கல்யாண மண்டபமாகிறது AVM கார்டன்..; கடைசி யோக(ம்) பாபுக்கு கிடைச்சுது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

60 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்திய சினிமாவுக்கே கலங்கரை விளக்கமாக சென்னையே இருந்தது.

சென்னையில் மட்டும் ஏவிஎம், விஜய வாஹினி, ஜெமினி, கற்பகம், சத்யா உள்ளிட்ட 20க்கும் மேற்ப்பட்ட ஸ்டூடியோக்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

தெலுங்கு கன்னடம் மலையாள சினிமா படப்பிடிப்புகள் சென்னையை விட்டு அவரவர் மாநிலத்திற்கு சென்ற போது ஒவ்வொரு ஸ்டியோக்களாக மூடப்பட்டன.

மேலும் சிலர் அவுட் டோர் சூட்டிங்குக்காக வெளிநாடுகள் பறப்பதால் இருக்கிற ஸ்டூடியோக்களும் வேலை இல்லாமல் போனது.

பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்ட போதும் ஏவிஎம் ஸ்டூடியோ மட்டும் சினிமாவுக்காக தன்னை நிலை நிறுத்திக் கொண்டது.

அங்கும் மெல்ல மெல்ல அவ்வப்போது மாற்றங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.

ஸ்டூடியோவுக்குள் அடுக்குமாடி கட்டிடங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனை உருவானது.

அண்மையில் கொரோனா ஊரடங்கால் ஏவிஎம் ரஜேஸ்வரி தியேட்டரும் மூடப்பட்டுள்ளது.

அங்கும் வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் ஏவிஎம் கார்டன் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடைபெறுவது குறைந்து வருகிறது. மேலும் டப்பிங் பணிகளும் குறைந்துள்ளன.

இதனையடுத்து ஏவிஎம் கார்டனை திருமண மண்டபமாக மாற்ற முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த கார்டனில் நடிகர் யோகிபாபு நடித்த மண்டேலா என்ற படத்தின் படப்பிடிப்பு தான் கடைசியாக நடைபெற்றதாம்.

நவம்பரில் ரஜினியின் அரசியல் கட்சி ஆரம்பம்..; மதுரையில் முதல் மாநாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோதே அவரது ஆட்சியை கடுமையாக விமர்சித்து பேசியவர் ரஜினி.

அதன்பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவருக்காக முதல்வர் பதவியை தர பிரதான கட்சி காத்திருந்தபோது அதனை மறுத்தவர் ரஜினி.

அப்போதெல்லாம் அவர் ஒரு முறை கூட அரசியல் வருவதாக கூறவில்லை. ஆனாலும் ஒவ்வொரு முறையும் அவரை அரசியலோடு இணைத்தே பல செய்திகள் வெளியாகும்.

இந்த வரலாறுகளை அதை அறியாத இன்றைய 90S & 2K கிட்ஸ்கள் அவரை வைத்து பல மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.

இனிமே நீ வயசுக்கு வந்தா என்ன? வரலேன்னா என்ன? என கடுமையாக விமர்சித்து மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர்.

இதனிடையில் கடந்த 2017 டிசம்பர் 31ஆம் தேதி தன் அரசியல் பிரவேசத்தை முதன்முறையாக ரசிகர்கள் சந்திப்பில் அறிவித்தார்.

அரசியலுக்கு வருவது உறுதி. தனிக்கட்சி ஆரம்பித்து 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்றார்.

அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதால் இந்தாண்டு ஏப்ரலில் கட்சி தொடங்குவதை அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்த சூழ்நிலையில் கடந்த மார்ச் 12ம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்… அரசியல் மாற்றம் வேண்டி மக்களிடம் எழுச்சி உருவாகட்டும. அப்போ இந்த ரஜினி அரசியலுக்கு வருகிறேன்.

மேலும் தான் கட்சிக்கு மட்டுமே தலைவராக இருப்பேன் எனவும் ஆட்சிக்கு வந்தால் தான் முதல்வராக அமர மாட்டேன் எனவும் அதிரடியாக பேசினார்.

முதல்வர் நாற்காலி மீது ரஜினிக்கு ஆசையில்லை என்பதால் அரசியல்வாதிகளுக்கு இந்த செய்தி சர்க்கரை விருந்தாக அமைந்தது.

ஆனால் ரஜினி என்ற பெயருக்கு மட்டுமே மதிப்பு. அவர் முதல்வர் வேட்பாளர் இல்லை என்றால் நிச்சயம் ஓட்டு கிடைக்காது என ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து மார்ச் இறுதி வாரம் முதல் கொரோனா பிரச்சினை… ஊரடங்கு என தற்போது செப்டம்பர் மாதம் வரை பல்வேறு பிரச்சினைகள் நீண்டுக் கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் கொரோனாவில் தள்ளி வைக்கப்பட்ட தன் கட்சி அறிவிப்பு மாநாட்டை வருகிற நவம்பர் மாதம் நடத்துவார் என தகவல்கள் வந்துள்ளன.

ரஜினி கட்சி முதல் மாநாடு மதுரையில் நடக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

போதை பொருள் விவகாரம்.: நடிகைகள் ராகினி திவேதி-சஞ்சனா கல்ராணியிடம் விசாரணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய திரையுலகிறல் கன்னடம் மற்றும் மலையாள சினிமா வட்டாரத்தில் போதை புழக்கம் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது.

இது தொடர்பாக நடந்த சோதனைகளில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் முக்கிய நபராக கருதப்பட்ட கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்தார்.

இதில் அவர் பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

அதன்படி நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு மத்திய குற்றப் பிரிவு போலீசார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியிருந்தனர்.

சஞ்சனா கல்ராணி, தமிழில் நடித்து வரும் நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார். தண்டுபால்யா 2ம் பாகத்தில் நடித்து புகழ்பெற்றவர். தற்போது மற்றொரு தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு பிரச்னையை கூறி சஞ்சனாசிங் தற்போது ஆஜராக முடியவில்லை எனவும் பிறகு ஆஜர்வதாக தெரிவித்து இருந்தாராம்.

கன்னட படங்களில் நடித்து வரும் ராகினி திவேதி தமிழில் நிமிர்ந்து நில், அரியான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ராகினி தனது வழக்கறிஞர் மூலம் செப்டம்பர் 7-ஆம் தேதி ஆஜராவதாக தெரிவித்துள்ளார். இதை ஏற்காத போலீசார் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனர்.

இதனையடுத்து ஐகோர்ட்டில் அனுமதி பெற்று இன்று காலை பெங்களூரில் உள்ள ராகினி வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்தனர்.

இதன்பின்னர் ராகினியை கைது செய்த போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

50 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சரவணா ஸ்டோர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“நம்பிக்கையை கொண்டாடுவோம்” இந்த வரிகளை சொல்லும் பொழுது நமக்கு நினைவுக்கு வருவது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் தான். நம்பிக்கையை மட்டுமே தாரக மந்திரமாக கொண்டு பல சாதனைகளை படைத்து தனது தீவிர உழைப்பால் தலை நிமிர்ந்து நிற்கும் சரவணா ஸ்டோர்ஸ் குழுமம் இன்று தனது 50 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

1970-களில் சண்முகா ஸ்டோர்ஸ் என்னும் 720 சதுரடியில் துவங்கப்பட்ட சிறிய பாத்திரக்கடை இன்று சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் அளவிற்கு வளர்ந்து நின்று மக்களின் இதய மாளிகையில் குடியேறியிருக்கிறது இந்நிறுவனம்.

தி.நகரில் சரவணா ஸ்டோர்ஸின் கட்டைப் பை இல்லாத நபர்களை காண்பதரிது. நடுத்தர மக்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்கள் வாங்கிச்செல்லும் துணிகள் மட்டுமல்லாமல், அதை எடுத்து செல்லும் பை மூலமாக அவர்களின் இல்லத்தில் ஒருவராகவே மாறிவிட்டார்கள்.

90களிலிருந்து ரங்கநாதன் தெருவில் கூட்டம் அலை மோதுவதற்கு முக்கிய காரணம் இவர்களின் கடின உழைப்பு, விடா முயற்சி, நம்பிக்கை. தி.நகர் என்றாலே சரவணா ஸ்டோர்ஸ் என்ற பிம்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இவர்களின் உழைப்பு எண்ணில் அடங்காதது. பல ஊர்களில் இருந்து தேனீக்கள் போல மக்கள் சோறு கட்டிக்கொண்டு திருவிழா போல் இந்த கடைக்கு வந்து செல்வது கண்கொள்ளா காட்சி.

வியாபாரயுக்தியும், உழைப்பும் மற்றும் மக்களுக்கு தேவையானவைகள் நியாயமான விலையில் ஒரே இடத்தில் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல் பட்டுக்கொண்டிருக்கும் இந்த நிறுவனம் இன்னும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து சாதனை படைக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த பொன்விழா ஆண்டில் பொன்னான நேரத்தில் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் மக்களுக்கு சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குடும்பத்தினரான சண்முகசுந்தரம் ராஜரத்தினம், ராஜரத்தினம் சபாபதி மற்றும் குழுமத்தினர் தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் இதய பூர்வமாக நன்றியை சமர்பிக்கிறார்கள்.

சரவணா ஸ்டோர்ஸ் பற்றிய வீடியோ தொகுப்பு

https://we.tl/t-lDiVWN99MV

‘ஆதிபுருஷ்’ படத்தில் ராமராக பிரபாஸ்… ராவணனாக சயிஃப் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி, சாஹோ படங்களை அடுத்து ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ்.

நாக் அஸ்வின் இயக்கும் இந்த படத்தல் பிரபாஸ் உடன் தீபிகா படுகோன் உடன் இணைந்து நடிக்கிறார்.

இதனையடுத்து ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடிக்கிறார் என்ற செய்திகளையும் பார்த்தோம்.

இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் இந்தி மற்றும் தெலுங்கில் உருவாகிறது.

தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்படதாம்.

இந்த நிலையில் பிரபாஸூக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் நடிக்கிறார் என அறிவித்துள்ளனர்.

அந்த கேரக்டர் 7000 ஆண்டுகளுக்கு முந்தைய அமானுஷ்ய கதாபாத்திரம் என கூறப்படுகிறது.

ராமாயணத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இதில் ராமர் வேடத்தில் பிரபாஸ் நடிக்க ராவணன் வேடத்தில் சைப் அலிகான் நடிக்கிறார்.

இந்த படம் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகுகிறதாம்.

பூஷன் குமார், க்ரிஷான் குமார், ஓம் ராவத், பிரசாத் சுடார் மற்றும் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

தற்போது இப்பட ப்ரீ புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பவன் கல்யாணை கவனித்த போனி கபூர் அஜித்தை கண்டுக்கலையே..?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர்.

இவர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்திருத்தார்.

தற்போதும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள வலிமை படத்தை தயாரித்து வருகிறார்.

கொரோனா காலத்தில் வலிமை பற்றி அடிக்கடி அப்டேட் கேட்டு போனி கபூரை அஜித் ரசிகர்கள் வற்புறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பவன் கல்யாண் பிறந்த நாளை முன்னிட்டு வக்கீல் சாப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

இது நேர்கொண்ட பார்வையின் தெலுங்கு ரீமேக்காகும்.

இந்த படத்தில் அஜித் கேரக்டரில் வக்கீலாக பவன் கல்யாண் நடிக்க, அஞ்சலி, நிவேதா தாமஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

பவன் கல்யாணையும் அவரது ரசிகர்களையும் கவனித்த போனி கபூர் இவ்வளவு நாளாக வலிமை அப்டேட் கேட்டும் தரவில்லையே என ஆதங்கத்தில் உள்ளனர் அஜித் ரசிகர்கள்.

More Articles
Follows