சாட்சிகளை கலைத்துவிடுவார்; திலீப்பின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை பாவனாவை கடத்தி பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில், மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

இவர் தற்போது கேரளாவில் உள்ள ஆலுவா சிறையில் உள்ளார்.

இந்நிலையில் திலீப் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு மீதான விசாரணை கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

ஆனால் திலீப்புக்கு ஜாமீன் வழங்க கூடாது எனவும் அவர் மிகப்பெரிய நடிகர் என்பதால் வெளியில் வந்தால் சாட்சிகளை கலைத்துவிடுவார் எனவும் அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.

எனவே இந்த மனுமீதான தீர்ப்பு இன்று வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, இன்று மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் திலீப்பின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதற்கு முன்பே கடந்த ஜூலை 15-ம் தேதியும அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேஜிக் மேனையே மெர்சலாக்கிய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள மெர்சல் படத்தில் விஜய்யுடன் காஜல், சமந்தா, நித்யாமேனன் உள்ளிட்டவர்கள் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஒரு கேரக்டரில் விஜய் மேஜிக் நிபுணராகவும் நடித்துள்ளார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
இந்த கேரக்டருக்காக விஜய் மேஜிக் கற்றுக் கொண்டாராம்.

இதற்காகவே வெளிநாட்டிலிருந்து 3 மேஜிக் நிபுணர்கள் இந்தியா வந்து விஜய்க்கு மேஜிக் கற்றுக் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து மேஜிக் நிபுணரான கோகோ ரெக்யூம் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

“ஜோசப் விஜய் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் பிரபலமான நடிகர்.

கடந்த 2017 மே மாதம் அவருடன் பணியாற்றியதை மிகப்பெருமையாகக் கருதுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Magic Man praises Vijays dedication in Mersal movie

கார்த்திக் நரேன் இயக்கத்தில் மீசைய முறுக்கு நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரகுமான் நடித்த `துருவங்கள் 16′ என்ற படத்தின் தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பி பாரக்க வைத்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன்.

இவர் அடுத்த இயக்கவுள்ள படத்திற்கு `நரகாசூரன்’ என தலைப்பிட்டுள்ளார்.

இப்படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் பலர் நடிக்கின்றனர்.

ரோன் ஈதன் யோகன் இசையமைக்கும் இப்படத்தில் பாடல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதில் மீசைய முறுக்கு படப்புகழ் நாயகி ஆத்மிகாவும் இணைந்து இருக்கிறார்.

கௌதம் மேனனின் ஒண்றாகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் நரேனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இதன் சூட்டிங் வருகிற செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கி ஊட்டியில் தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற உள்ளது.

Aathmika teams up with Arvindswamy for Naragasooran

டோட்டல் பட்ஜெட்டில் பாதியை அள்ளியது 2.0 படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ’2.ஓ’.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ரூ. 400 கோடியில் இப்படத்தை தயாரித்துள்ள லைக்கா நிறுவனம் இதை அடுத்த 2018 ஆண்டு ஜனவரி 25ம் தேதி ரிலீஸ் செய்கிறது.

ஓரிரு தினங்களுக்கு முன் இதன் மேக்கிங் டீசர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதன் சாட்டிலைட் உரிமை ரூ.110 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

மேலும் ஆந்திரா மற்றும் தெலங்கானா தியேட்டர் வெளியீட்டு உரிமை ரூ.81 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

ஆகமொத்தம் படத்தின் பட்ஜெட்டில் இதுவரை பாதிவரை விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பட வெளியீட்டிற்கு முன்பே வியாபார ரீதியாக பல சாதனைகளை 2.ஓ படைக்கும் என எதிர்பார்க்கலாம்.

2PointO sold out for Rs 200c till now which is half budget of this movie

பிக்பாஸ்க்கு பிறகு ஓவியா செய்த ட்வீட்; ச்சும்மா அதிருதுல்ல…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர்கள் கலந்துக் கொண்ட போது இது வேலையில்லா நடிகர்களுக்கு 100 நாட்கள் வேலைத்திட்டம் என பலரும் கிண்டல் செய்தனர்.

ஆனால் பல படங்களில் நடித்தும் கிடைக்காத புகழை இந்த நிகழ்ச்சி மூலம் பலரும் பெற்றனர்.

அதில் மிக மிக முக்கியமானவர் ஓவியா.

அதில் பங்கேற்று வந்த பின்னர் இவருக்கு சினிமாவில் மார்கெட் கடுகடுவென உயர்ந்துள்ளது.

இந்நிலையில் ஓவியா நீண்ட நாட்களுக்கு பிறகு டிவிட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில் ’உங்களிடம் இருந்து கிடைத்த அன்பை விவரிக்க வார்த்தையில்லை.

உங்கள் அன்பால் நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.

உங்களின் அன்புக்கு நன்றியுடனும் பொறுப்புடனும் நிச்சயம் இருப்பேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

ஓவியாவின் இந்த ட்வீட்டை 14 ஆயிரம் பேர் ரீடிவிட் செய்தும் 50 ஆயிரம் பேர் லைக்கும் செய்துள்ளனர்.

To get more updates of Actress #Oviya follow this page
Oviya fan club

Bigg Boss fame Oviya tweet goes viral

தென்னிந்திய சினிமாவில் மெர்சலுக்கு கிடைத்த அடுத்த பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இப்படத்தை இந்தாண்டு 2017 தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இது ஸ்ரீதேனாண்டாள் நிறுவனத்தின் 100வது படம் என்பதால் இதை மிகப்பிரம்மாண்டமாக வெளியிடவுள்ளனர்.

இதனிடையில் தென்னிந்திய வரலாற்றில் முதன்முறையாக இப்படத்தின் ட்விட்டரில் எமோஜி ஐகான் உருவாக்கப்பட்டது.

இந்த சாதனையை தொடர்ந்து மற்றொரு சாதனையையும் இப்படம் படைத்துள்ளது.

அதாவது ஒரு நிறுவனத்தின் பெயரில் மற்ற நிறுவனங்கள் இருக்கக்கூடாது என்பதாலும் அதன் புகழை மற்ற நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற அடிப்படையிலும் டிரேட்மார்க் சிம்பிள் வழங்கப்படும்.

தற்போது இது மெர்சல் படத்திற்கும் கிடைத்துள்ளது.

இதுகுறித்து இப்படத் தயாரிப்பாளரான ஹேமா ருக்குமணி கூறியதாவது…

பொதுவாக நிறுவனத்திற்கே TradeMark வாங்குவார்கள். நாங்கள் முதன்முறையாக ஒரு படத்திற்கு இதை பெற்றுள்ளோம்.

இது எங்களுடைய பொருள். இதை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. மேலும் மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்திக் விடவும் கூடாது.

ஆனால் விஜய் மேல் அன்பு கொண்ட ரசிகர்கள் இதை பயன்படுத்தி டிசைன் செய்துக் கொள்ளலாம்.

இது விஜய்யுடன் எங்களது முதல் படம் என்பதால் இது மிகவும் ஸ்பெஷலான படம். எனவே அவரை கௌரவிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

First Time in South Indian film history Mersal got TradeMark

More Articles
Follows