242 விருதை அள்ளிய ‘சிதை’ குறும்படம் சினிமாவாகிறது..; பூஜையன்றே படத்தை வாங்கிய ஓரக்கிள் மூவிஸ்

242 விருதை அள்ளிய ‘சிதை’ குறும்படம் சினிமாவாகிறது..; பூஜையன்றே படத்தை வாங்கிய ஓரக்கிள் மூவிஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெண்களின் கவனம் ஈர்த்த குறும்படம்; 200 விருதுகளை குவித்த ”சிதை”!

இயக்குனர் கார்த்தி ராம் இயக்கத்தில் பிஜு அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் குறும்படம் தான் “சிதை”. பெண்களின் உறுப்பு சிதைத்தலை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இக்குறும்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

நேர்த்தியான வசனங்கள், ஒளிப்பதிவு, நடிப்பு என அனைத்திலும் அனைவரையும் கவர்ந்திழுத்திருந்தது இக்குறும்படம்.

அதுமட்டமல்லாமல், இக்குறும்படம் இதுவரை சுமார் 232 விருதுகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளுக்கு இக்குறும்படம் சென்று விருதுகளை குவித்திருக்கிறது.

இக்குறும்படத்தின் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் ஜி கே திருநாவுக்கரசு, சரவணன், மதியழகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பலரும் இக்குறும்படம் இத்தனை விருதுகளுக்குமேல் இன்னும் பல விருதுகளை குவிக்க தகுதியான ஒன்று தான் என்று கூறினார்கள்.

அடுத்தகட்டமாக, வெள்ளித்திரை படம் எடுத்து இயக்குனர் கார்த்தி ராம் மிகப்பெரும் வெற்றியை அடைய வேண்டும் என்று அனைவரும் வாழ்த்து கூறினர்.

பெண்கள் பல துறைகளில் உயர்ந்து விட்டாலும் இன்றும் பெண்களுக்கு எதிரான பெண் உறுப்பு சிதை உள்ளிட்ட பல கொடுமைகள் நவீன உலகத்திலும் நடந்துக் கொண்டேதான் இருக்கின்றன. இவை முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும்.

‘சிதை’ போன்ற படங்கள் வந்தால் மட்டுமே இந்த கொடுமைகள் உலகத்திற்கு தெரியவரும். அப்பொழுதுதான் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு பெண்களுக்கு உண்மையான விடியல் பிறக்கும். இதை உரக்க சொன்ன இயக்குநர் கார்த்தி ராம் குழுவினரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

இந்த நிலையில் ‘சிதை’ படத்தின் முதல் பாகத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

இதில் ஒளிப்பதிவாளர்- சுபாஷ் நாதன், எடிட்டர்- வினோத் சிவக்குமார், கே எம் கே ராதாகிருஷ்ணன், ஓரக்கிள் மூவிஸ் தயாரிப்பாளர் திருநாவுக்கரசு இந்நிறுவனம் என்எஃப்டி பார்டனராக ஓரக்கிள் மூவிஸ் வந்திருந்து வாழ்த்தினர்.

படப்பூஜையன்றே ஓரக்கிள் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை வாங்க முன்வந்துள்ளது.்

ஜூலை மாதம் முதல் இதன் படப்பிடிப்பை 30 நாட்கள் தொடர்ந்து நடத்தவுள்ளனர்.

பெண் உறுப்பை ‘சிதை’-க்கும் கொடூரம்.; கார்த்திராம் இயக்கத்திற்கு 230 விருதுகள் https://www.filmistreet.com/cityevents/200-awards-for-karthikeyans-sithai-short-film/

Award winning short film ‘Sidai’ becomes a movie ..;

சர்ப்ரைஸ் விசிட் : கமல்ஹாசனை கட்டியணைத்து கண்ணீர் விட்ட ரசிகர்கள்

சர்ப்ரைஸ் விசிட் : கமல்ஹாசனை கட்டியணைத்து கண்ணீர் விட்ட ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விக்ரம்’.

இதில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் சூர்யா கொடுக்கும் செம ட்விஸ்ட்

இதில் ‘ஜல்லிக்கட்டு’ படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார்.

அனிருத் இசையமைத்துள்ளார்.

விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை பிரபல வினியோகஸ்தர்களான AP International நிறுவனமும் தமிழக உரிமையை உதயநிதியும் வாங்கி உள்ளனர்..

விக்ரம் படத்தின் தெலுங்கு பதிப்புக்கு “விக்ரம் ஹிட் லிஸ்ட்” என பெயரிடப்பட்டுள்ளனர்.

இப்படம் ஜூன் 3ல் ரிலீசாகவுள்ளது.

கமலுடன் மதுரை சம்பவம்.. சிம்புவுடன் அரசியல் டாக்.; ‘விக்ரம்’ விழாவில் ரஞ்சித் பேச்சு

இப்பட வெளியீட்டை ஒட்டி தனது ரசிகர்களை சர்ப்ரைஸாக சந்தித்துள்ளார் கமல்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரசிகர்களை அழைத்து, அவர்கள் கமல்ஹாசன் குறித்தும் அவருடைய படங்கள், அரசியல் குறித்து பேச வைத்துள்ளனர்..

அப்போது, ரசிகர்கள் பேசும்போது சர்ப்ரைஸாக கமல்ஹாசன் திடிரென ரசிகர்கள் முன் தோன்றியுள்ளார்

அப்போது இதில் பங்கேற்ற ரசிகர்கள் கமலை சந்தித்ததும் கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழுதனர்.

Surprise Visit: Kamal Haasan meets his fans

டி ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு உருக்கமான அறிக்கை

டி ராஜேந்தர் உடல்நிலை குறித்து சிம்பு உருக்கமான அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், திரைப்பட விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் டி ராஜேந்தர்.

அரசியலில் ஒரு கலக்கு கலக்கியவர். எம்எல்ஏ ஆகவும் பதவி வகித்துள்ளார்.

தற்போதும் ஒரு கட்சிக்கும் தலைவராக இருக்கிறார். டி ராஜேந்தர் தனது அடுக்கு மொழி எதுகை மோனை வசனத்திற்கு புகழ் பெற்றவர்.

இவர் உயிருள்ளவரை உஷா, என் தங்கை கல்யாணி, ஒரு தாயின் சபதம், காதல் அழிவதில்லை என பல படங்களை இயக்கியுள்ளார்.

ஆனால் எந்த படத்திலும் இவர் நாயகியை தொடாமல் நடிப்பார். இவரைப் போன்ற ஒரு திரைக் கலைஞனை உலகத்தில் எங்கேயும் பார்க்க முடியாது.

இவர் இயக்கிய படங்களின் மூலம்தான் இவரது மகன் சிலம்பரசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

பின்னர் சிம்புவை இவரே கதாநாயகனாகவும் அறிமுகப்படுத்தினார்.

1980ல் டிஆர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

1980களில் டி. ராஜேந்தர் அறிமுகப்படுத்திய அமலா, நளினி, ஜோதி, ஜீவிதா மற்றும் மும்தாஜ் உட்பட பல நடிகைகள் பிற்காலத்தில் வெற்றி நாயகிகளாக வலம் வந்தனர்.

‘உயிருள்ளவரை உஷா’ படத்தில் நடித்த நடிகை உஷாவை கரம் பிடித்து தன் மனைவியாக்கினார்.

இவர்களுக்கு சிலம்பரசன், குறளரசன், இலக்கியா ஆகிய இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இதில் தற்போது சிம்புக்கு மட்டும்தான் இதுவரை திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் டி ராஜேந்தருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிம்பு டாடி டி-ராஜேந்தர் எப்படி இருக்கிறார்.?

எனவே சிகிச்சைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் தனது தந்தையின் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு.

அதில்…

“எனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் சிறிது இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், உயர் சிகிச்சை தர வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.

அவர் உடல்நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம்.

அவர் முழு சுய நினைவுடன் நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Simbu’s heartfelt statement on T Rajender health

கணவன் மனைவியா ஒற்றுமையா வாழனும்.; விக்னேஷ் சிவன் குலதெய்வ கோயிலில் நயன்தாரா வேண்டுதல்

கணவன் மனைவியா ஒற்றுமையா வாழனும்.; விக்னேஷ் சிவன் குலதெய்வ கோயிலில் நயன்தாரா வேண்டுதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

2015ல் வெளியான இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்க அனிருத் இசையமைத்து இருந்தார்.

இந்த பட சூட்டிங் சமயத்தின் போதே நயன் & விக்கி இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

அதன்பிறகு இருவரும் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒரே வீட்டில்தான் வசித்து வந்தனர்.

இருவரும் எங்கும் சென்றாலும் இணைந்தே சென்றனர். சமூக வலைத்தளங்களில் ஜோடியாக போட்டோ போட்டு அசத்துவார்கள்.

இருவரும் அடிக்கடி அனைத்து மத வழிப்பாட்டு தலங்களுக்கும் சென்று வருகின்றனர்.

அண்மைக்காலமாக ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி பல படங்களை தயாரித்து வருகின்றனர்.

ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் இத்தனை படங்களா? பிசியாகும் புரொடியூசர் நயன்தாரா

விரைவில் திருமணம் நடைபெறப் போகிறது என்ற செய்தி நீண்ட நாட்களாகவே சொல்லப்பட்டது.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார்.

இந்த படத்திற்கு பின்பு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்று பரவலாக பேசப்பட்டது.

கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு மேலாக இவர்கள் காதலித்துக் கொண்டே இருப்பதால் இவர்களுக்கு எப்போது திருமணமாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் நடைபெறும் என்று தகவல் வெளியானது.

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் எங்கே.? எப்போ.? நடக்கப் போகுது தெரியுமா.?

ஆனால் அவர்கள் இருவரும் இது குறித்து இதுவரை பேசவில்லை.

இந்த நிலையில் விக்னேஷ் சிவனின் குலத்தெய்வ கோயிலில் நயன்தாரா வழிபாடு செய்துள்ளார்.

தஞ்சாவூர்- கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள மேலவழுத்தூர் கிராமத்தில், ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோயில் உள்ளது.

இந்த கோயில் இயக்குநர் விக்னேஷ் சிவனின் குலத்தெய்வக் கோயில் எனச் சொல்லப்படுகிறது.

இந்த கோயிலில் இருவரும் பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.

கணவன், மனைவி ஒற்றுமையாக வாழ வழிப்பாடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இதனையடுத்து கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரன் கோயிலிலும் இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.

Nayanthara and Vignesh Shivan visiting their ancestral temple in Tamil Nadu

விஜய் தேவரகொண்டா – சமந்தா பட சூட்டிங்கில் விபத்து.; நடந்தது என்ன.?

விஜய் தேவரகொண்டா – சமந்தா பட சூட்டிங்கில் விபத்து.; நடந்தது என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா நிர்வனா இயக்கும் ‘குஷி’ என்ற தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா.

இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

Samantha latest photos

அங்கு ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

அப்போது எதிர்பாரா விதமாக ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் விஜய் தேவரகொண்டா & சமந்தா ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

Vijay Deverakonda latest photos

இதனால் சூட்டிங் நிறுத்தப்படும் என யூனிட்டே எதிர்பார்த்த நிலையில் உடனே முதலுதவி சிகிச்சை பெற்று மீண்டும் விஜய் தேவர்கொண்டா- சமந்தா இருவரும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டனர்.

Vijay Deverakonda and Samantha injured in car accident during movie shoot

சாமி ஏதாவது வேலை இருக்குதா.? ரஜினி கேட்ட கேள்விக்கு இளையராஜா என்ன செய்தார்.?

சாமி ஏதாவது வேலை இருக்குதா.? ரஜினி கேட்ட கேள்விக்கு இளையராஜா என்ன செய்தார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை போயஸ்கார்டன் வீட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை, இசைஞானி இளையராஜா இன்று காலை சந்தித்தார்.

இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசினர்.

அப்போது இளையராஜா விடைபெறும்போது, ‘சாமி ஏதாவது வேலை இருக்குதா’ என்று ரஜினிகாந்த் விசாரிக்க..

ரஜினிகாந்த் மகள் இயக்கும் படத்திற்கு இளையராஜா இசை..?

‘‘என் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ம் தேதி கோவையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக ரிகர்சல் நடந்துக் கொண்டிருக்கிறது. அங்கே செல்கிறேன்’ என இளையராஜா கூறியுள்ளார்.

‘‘அப்படியா..நானும் அங்கே வருகிறேன்’’ என்று ஆர்வமான ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை அழைத்து சென்றார்.

ஸ்டூடியோவில் அந்த நிகழ்ச்சி தொடர்பான ரிகர்சல் பணிகளையும், சில பாடல்களையும் ஆர்வமாக ரசித்து கேட்டார் ரஜினிகாந்த்.

ரஜினி படத்தை பகிர்ந்த இசைஞானி…; இளையராஜா படத்தை பகிர்ந்த கங்கை அமரன்

இரண்டு மூன்று பாடல்களுக்கு கைதட்டி தனது மகிழ்ச்சியை தெரிவித்த ரஜினிகாந்த், பின்னர், இளையராஜாவிடம் இருந்து விடைபெற்றார்

What did Ilayaraja do to the question asked by Rajini?

More Articles
Follows