பாகுபலியின் அதிகபட்ச சந்தோஷம் பாகிஸ்தான்; ராஜமௌலி ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல.

உலக சினிமாவையே நம் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த பெருமை இதன் டைரக்டர் ராஜமௌலியை சேரும்.

பாகுபலி 2 தற்போது சீனாவிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

இப்படம் தொடர்பான புரோமோசன் மற்றும் பணிகளுக்காக பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளார் ராஜமௌலி.

இந்நிலையில் பாகுபலி படம் பாகிஸ்தான் சினிமா விழாவில் திரையிடப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாம்.

அதற்காக இயக்குனரை அங்கு அழைத்துள்ளார்கள்.

இதனால், ராஜமௌலி மிகவும் சந்தோஷமாக உள்ளதாகவும் மற்ற நாடுகளை காட்டிலும் பாகிஸ்தான் செல்வது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாக ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

Baahubali has given me opportunities to travel to a number of countries… The most exciting of them all is now, Pakistan. Thank you Pakistan international film festival, Karachi for the invite.

— rajamouli ss (@ssrajamouli) March 28, 2018

சிவகார்த்திகேயன் பட வில்லனுக்காக தயாரிப்பாளராகும் நஸ்ரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமாவில் நடித்து வந்தாலும் அங்குள்ள நடிகைகளுக்கு தமிழ் சினிமா ஜொலிக்க அதிக ஆர்வம் எப்போதும் உண்டு.

ஆனால் மலையாள நடிகர்கள் அப்படியில்லை. எப்போதாவது நல்ல படங்கள் கிடைத்தால் தமிழில் நடித்துவிட்டு போவார்கள்.

மோகன்லால், மம்முட்டி, கலாபவன் மணி முதல் துல்கர் சல்மான், பிரித்வி ராஜ் வரை அப்படிதான்.

அண்மையில் வெளியான சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் பகத் பாசில்.

இவர் நடிகை நஸ்ரியா நஸீமின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது கணவர் பஹத் பாசில் நடிக்கும் புதுப்படத்தை தயாரித்து வருகிறார் நஸ்ரியா.

இதன் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

கௌதம் மேனனுடன் மோதல்; கார்த்திக் நரேனுக்கு நரகாசூரன் தந்த நரக வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரகுமான் நடித்த ‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன்.

இப்படம் அனைத்து தரப்பினைரையும் கடந்து மாபெரும் வெற்றி பெற்றது.

இதனையடுத்து கௌதம் மேனன் தயாரிப்பில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா நடிக்க ‘நரகாசூரன்’ படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் நரேன்.

இப்படம் வெளியாவதற்கு தாமதமாகி வருவதால் அடுத்ததாக, ‘நாடக மேடை’ எனும் படத்தை இயக்க இருக்கிறார் கார்த்திக் நரேன்.

தற்போது கௌதம் மேனனுக்கும் கார்த்திக் நரேனுக்கும் உள்ள மோதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

‘சில நேரங்களில் தவறான நம்பிக்கை உங்களைக் கொன்றுவிடும். ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள். அப்படி தவறான நம்பிக்கை வைத்தால், உங்கள் கனவு எல்லாத் திசைகளில் இருந்தும் சிதைந்து போவதை நீங்கள் கண்ணால் காண நேரிடும்” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் கார்த்திக் நரேன்.

இந்நிலையில் கவுதம் மேனன், ‘ஒரு வீடியோவை பாராட்டி பதிவு செய்திருக்கிறார். பின்னர், சில இளம் இயக்குனர்கள் படத்தை உருவாக்கி விட்டு அதைப் பற்றி புலம்பிக் கொண்டே இருகிறார்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை குறிப்பிட்டு, ‘பலர் என்னிடம் வேண்டாம் என அறிவுரை கூறினாலும் நான் உங்களை நம்பினேன். ஆனால் என்னை நீங்கள் எங்களை குப்பையாக்கி விட்டீர்கள்.

கடைசியில் நாங்களே முதலீடு செய்ய வேண்டியதாகிவிட்டது. தயவு செய்து இனி யாரையும் இப்படி ஏமாற்றாதீர்கள்” என கார்த்திக் நரேன் பதிவிட்டுள்ளார்.

டுவிட்டரில் தயாரிப்பாளர் கவுதம் மேனனும், இயக்குனர் கார்த்திக் நரேனும் மோதிக் கொள்வதால், நரகாசூரன் படம் வெளியாகுமா? என்ற சந்தேகம் கோலிவுட்டில் எழுந்துள்ளது.

Karthick Naren‏Verified account @karthicknaren_M

Sometimes a misplaced trust may kill you. People should think twice before taking it for a ride. The last thing you want to see is your passion getting butchered from all the directions for a mistake you did not commit. Threshold!

Karthick Naren‏Verified account @karthicknaren_M 2h2 hours ago

Karthick Naren Retweeted Gauthamvasudevmenon

While everybody advised against it I had the pair to trust you & collaborate sir. In return we were treated like trash & made to invest on our own. I think its better to whine & confront instead of running away. Please don’t do this to any other young filmmaker sir. It hurts!

மாணவர்களிடம் உள்ள தெளிவு மத்திய அரசிடம் இல்லை..: கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், இன்று சென்னைக்கு அருகில் உள்ள பொன்னேரில் தனியார் கல்லூரி ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்களிடம் பேசினார்.

அவர் பேசியதாவது…

“என்னைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அதைப் பார்க்கும் போது நியாயமாக பதட்டம்தான் வரும். பெரும் கோபத்தில் வந்தவர்களுக்கு பதட்டம் தெரியாது. போருக்குச் செல்பவர்களுக்கு பதட்டம் போய்விடும், பயமும் போய்விடும்.

இனி, கடமையைச் செய்யும் நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறேன். நான் செய்ய வேண்டியதை நானும், நீங்கள் செய்ய வேண்டியதை நீங்களும் செய்யும் ஒரு குடும்பமாக இருக்கப் போகிறோம்.

நான் தமிழக முதல்வரானால் எனது முதல் கையெழுத்து “லோக் ஆயுக்தாவாகதான்” இருக்கும்.

படிப்பு மிக மிக முக்கியம். அதை செய்து விட்டு நீங்கள் வெளியே வந்ததும், உங்களை தாக்கப் போவது அரசியலும், ஊழலும்தான். அதை எதிர்கொள்ள வேண்டும் என்றால் உங்களுக்கு அரசியல் புரிந்திருக்க வேண்டும்.

நீங்கள் அரசியல்வாதி ஆக வேண்டும் என்று சொல்லவில்லை. அரசியல் தெரிந்தவர்களாக, புரிந்தவர்களாக இருந்தீர்கள் என்றால் வரும் அரசியல்வாதி, நியாயமான அரசியல்வாதியாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லாதவனாக ஆகிவிடுவான். அதை நான் எதிர்பார்க்கிறேன்.

என்னை பல பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்ல விடாமல் பல தடைகள் இருக்கின்றன. அங்கே போய் பேசி புரிய வைத்துவிடுவேனோ என்ற பதட்டம் பலருக்கு இருக்கிறது.

நான் கல்லூரிக்குப் போவதை தடை செய்யலாம், நான் கற்பதைத் தடை செய்ய முடியாது.

ஏதாவது, நல்லது செய்யுங்கள் என்று நம்பி கைகொடுக்கும், ஒரு தோழரிடம், தொண்டனிடம் நான் பாடம் கற்கிறேன். அந்த நம்பிக்கை எனக்கு பாடமாகிறது.

என்னுடைய மேடைகளில் பொன்னாடைகளைத் தவிர்க்கிறோம், பூமாலைகளைத் தவிர்க்கிறோம், காலில் விழுதைத் தவிர்க்கிறோம். இவையெல்லாம் மக்கள் நீதி மய்யம் மேடைகளில் நிகழாது, நிகழ்ந்தால் தடுக்கப்படும்.

மாணவர்களைப் பார்த்து நான் பேச வேண்டும், எனக்குத் தெரிந்ததை அவர்களுக்குச் சொல்ல வேண்டும், அவர்களிடமிருந்து நான் கற்க வேண்டும் என்ற சாதாரண தமிழனின் ஆசையைத் தடை போடும் சிலர் எனக்கு வேடிக்கை மனிதர்களாகவே தெரிகிறார்கள்.

அந்த வேடிக்கையை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கட்டும். நாம் வேலையைச் செய்வோம்.

பின்னர் ஒரு மாணவி எழுப்பிய நீட் தேவையா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், “உங்களுக்கு இருக்கும் தெளிவு மத்தியில் யாருக்கும் இல்லை. அது, யாருக்குமே இல்லை என்பது தான் சரியான பதில்.

காரணம் நம் வீட்டுப் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது நாம் தாம். நாம் என்பது தமிழகத்தை சொல்கிறேன்.

தமிழக மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என தமிழக அரசு தான் முடிவு செய்யவேண்டும். நீங்கள் கேட்ட கேள்விக்கு இதில் பதில் உள்ளது” என கமல்ஹாசன் பேசினார்.

Kamal speech at Ponneri Pvt College about politics and society

ஹிந்தியிலும் எதிர்பார்ப்புக்குள்ளான ஹரிஷ் கல்யாண்-ரைசாவின் காதல் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யுவன் சங்கர் ராஜா, கே புரொடக்‌ஷன்ஸ் ராஜ ராஜன் இணைந்து தயாரித்து வரும் படம் ‘பியார் பிரேமா காதல்’.

இப்படத்தை இலன் என்பவர் இயக்கி வருகிறார்.

இதில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழடைந்த ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும், ரைசா நாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் மாற்று மொழி உரிமையை வாங்க பெரும் போட்டி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

பிரபல ஹிந்தி பட தயாரிப்பு நிறுவனங்கள் இந்த படத்தின் இந்தி உரிமைக்காக தயாராகி கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

காதலுக்கு மொழி அவசியமில்லை. காதலை பற்றிய படங்களுக்கும் மொழி அவசியமில்லை. “High on Love” என்று துவங்கும் ஒரு பாடல் ஏற்கனவே வெளிவந்து சமூக வலைதளங்களில் பெரும் ஹிட் ஆனதின் பிரதிபலன் இது.

இறுதி கட்ட படப்பிடிப்பில் இருப்பதால், இந்தி ஆக்கத்தை பற்றிய விவரங்கள் தெரிவிப்பதற்கு இன்னமும் அவகாசம் தேவை என்கிறார் இயக்குனர் இலன்.

Pyaar Prema Kaadhal movie hindi theatrical rights news updates

சினிமா ஸ்டிரைக் கூட ப்ளஸ்தான்; ராதா மகள் கார்த்திகா ஏன் இப்படி சொன்னார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீவா நடித்த கோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் கார்த்திகா.

இவர் முன்னாள் நடிகை ராதாவின் மகள் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இவர் தற்போது நடைபெற்று வரும் சினிமா ஸ்டிரைக் குறித்து தன் ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார்.

வருகிற மார்ச் 30ஆம் தேதி கமல், அம்பிகா நடித்த காக்கி சட்டை படம் ரி-ரிலீஸ் ஆகிறது.

அப்பட போஸ்டரை பதிவிட்டு இந்த சினிமா ஸ்டிரைக்கால் மற்றொரு பக்கம் நல்லது நடக்கிறது.

மிகச்சிறந்த படங்கள் மீண்டும் வெளியாகிறது என பதிவிட்டுள்ளார்.

நடிகை அம்பிகா இவரது பெரியம்மா என்பது குறிப்பிடத்தக்கது.

Karthika Nair‏Verified account @KarthikaNair9 2h2 hours ago
The plus side of the Tamil film strike.. re-release of some golden movies

Some Golden hit movies releasing in Cinema Strike is plus says Karthika

More Articles
Follows