தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினியை சென்னையில் இன்று பி.அய்யாக்கண்ணு தலைமையிலான 16 பேர் கொண்ட விவசாயிகள் குழுவைச் சந்தித்தனர்.
ரஜினியை சந்தித்த பிறகு அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசியதாவது…
”நதிகள் இணைப்பு என்னும் திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ரஜினி. அதற்கு அவர் ஒரு கோடி ரூபாய் தருவதாக பத்து வருடங்களுக்கு முன்பே அறிவித்து இருந்தார்.
இது தொடர்பாக அவரிடம் பேசினோம்.
நதிகளை இணைக்க உடனடியாக எங்களிடம் ரூ.1 கோடி வழங்க உள்ளதாகவும் கூறினார்.
ஆனால், அதை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்குங்கள் என நாங்கள் கேட்டுக்கொண்டோம்.
முதலில் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பாலாறு, மற்றும் காவேரி போன்ற நதிகளை இணைக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
விவசாயிகள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளிலும் ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.
விரைவில் பிரதமரை சந்தித்து நதிகள் இணைப்பு பற்றி ரஜினி பேசுவார்.” என்றார் அய்யாக்கண்ணு.
Ayyakannu met Rajini and remind him Rs 1 crore promise for river interlinking