ரஜினியின் அம்மாவாக நடித்த சத்யபிரியாவுக்கு டாக்டர் பட்டம்

ரஜினியின் அம்மாவாக நடித்த சத்யபிரியாவுக்கு டாக்டர் பட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baasha fame Actress Sathyapriya felicitated with Doctorate by AUGPபாட்ஷா படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்தவர் நடிகை சத்யபிரியா.

இவருக்கு கலைத்துறை சாதனைக்காக டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி முதன்மை மாணவராய் வந்து, மருத்துவ துறையில் சேர தகுதியுடன் இருந்தார் சத்யபிரியா.

ஆனால் துரதிஷ்டவசமாக சத்யப்ரியா அந்த கனவை தூக்கி எறிய வேண்டியதாயிற்று. ஏனெனில் குடும்பச்சூழலில் அவருக்கு கிழே 3 தம்பிகளும் தங்கையும் இருந்தனர்.

அன்றும் சரி, இன்றும் சரி, பல கனவுகள் சில காரணங்களால் நனவாகாமலேயே போகின்றன. ஆனால் சில நேரங்களில் வாழ்க்கை நாம் கண்ட கனவை வேற வழியில் நனவாக்கும். தற்போது இங்கிலாந்தை சேர்ந்த AUGP (Academy of Universal Global Peace) சத்யப்ரியா அவர்களுக்கு முனைவர் பட்டம் அளித்து கெளரவித்துள்ளது.

தனக்கு அளிக்கப்பட்ட முனைவர் பட்டத்தை குறித்து நடிகை சத்யப்ரியா கூறுகையில், “நான் மருத்துவத்துறை தேர்ந்தெடுத்து மருத்துவராக வேண்டும் என்பதே என் அம்மாவின் விருப்பம்.

இப்போது நான் பெரும் மகிழ்ச்சியில் இந்த முனைவர் பட்டத்தை பெற்று கொள்கிறேன்!”

1972 முதல் நடிகையாகவும், திரைத்துறையில் ஓர் அங்கமாக, 45 ஆண்டுகளாய் 300 படங்கள் நடித்துள்ள சத்யப்ரியா கூறுவதாவது…

”இந்த முனைவர் பட்டத்தால் கெளரவிக்கப்பட்ட நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். திரைத்துறையில் இதுவரை நான் என் குடும்பத்திற்க்காக உழைத்தேன்.

இப்போது என் வாரிசுகள் எல்லோரும் நல்ல நிலையில் உள்ளதால், சமுதாயத்திற்கு என்னால் இயன்றதை செய்ய விழைகிறேன். இந்த கெளரவ பட்டம் என்னை சமுதாயத்தின் மேம்படுத்தலை நோக்கி கொண்டு செல்கிறது.”

பன்முக திறன் கொண்ட நடிகை சத்யப்ரியா, ஒப்பற்ற தன் திறமையால் பாராட்டுக்குரிய பல கதாபாத்திரங்களின் வழி தென்னிந்திய திரைப்படங்களில் பயணித்ததோடு நில்லாமல், சீரியல்கள் வழி தமிழ் மக்களின் உள்ளங்களிலும் குடியேறியிருக்கிறார்.

அவரது மகன், MS பட்டம் பெற்று அமெரிக்காவில் சாப்ட்வேர் நிறுவனமொன்றில் பணிப்புரிந்து கொண்டிருக்கிறார்.

இங்கிலாந்தில் வாழும் கட்டிட கலைஞரான அவரது மகள், இந்திய நிறுவனமொன்றிற்கு ஆன்-லைன் மூலம் பணிப்புரிந்து கொண்டிருக்கிறார். இருவரும் தங்கள் குடும்பங்களுடன் நன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

இங்கிலாந்து AUGP – Academy of Universal Global Peace என்ற அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவரான மது கிருஷ்ணன், உலகெங்கிலும் உள்ள திறமைசாலிகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு முனைவர் பட்டமளித்து கெளரவித்து வருகிறார்.

கலைத்துறையில் நடிகை சத்யப்ரியாவின் பங்களிப்பை பாராட்டும் விதமாக அவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இன, மொழி, சாதிய பாகுபாடுகளை களைந்து, உலக அமைதி நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது AUGP நிறுவனம்.

Baasha fame Actress Sathyapriya felicitated with Doctorate by AUGP

Baasha fame Actress Sathyapriya felicitated with Doctorate by AUGP

குருதி ஆட்டம் படத்தில் அதர்வாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்

குருதி ஆட்டம் படத்தில் அதர்வாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Priya Bhavani Shankar Gets Onboard For Atharvaas Kuruthi Aattamசின்னத்திரையில் மிகவும் கொண்டாடப்பட்ட நடிகை பிரியா பவானி சங்கர். சினிமாவில் அறிமுகமான பிறகு நல்ல நடிகை என்ற பெயரை பெற்றார்.

அத்தோடு பல நல்ல பட வாய்ப்புகளும் அவரை தேடி வருகின்றன. அடுத்து அதர்வா முரளி நடிக்க, ஸ்ரீகணேஷ் இயக்கும் குருதி ஆட்டம் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம செய்யப்பட்டிருக்கிறார்.

பல நடிகைகளை படத்தின் வியாபாரத்திற்காக மார்க்கெட் அடிப்படையில் நடிக்க ஒப்பந்தம் செய்வார்கள்.

ஆனால் ஒரு சிலர் தான் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கும் நல்ல நடிகையை, அறிமுக நடிகையாக இருந்தாலும் ஒப்பந்தம் செய்ய முன்வருவார்கள். அந்த வகையில் இதுவரை நடித்த அனைத்து படங்களிலும் தன்னை நிரூபித்தவர் பிரியா பவானி சங்கர்.

“இது முற்றிலும் உண்மை, கதை சொல்லும் போது நானே அதை கவனித்தேன். பொதுவாக, வளர்ந்து வரும் காலகட்டத்தில் நடிகைகள் முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் எதையும் யோசிக்காமல் உடனே ஒப்புக் கொள்வார்கள்.

ஆனால் பிரியா அதில் விதிவிலக்கானவர், “என்றார் இயக்குனர் ஸ்ரீகணேஷ்.

மேலும் கதை சொல்ல அவரை சந்தித்த போது, அந்த கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தாலும், அவரது கதாபாத்திரத்துக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கலாம் என அவருடைய கருத்தை வெளிப்படையாக சொன்னார். உண்மையில், படத்தின் கதை மற்றும் கதாபாத்திரத்தின் மீது அவர் காட்டிய ஈடுபாடு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

உடனடியாக நானும் அவரது கதாபாத்திரத்தை கொஞ்சம் மாற்றியமைத்தேன், அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், படத்தில் நடிக்கவும் சம்மதித்தார்” என்றார் ஸ்ரீகணேஷ்.

மதுரை பின்னணியில் அமைந்திருக்கும் இந்த கேங்க்ஸ்டர் படத்தில் பிரியா பவானி சங்கர் ஆசிரியராக நடிக்கிறார். ராதாராவி, ராதிகா சரத்குமார் போன்ற முக்கிய நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ‘குருதி ஆட்டம்’ ஏற்கனவே தமிழ் சினிமாவில் பேசப்படும் படமாக மாறியிருக்கிறது.

ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் ஆகியோர் இந்த குருதி ஆட்டம் படத்தை தயாரிக்கின்றனர்.

Priya Bhavani Shankar Gets Onboard For Atharvaas Kuruthi Aattam

*களவாணி சிறுக்கி* படம் பார்த்தால் 143 பிராண்ட் லுங்கி இலவசம்!

*களவாணி சிறுக்கி* படம் பார்த்தால் 143 பிராண்ட் லுங்கி இலவசம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Watch Kalavaani Sirukki movie ang get one 143 Lungi freeராணா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக நடிகர்கள் சாமி, திவாகர், அஞ்சு நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் களவாணி சிறுக்கி.

கதை முன்னோட்டம்…

கிராமத்தில் படித்துவிட்டு வீட்டில் இருக்கும் கஸ்தூரியை ஊரில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் தாய் மாமா மருதுவிற்கு திருமணம் செய்துவைக்க கஸ்தூரியின் அம்மா ஏற்பாடு செய்கிறார்.

இந்நிலையில் அதே ஊரில் கறிக்கடை நடத்தும் பாண்டி என்பவனும் கஸ்தூரிக்கு மாமன் என்பதால் கல்யாணத்தில் பிரச்சனை வருகிறது பாண்டியும் நான் தான் கஸ்தூரியை திருமணம் செய்வேன் என சவால்விட்டு செல்கிறான்.

கஸ்தூரியிடம் டியூஷன் படிக்கும் கதிர் என்பவனுக்கு இவளை எப்படியாவது அடையவேண்டும் என்ற ஆசை உள்ளது.

அதே நேரத்தில் அந்த ஊரிற்கு வரும் டாக்டர் அரவிந்துக்கும் கஸ்தூரிக்கு காதல் மலர பல பிரச்சனைகளுக்கு நடுவில் அரவிந்துக்கும் கஸ்தூரிக்கு கல்யாணம் நடைபெறுகிறது.

முதலிரவு நேரத்தில் அரவிந்த் இறந்துவிட, அரவிந்தை கொன்றது மருதுவா, கதிரா என்பதை விறுவிறுப்பாக சொல்லும் படம் தான் களவாணி சிறுக்கி.

இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 5 ம் தேதி தமிழகம் முழுவதும் திரைக்கு வருகிறது. ரசிகர்கள் கூட்டம் இப்போது திரையரங்கில் குறைந்து கொண்டு வருவதை அறிந்த இப்பட தயாரிப்பாளர் புது யுக்தி ஒன்றை கையாளப்போகிறார் அதுஎன்னவென்றால் படம் வெளியாகும் 5,6,7 ஆகிய தேதிகளில் காலை காட்சிக்கு மட்டும் திரைக்கு வரும் ரசிகர்களுக்கு ஒரு டிக்கெட்க்கு ஒரு விலையுர்ந்த 143 பிராண்ட் கைலி ஒன்றை பரிசாக தர திட்டமிட்டுள்ளார்.

இதன் மூலம் ரசிகர்களும் திரைக்கு வருவார்கள் படமும் வெற்றிபெறும் என்கிறார் தயாரிப்பாளர் R.நமச்சிவாயம் .
இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ட்ரீம் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

நடிகர்கள் :
சாமி – ஹீரோ
அஞ்சு – ஹீரோயின்
திவாகர், சங்கர் கணேஷ், கௌரி சங்கர், தமீம், நமச்சிவாயம், கருப்பையா, மாரியம்மாள், பிரேமலதா,வடிவேல் சுதா, தீபா, மீனா

தொழிநுட்பக்கலைஞர்கள் :

தயாரிப்பாளர் – R.நமச்சிவாயம்
கதை, திரைக்கதை, இயக்கம் – ரவி ராகுல்
வசனம் – நந்தா,ஷங்கர் சிவா
ஒளிப்பதிவு – D.மோகன்
எடிட்டிங் – ராம்நாத்
இசை – தருண் ஆன்டனி
கலை – சுரேஷ்
நடனம் – சிவா கிருஷ்ணா
சண்டை பயிற்சி – டேஞ்ஜர் மணி
லேப் – கியூப் சினிமாஸ்
தயாரிப்பு நிறுவனம் – ராணா கிரியேஷன்ஸ்
மக்கள் தொடர்பு – தியாகராஜன் P

Watch Kalavaani Sirukki movie and get one 143 Lungi free

களவாணி சிறுக்கி ட்ரைலர் லிங்க் :

https://www.youtube.com/watch?v=u8xYV20jPV8&feature=youtu.be

வெற்றிமாறன் தயாரிப்பில் திருநாள் இயக்குனருடன் இணையும் மனீஷா

வெற்றிமாறன் தயாரிப்பில் திருநாள் இயக்குனருடன் இணையும் மனீஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Manisha Yadav next movie with Producer Vettrimaaranவழக்கு எண் 18/9 படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமானவர் மனீஷா யாதவ்.

இதனையடுத்து ஆதலால் காதல் செய்வீர், த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஜன்னல் ஓரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அண்மையில் வெளியான ஒரு குப்பை கதை படத்தில் தன் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

தற்போது சண்டமுனி என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து டைரக்டர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை திருநாள் படத்தை இயக்கிய ராம்நாத் இயக்குகிறார்.

இப்படத்திலும் மனீஷாவுக்கு ஓர் அழுத்தமான கிராமத்து பெண் வேடம் தானாம்.

Manisha Yadav next movie with Producer Vettrimaaran

ஹீரோயின்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 2 படங்கள் ஆயுதபூஜையில் மோதல்

ஹீரோயின்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 2 படங்கள் ஆயுதபூஜையில் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaatrin Mozhi and Andava Kaanom movies clash on 18th Oct 2018விநாயகர் சதுர்த்தி முடிந்துவிட்டது. இனி ஆயுத பூஜை விடுமுறை நாட்களை குறிவைத்து படங்களை வெளியிட தயாராகி வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.

இதுவரை ஆயுதபூஜைக்கு 4 படங்கள் வெளியாவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள வடசென்னை படம் ரிலீஸ் ஆகிறது.

இத்துடன் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள சண்டக்கோழி-2 திரைப்படமும் வெளியாகிறது.
இவையிரண்டும் ஹீரோக்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளன.

இத்துடன் ஹீரோயின்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள 2 படங்களும் வெளியாகிறது.

தனஞ்செயன் தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி திரைப்படம் வெளியாகிறது.

அத்துடன் ஜே.எஸ்.கே. தயாரிப்பில் வேல்மதி இயக்கியுள்ள ஸ்ரேயா ரெட்டியின் நடித்துள்ள அண்டாவக் காணோம் படமும் வெளியாகிறது.

Kaatrin Mozhi and Andava Kaanom movies clash on 18th Oct 2018

இளையராஜாவே தடுத்தாலும் அவர் பாடல்களை பாடுவேன்..; எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இளையராஜாவே தடுத்தாலும் அவர் பாடல்களை பாடுவேன்..; எஸ்.பி. பாலசுப்ரமணியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ilayaraja and SPBகடந்த ஆண்டு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் மகனும் நடிகருமான பாடகர் சரண் அமெரிக்காவில் எஸ்.பி.பி 50 என்ற இசை நிகழ்ச்சியை நடத்தினார்.

அந்த சமயத்தில் இளையராஜா, எஸ்.பி.பி.க்கு நோட்டீஸ் அனுப்பினார்.

அதில், நான் இசை அமைத்த பாடல்களை யார் பாடினாலும் எனக்கு ராயல்டி தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்பிறகு நடைபெற்ற இசை கச்சேரிகளில் எஸ்.பி.பாலசுப்பிரணியம் இளையராஜா பாடல்கள் பாடவில்லை.

இந்நிலையில் தற்போது மீண்டும் பாட ஆரம்பித்திருக்கிறார். இதுகுறித்து, அவர் கூறியிருப்பதாவது :

இளையராஜா, தனது பாடல்களை பாடக்கூடாது என்று சொன்னாலும் பாடிக் கொண்டு தான் இருப்பேன். அவர் இசையமைத்த பாடல்களை பாடுவதற்கு நேரடியாக எனக்கு தடை விதிக்கவில்லை.

என் பையன் நடத்திய ஒரு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். அந்த பிரச்னை இன்னும் ஓயவில்லை. அவர் ஏன் அப்படி செய்தார் என்று எனக்கு தெரியாது.

இது நடந்த பிறகு ஒரு ஆண்டுவரை அவரது பாடல்களை பாடாமல் இருந்தேன். அதன்பிறகு யோசித்தேன். நான் இளையராஜா இசையில் தான் அதிகமாக பாடினேன்.

எனவே அதிலும் எனக்கு அதிக பங்கு இருக்கிறது என்று தோன்றியது. அதன்பிறகு பாட ஆரம்பித்து விட்டேன்.

இதற்காக சட்டப்படி அவர் நடவடிக்கை எடுத்தால் நானும் சட்டப்படியே பதில் சொல்ல முடிவு செய்து இருக்கிறேன். அவரது பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் பாடுவேன், நிறுத்தவே மாட்டேன்.

இந்தமாதிரி செய்துவிட்டாரே என்பதற்காக அவர் மீது இம்மியளவும் கவுரவம் குறையவில்லை. ஒரு இசையமைப்பாளராக இப்போதும் சரி, எப்போதும் சரி அவரது காலை தொட்டு கும்பிடுவதற்கு தயங்கவே மாட்டேன்.”

இவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.

More Articles
Follows