ஜெயலலிதா மரணத்தால் விஜய் படக்குழு எடுத்த திடீர் முடிவு

ஜெயலலிதா மரணத்தால் விஜய் படக்குழு எடுத்த திடீர் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayalalitha vijayவிஜய் நடித்துள்ள பைரவா படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியானது.

டீசர் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலருக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இவை விரைவில் வெளியாகவிருந்த நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார்.

இதனால் தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இச்சமயத்தில் பைரவா பாடல்களை வெளியிட்டால் நன்றாக இருக்காது என்பதால் தற்போது தவிர்த்து விட முடிவு செய்துள்ளார்களாம்.

மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் பாடல்களை வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளது.

ஜெயலலிதாவுக்கு இளையராஜாவின் இசை அஞ்சலி

ஜெயலலிதாவுக்கு இளையராஜாவின் இசை அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayalalitha ilayarajaமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இளையராஜா தன் இசை மூலம் இசையஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவரே இந்த கீதத்தை இயற்றி, இசையமைத்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனதை உருக்கும் அந்த வரிகள் இதோ:

வானே இடிந்ததம்மா, வாழ்வே முடிந்ததம்மா,
தாயே எழும்பிடம்மா, தமிழக நாடே அழுகுதம்மா .,”

யாவும் இந்த மண்ணில் நிரந்தரமா, இருந்திடும்மா
நெஞ்சம் பதறுது, கதறுதம்மா., பிள்ளைகளை பாரம்மா

உன் சேவைகள் மறைந்திடுமா., உன்னை போலே யாரம்மா?
தாலாட்டு பாடாமல் தாயானாய் அம்மா

தாய் உன்னை காணாமல் நோயானோம் அம்மா
தாய் இல்லா பிள்ளைக்கும் நீதானே அம்மா
தவிக்கின்றோம் நீ மீண்டும் வர வேண்டும் அம்மா
பாரெங்கும் உன் புகழ் வீசுதேம்மா

பார் உந்தன் பிள்ளைகள் துடிப்பதை அம்மா
ஆறுகள் கண்களில் வழியுதே அம்மா
அநாதையாய் ஆனது நாங்கள் தான் அம்மா
ஆறுதல் இன்றியே போனதே அம்மா, அம்மா…

 

வந்தார்… அஞ்சலி செலுத்தினார்… பல்கேரியா பறந்தார் அஜித்

வந்தார்… அஞ்சலி செலுத்தினார்… பல்கேரியா பறந்தார் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith at chennai airportஜெயலலிதாவுக்கு இறுதியஞ்சலி செலுத்துவதற்காக பல்கேரியா நாட்டில் இருந்து படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை வந்தார் அஜித்.

கிட்டதட்ட 16 மணி நேர பயணம் செய்து வந்து இறங்கியதும், அம்மா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அப்பல்லோ ஆஸ்பத்திரி சென்று மூத்த பத்திரிகையாளர் சோ அவர்களுக்கும் நேரில் அஞ்சலி செலுத்தினார்

இந்நிலையில் நேற்று மீண்டும் சென்னையிலிருந்து பல்கேரியா பறந்தார் அஜித்.

சென்னை டூ பல்கேரியா சென்று வர மொத்தம் 12,500 கிமீ தூரம் இருக்கும் என கூறப்படுகிறது.

Again ajith fly to bulgaria for ak 57 shooting

த்ரிஷாவுடன் டூயட் பாடும் ‘பிரேமம்’ நிவின்பாலி

த்ரிஷாவுடன் டூயட் பாடும் ‘பிரேமம்’ நிவின்பாலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

trisha nivin paulyத்ரிஷா நடிக்கவந்து கிட்டதட்ட 14 ஆண்டுகளை கடந்துவிட்டார்.

இன்றும் அதே இளமையுடன் முன்னணி நாயகர்களுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என த்ரிஷா நடித்து வந்தாலும், இதுவரை நேரடி மலையாளப் படங்களில் நடிக்கவில்லை.

தற்போது முதன்முறையாக மலையாள சினிமாவில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இதில் பிரேமம் புகழ் ஹீரோ நிவின் பாலியுடன் டுடூயட் பாடுகிறார்.

ஷியாம்பிரசாத் இயக்கவுள்ள இந்த படம் விரைவில் தொடங்க உள்ளது.

இது த்ரிஷாவின் 60வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவுக்காக சிவகார்த்திகேயன்-ஆர்யா செய்த காரியம்

ஜெயலலிதாவுக்காக சிவகார்த்திகேயன்-ஆர்யா செய்த காரியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arya sivakarthikeyanகடந்த டிசம்பர் 5ஆம் தேதி நள்ளிரவு முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டார் என அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது.

அடுத்த நாள் சென்னை, மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அம்மாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரின் பிரிவை தாங்க முடியாத மக்கள் இன்னும் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.

அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் சிவகார்த்திகேயன், ஆர்யா, விஷ்ணு ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் அம்மா புகைப்படத்தை வைத்துள்ளனர்.

இவர்களைப்போல் த்ரிஷா, பிரேம்ஜி அமரன். சாந்தனு பாக்யராஜ் மற்றும் வெங்கட்பிரபு உள்ளிட்டோரும் அம்மா படத்தை வைத்துள்ளனர்.

விஜய்-சூர்யாவை முந்தி, ரஜினிக்கு அடுத்த இடத்தில் சிம்பு

விஜய்-சூர்யாவை முந்தி, ரஜினிக்கு அடுத்த இடத்தில் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini vijay suriya simbuஐட்யூன்ஸ் இண்டியா என்ற மியூசிக் நிறுவனம் இந்தாண்டில் வெளியான தமிழ் படங்களின் பாடல்களில் எது முதல் இடத்தை பிடித்துள்ளது என்பதை தெரிவித்துள்ளது.

இதில் இருமுகன் மற்றும் ரெமோ பாடல்கள் ஐந்து, ஆறு இடங்களில் உள்ளது.

நான்காவது இடத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த விஜய்யின் தெறி பாடல்கள் உள்ளது.

3வது இடத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் சூர்யா நடித்த 24 படப்பாடல்கள் உள்ளன.

இரண்டாவது இடத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் சிம்பு அச்சம் என்பது மடமையடா பாடல்கள் உள்ளது.

முதல் இடத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் ரஜினி நடித்த கபாலி படப்பாடல்கள் உள்ளது.

(Info via @blogeswari )

More Articles
Follows