தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இசை அமைப்பாளர் நடிகர் தயாரிப்பாளர் எடிட்டர் என பன்முகத் திறமை காட்டிய விஜய் ஆண்டனி தற்போது ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.
இந்த படத்தை தயாரித்து இயக்கி நடித்து இருக்கிறார் விஜய் ஆண்டனி.
இந்த படம் விரைவில் வெளியாகியுள்ள நிலையில் ‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த ராஜகணபதி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவில், தங்களது தயாரிப்பு நிறுவனம் நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கெனவே ஆய்வுக்கூடம் என்ற படத்தை தயாரித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படத்தின் கதையை தங்களின் அனுமதியின்றி அப்படியே காப்பியடித்து விஜய் ஆண்டனி நடிப்பில் படத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் நஷ்ட ஈடாக 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி.
அதில்… “ஆய்வுக்கூடம் படம் குறித்த எந்த தகவலும் எனக்கு எதுவும் தெரியாது. அந்த படத்தை பார்த்தது இல்லை என தெரிவித்தார்.
மேலும் வழக்கு தொடரப்பட்ட பின்னரே அந்த படத்தை பார்த்ததாகவும், பிச்சைக்காரன் – 2 படத்திற்கும் ஆய்வுக்கூடம் பட திரைக்கதைக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை” எனவும் விஜய் ஆண்டனி கூறியிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.சவுந்தர் பிறப்பித்துள்ள உத்தரவில்…
“பிச்சைக்காரன்-2 படத்தை வெளியிட அனுமதி. அதே வேளையில் படத்தை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை ஆடிட்டர் சான்றிதழுடன் 60 நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Ban on the movie ‘Pichaikaran 2’? Court order to submit collection details after release