சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்ற ‘என் பெயர் ஆனந்தன்’ நவ-27ல் வெளியாகிறது..

சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்ற ‘என் பெயர் ஆனந்தன்’ நவ-27ல் வெளியாகிறது..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yen Peyar Anandhanகனகா வெங்கடேசன், சவீதா வெங்கடேசனின் சவீதா சினி ஆர்ட்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணப்பாவின் காவ்யா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்’. இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இவர் ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம்பெற்ற ஆறு அத்தியாயங்களில் ஒன்றான ‘சித்திரம் கொல்லுதடி’ படத்தை இயக்கியவர். இவரது இரண்டாம் படம் தான் ‘என் பெயர் ஆனந்தன்’.

‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘தாயம்’ ஆகிய படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க, அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் அடுத்த சாட்டை, நாடோடிகள்-2 ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். மேலும் தீபக் பரமேஷ், அரவிந்த் ராஜகோபால் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தின் கதை ஆரம்பத்தில் த்ரில்லராக பயணித்தாலும், போகப்போக உணர்வுப்பூர்வமான பயணத்துக்குள் ரசிகர்களை அழைத்து சென்றுவிடும். காரணம் த்ரில்லருக்கென்றே உள்ள வழக்கமான கதைக்களங்களை தேர்வு செய்யாமல் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக்கொணடு இந்தப்படம் உருவாகியுள்ளது… குறிப்பாக இதுவரை யாருமே பேசியிராத ஒரு சமூக பிரச்சனையை கையிலெடுத்து துணிச்சலாக இந்தப்படம் பேசியுள்ளது. படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களிடம், இப்படியெல்லாம் கூட மக்கள் இருக்கிறார்களா, இவர்களுக்கு இப்படியெல்லாம் கூட பிரச்சனைகள் இருக்கிறதா என இந்தப்படம் நிச்சயம் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும். .

செம்பல் சர்வதேச திரைப்பட விழா, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச திரைப்பட விழா மற்றும் தென் கொரியாவில் நடைபெற்ற SEE சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு மூன்றுமுறை சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை இந்தப்படம் பெற்றுள்ளது. மேலும் நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான ஸ்பெஷல் ஜூரி விருதையும் பெற்றது.

“திரைப்பட விழாக்களில் இந்தப்படத்தை பார்த்த பலரும் இதுவரை பார்த்திராத, ஒரு வித்தியாசமான அதேசமயம் ஜனரஞ்சகமாக ரசிக்க கூடிய விஷயங்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறினார்கள். குறிப்பாக படத்தின் டேக்லைனில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, இது தனித்துவமான தமிழ்ப்படமாகவே உருவாகி இருக்கிறது என பாராட்டினார்கள்” என்கிறார் ஸ்ரீதர் வெங்கடேசன்.

மேலும் தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு புதுமுயற்சியாக க்ளைமாக்ஸுக்கு சற்று முன்பாக 11 நிமிடங்கள் கொண்ட பாடல் காட்சி இடம்பெறுகிறது. இது வழக்கமான ஒரு பாடலாக இல்லாமல் உணர்வுப்பூர்வமான பாடலாக இருக்கும்.

“இந்தப்படத்தின் நாயகன் சந்தோஷ் பிரதாப்பின் ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் மறக்க முடியாது ஒன்று.. ஒரு நாற்காலியிலேயே அமர்ந்தபடி, தனது நடிப்பை முகத்தின் உணர்ச்சிகளிலேயே விதம் விதமாக பிரதிபலித்து நடித்துள்ளார். நிச்சயம் இந்தப்படம் தமிழ்சினிமாவில் அவருக்கு அடுத்த படியாக இருக்கும்” என்கிறார் இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன்.

தற்போது திரையரங்குகள் செயல்பட ஆரம்பித்துவிட்ட நிலையில், இந்தப்படம் வரும் நவ-27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.. ஓடிடி தளங்கள் இந்தப்படத்தை வெளியிட தங்களை அணுகியபோதும் மறுத்துவிட்டார்களாம் தயாரிப்பாளர்கள்.

“இந்த படத்தை ஆரம்பிக்கும்போதே நாங்கள் இரண்டு விஷயங்களில் உறுதியாக இருந்தோம்.. முதலில் படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிவிட்டு, அதன்பிறகே திரையரங்குகளில் ரிலீஸ் செய்வது, இரண்டாவதாக தியேட்டர்களில் ரிலீஸ் செய்த பின்னரே, ஒடிடிக்கு படத்தை தருவது என நாங்கள் முடிவு செய்தபடியே இந்தப்படத்தை தியேட்டர்களில் வெளியிடுகிறோம்..” என்கிறார் இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் விபரம்

நடிகர்கள்: சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி, தீபக் பரமேஷ், அரவிந்த் ராஜகோபால் மற்றும் பலர் .

பாடல்கள்: புருஷோத்தமன், வீரையன்

படத்தொகுப்பு: விஜய் ஆண்ட்ரூஸ்

ஒளிப்பதிவு : மனோ ராஜா

இசை : ஜோஸ் பிராங்க்ளின்

டைரக்சன் : ஸ்ரீதர் வெங்கடேசன்

தயாரிப்பு : கனகா வெங்கடேசன், சவீதா வெங்கடேசன் மற்றும் கோபி கிருஷ்ணப்பா

———————-

Yen Peyar Anandhan – Official Trailer

Award winning film Yen Peyar Anandhan to release on nov 27

பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’..; கை கொடுத்த கேடி குஞ்சுமோன் & விஜய்சேதுபதி

பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’..; கை கொடுத்த கேடி குஞ்சுமோன் & விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathiகொரொனா வைரஸ் பரவல் தமிழகத்தில் குறைந்து வரும் நிலையில் திரையரங்குளில் ரிலீஸாக தயாராகிவிட்டது ” இது என் காதல் புத்தகம் ”

முன்னதாக இந்த படத்தின் இசையை நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்டார்.

அதை தொடர்ந்து படத்தின் டிரைலரை தமிழ் திரையுலகிற்கு பிரமாண்ட இயக்குனர்களை அறிமுகப்படுத்திய பிரமாண்ட தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன் வெளியிட்டார்.

இப்படி பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்றுள்ள ” இது என் காதல் புத்தகம் ” படத்தை மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கிய மது ஜி கமலம் இயக்கியுள்ளார்.

பிஜு தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜினு பரமேஷ்வர், ஜோமி ஜேக்கப் ஆகிய நால்வரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். நாயகியாக அஞ்சிதா ஸ்ரீ நடித்துள்ளார.

இவர்களுடன் குள்ளப்புள்ளி லீலா, ராஜேஷ் ராஜ், சூரஜ் சன்னி, ஜெய் ஜேக்கப் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ரோஸ்லேண்ட் சினிமாஸ் பட நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

எம்.எஸ்.ஸ்ரீ மாதவ் இசையில் வைக்கம் விஜயலட்சுமியோடு, பிரவீன் கிருஷ்ணா இணைந்து பாடிய ” என்னாத்தா ” என்ற பாடல் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி கலக்கிக்கொண்டுள்ளது.

தமிழகத்தில் நாட்டுப்புற கிராமம் ஒன்றில் நிகழ்கிற சில உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாகி இருக்கிறது இப்படம்.

பெண் கல்வியின் அவசியத்தையும், வாலிபப் பருவங்களில் ஏற்படும் மனக்குழப்பத்தை பெண்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்தை நகைச்சுவை கலந்து உருவாகியுள்ளது.

இந்த படத்தை தமிழகத்திலும், கேரளத்திலும் இயற்கை எழில் தளும்புகின்ற லொகேஷன்களில் படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் அருண் கிருஷ்ணா, சஜித் கட்சிதமாக காட்சிகளை எடிட் செய்துள்ளார்.

கொரொனா விட்டுச் சென்ற ரணங்களை ஆற்ற வருகிற நவம்பர் 27 ஆம் தேதி தமிழகமெங்கு வெளியாகிறது ” இது என் காதல் புத்தகம் ”

Makkal Selvan Vijay Sethupathi released Idhu En Kaathal Puthagam songs

பாலியல் குற்றங்களுக்கு எதிராக உருவாகி இருக்கும் ‘அகடு’

பாலியல் குற்றங்களுக்கு எதிராக உருவாகி இருக்கும் ‘அகடு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

agadu tamil filmசௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் அகடு. இதில் ஜான் விஜய், சித்தார்த், ஸ்ரீராம், கார்த்திக், விஜய் ஆனந்த், அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். புதுமுக இயக்குனர் எஸ். சுரேஷ்குமார், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கிறார்.

இந்தியாவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறத்தல்கள், உலக மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. இதற்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இருப்பினும் சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்கள் குறையவில்லை.

பாலியல் குற்றங்களுக்கு எதிராக அகடு திரைப்படம் உருவாகி வருகிறது. கொடைக்கானலுக்கு நான்கு இளைஞர்கள் சுற்றுலா செல்கிறார்கள்.

அங்கு சுற்றுலா வந்த 13 வயது சிறுமிக்கு நான்கு இளைஞர்களால் எதிர்பாராத ஒரு கொடூர செயல் நடைபெறுகிறது. அச்சிறுமிக்கு என்ன நடந்திருக்குமோ என்று எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

சௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவராஜ்சிங்காரவேலு இணை தயாரிப்பு செய்திருக்கிறார்.

ஜோகன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சாம்ராட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கபிலன் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். படத்தொகுப்பை தியாகு கவனிக்கிறார். அகடு படத்தின் படப்பிடிப்பு முடிந்து இம்மாதம் வெளியாக இருக்கிறது.

Agadu – a film based against sexual crimes

வெற்றிமாறன் வெளியிட்டுள்ள ‘என்றாவது ஒரு நாள்’ ஃபர்ஸ்ட் லுக்: உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ளது

வெற்றிமாறன் வெளியிட்டுள்ள ‘என்றாவது ஒரு நாள்’ ஃபர்ஸ்ட் லுக்: உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ளது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Endravadhu Oru Naalசமீபமாக நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வரும் கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற தொடங்கிவிட்டன. நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை, திரைக்கதை என்னும் மாலையாக அழகாகக் கோர்த்துப் பல இயக்குநர்கள் கதைகளைச் சொல்லும் விதம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இணைகிறார் அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி.

பல சம்பவங்கள் நாளிதழில் சிறு செய்தியாக வந்திருக்கும். அதை படித்துவிட்டு எளிதில் கடந்துவிடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. மனிதக் குலத்தின் இன்றியமையாத பகுதியான கால்நடை வளர்ப்பு, உலகமயமாக்கல் கொண்டு வந்த இடம்பெயர்வு பற்றிய கதை இது. தண்ணீர் பஞ்சம், குழந்தை தொழிலாளிகள், நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களின் முன்னிருக்கும் சவால்களை எல்லாம் காட்சியாக அமைத்து மக்களை யோசிக்க வைக்கும் வகையில் இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார்.

இந்தியாவின் கிராமப்புற மக்களின் எளிய வாழ்வு கால்நடைகளுடன் அவர்களது அழகான உறவைப் பற்றிய இந்தப் படத்துக்கு ‘என்றாவது ஒரு நாள்’ எனத் தலைப்பிட்டுள்ளனர். கொங்கு மண்டலத்தில் உள்ள எதார்த்தமான வாழ்வியலை அப்படியே இந்தப் படத்தில் காணவுள்ளோம். அங்குள்ள வட்டார மொழியை பேசி அனைத்து நடிகர்களும் நடித்துள்ளது இந்தப் படத்தின் சிறப்பம்சமாகும்.

எதார்த்தமான படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள விதார்த் இதில் நடித்துள்ளார். வித்தியாசமான தனக்கு முக்கியத்துவமுள்ள கதைகளைத் தேர்வு செய்து நடிக்கும் ரம்யா நம்பீசன் நாயகியாக புதிய பரிமாணத்தில் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ‘சேதுபதி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நம்மை கொள்ளைக் கொண்ட ராகவன் நடித்துள்ளார்.

‘தி தியேட்டர் பீப்பிள்’ என்ற நிறுவனம் இந்தப் படத்தின் மூலம் படங்கள் தயாரிப்பில் இறங்குகிறது. வித்தியாசமான அதே சமயத்தில் மக்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் படங்களைத் தயாரிப்பதே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும். அதில் ‘என்றாவது ஒரு நாள்’ திரைப்படம் தங்களுடைய முதல்படி என்று நம்புகிறார்கள். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக என்.சண்முக சுந்தரம், இசையமைப்பாளராக என்.ஆர்.ரகுநந்தன், எடிட்டராக மு.காசி விஸ்வநாதன் பணிபுரிந்துள்ளனர். அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ள ‘என்றாவது ஒரு நாள்’ ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்தப் படத்தின் மூலம் ஒரு எதார்த்த வாழ்க்கையை நம் கண்முன் காணவிருக்கிறோம். இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Vetrimaran releases First Look of Endravadhu Oru Naal, a film based on real-life incidents!

அப்பாடா விபிஎஃப் விவகாரம் தீர்ந்தது.; புதிய படங்கள் ரிலீசாவதில் சிக்கல் இல்லை..

அப்பாடா விபிஎஃப் விவகாரம் தீர்ந்தது.; புதிய படங்கள் ரிலீசாவதில் சிக்கல் இல்லை..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் நவம்பர் 10-ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துவிட்டது.

Virtual Print Fee எனப்படும் விபிஎஃப் கட்டணங்களை எங்களால் செலுத்த முடியாது. எனவே படங்களை வெளியிட மாட்டோம் என நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா தெரிவித்தார்.

இதற்கு அனைத்து தயாரிப்பாளர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

ஆனால் தியேட்டர்கள் உரிமையாளர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து இரு தரப்புக்கும் பிரச்சினை உருவானது.

தற்போது தயாரிப்பாளர் சங்கத்திற்கும் டிஜிட்டல் நிறுவனத்திற்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பலமுறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையில் தற்போது உடன்பாடு எட்டியுள்ளது.

டிஜிட்டல் நிறுவனங்கள் மார்ச் மாதம் முதல் 60 சதவீத கட்டணத்தை குறைத்துக்கொள்ள முன்வந்து இருப்பதால் புதிய திரையரங்குகளை வெளியிடலாம் என பாரதிராஜா தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில்…

“கடந்த இரண்டு மாதங்களாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், க்யூப் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இடையே விபிஎஃப் கட்டணம் குறித்து பேச்சு வார்த்தை நடந்து வந்தது.

அந்த பேச்சு வார்த்தை இன்று இனிதே முடிந்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், க்யூப் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அதன் படி, க்யூப் நிறுவனம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தற்போது இருக்கும் கட்டணத்தில் கணிசமான சதவீதத்தை குறைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. 31.3.2021 தேதிக்குள், இந்த விபிஎஃப் பற்றிய ஒரு நிரந்தர தீர்வை மூன்று சாராரும் இணைந்து செய்து கொள்ளவும் இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட துறை இந்த கொரோனா கால பாதிப்பிலிருந்து மீண்டு வர வேண்டும், புதிய திரைப்படங்கள் வெளியாவதில் எந்த தடையும் இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், மூன்று சாராரும் இந்த சுமூகமான முடிவுக்கு வந்துள்ளனர்.

31.3.2021 தேதிக்குள், மூன்று சாராரும் இணைந்து விபிஎஃப் கட்டணம் பற்றிய ஒரு நிரந்தர தீர்வை எடுக்க உறுதி கொண்டுள்ளார்கள். அதன் மூலம், இந்த பிரச்சனை மீண்டும் தொடரக் கூடாது என்பதே அனைவரின் நோக்கம். இந்த ஒப்பந்தத்தின் மூலம், 31.3.2021 வரை தமிழ் சினிமாவில் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை.

அதிக எதிர்பார்ப்பில் உள்ள பல பெரிய பட்ஜெட் படங்களும், நடுத்தர மற்றும் சிறு பட்ஜெட் படங்களும் தடையில்லாமல் இனிமேல் வெளியாகும். அதன் மூலம், பார்வையாளர்களுக்கு புதிய படங்களை திரையரங்குகளில் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். தமிழ் திரைப்படத்துறை அதன் மூலம் மொத்தமாக மீண்டு வர முடியும் என்று நாங்கள் மூன்று சாராரும் நம்புகிறோம்.

தமிழ் சினிமா மீண்டு வர எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் தமிழக முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட துறை சார்பிலும் மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறோம்”. இவ்வாறு பாரதிராஜா விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Decks cleared for release of new movies in TN

பீகார் டாக்டரை இரண்டாவது திருமணம் செய்த பிரபுதேவா

பீகார் டாக்டரை இரண்டாவது திருமணம் செய்த பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prabhu devaநடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் பிரபுதேவா.

இவர் நடன இயக்குனராக இருந்தபோது துணை நடிகை ரமலத் என்பவரை காதலித்து 1995ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகன் புற்றுநோய் காரணமாக 2008 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இதன் பின்னர் விஜய் நடித்த வில்லு படத்தை இயக்கியபோது, நடிகை நயன்தாராவை காதலித்தார். இதனால், மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார்,

நயன்தாராவும் பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு மாறினார்.

ஆனால், இவர்களின் காதல் திடீரென முறிந்தது. 2012-ல் பிரிந்தனர்.

இந்த நிலையில், தற்போது பீகாரை சேர்ந்த பிசியோதெரபி டாக்டரை காதலித்து வந்ததாகவும் இரு வீட்டார் சம்மதத்துடன் அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்டுகிறது.

தற்போது தம்பதிகள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபுதேவா வீட்டில் வசித்து வருவதாக தவல்கள் வந்துள்ளன.

Actor Prabhu Deva gets married for the second time ?

More Articles
Follows