில், இவர் தனது மனைவி ப்ரியாவிடம் விவாகரத்து பெற முடிவு செய்து, பெங்களூர் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தனர்.
ஆனால் சில காலங்களுக்கு பிறகு இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துவிட்டனர்.
ஆனால் இவர்கள் அளித்த மனுவை இருவரும் கண்டுகொள்ளாமல் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனிடையில் இவ்வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் 9 முறை விசாரணைக்கு வந்துவிட்டதாம்.
இதனால் கடுப்பான நீதிபதி அடுத்த விசாரணைக்கு இருவரும் ஆஜராகவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்து இருக்கிறார்.
விரைவில் நீதிமன்றத்தில் ஆஜராகி விவாகரத்து மனுவை வாபஸ் பெறுவார் சுதீப் என்று கூறப்படுகிறது.