தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியாவில் சினிமா தோன்றி 100 ஆண்டுகளை கடந்துவிட்டது. ஆனால் இதுவரை எந்த படமும் செய்யாத சாதனையை முதன்முறையாக பாகுபலி2 நிகழ்த்த போகிறது.
ராஜமௌலி இயக்கிய இப்படம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
நான்கு நாட்களை கடந்துள்ள நிலையில் ரூ. 600 கோடியை உலகம் முழுவதும் வசூலித்துள்ளது.
தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால், இன்னும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
எனவே இன்னும் ஓரிரு தினங்களில் இப்படம் ரூ. 1000 கோடியை வசூலித்துவிடும்.
இந்திய சினிமா வரலாற்றில் எந்த ஒரு படமும் இத்தனை கோடிகளை வசூலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவதார், டைட்டானிக், லார்ட் ஆஃப் ரிங்ஸ், ஹாரி பார்ட்டர், ஸ்பைடர் மேன், பாஸ்ட் அண்ட் பியூரியஸ் போன்ற ஹாலிவுட் படங்களே இதுபோன்ற சாதனைகளை படைத்துள்ளது.
இப்படம் ஆயிரம் கோடி வசூலிக்கும் பட்சத்தில் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்கள் பங்கு தொகை போக எப்படியிருந்தாலும் ரூ. 600 கோடி வரை தயாரிப்பாளருக்கு கிடைக்கும் என்கிறார்கள்.
இதன் பட்ஜெட் ரூ. 320 கோடி என்றாலும், மீதியுள்ள ரூ. 280 கோடி நிகரலாபமாக தயாரிப்பாளருக்கு கிடைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் வசூல் மேலும் மேலும் அதிகரிக்க தயாரிப்பாளர் காட்டில் வசூல் மழை பொழிய போகிறது என்பது மட்டும் நிச்சயம்.
Baahubali 2 going to make record in 100 years of Indian Cinema