உலகளவில் அரசியல் பார்வையுடைய 10 பாடல்களில் ரஞ்சித்தின் ‘மகிழ்ச்சி’

உலகளவில் அரசியல் பார்வையுடைய 10 பாடல்களில் ரஞ்சித்தின் ‘மகிழ்ச்சி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 Australias green left weekly has listed tcl collectives magizhchi albumஇயக்குனர் பா.இரஞ்சித் தின் இசைக்குழுவான “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் ” குழுவினரின் “மகிழ்ச்சி” ஆல்பம் சமீபத்தில் வெளியானது.

முழுக்க முழுக்க தனியிசைக்கலைஞர்களைக்கொண்டு பாடி இசையமைத்த இந்த ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் வெளியிடப்பட்டது. தென்மா இசையமைத்திருந்தார்.

இந்தியாவில் நிலவும் சாதிய, வர்க்க, பாலின வேற்றுமைகளை சாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இன்னிலையில் உலக அளவில் அரசியல் பார்வையுடைய பத்து பாடல் தொகுப்புக்களில் “மகிழ்ச்சி” ஆல்பமும் இடம்பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கிரீன்லெப்ட் ஊடகத்தில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடல் தொகுப்புக்களில் “மகிழ்ச்சி” என்கிற பாடலை கபாலி, காலா படப்புகழ் இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Australias green left weekly has listed tcl collectives magizhchi album

Australias green left weekly has listed tcl collectives magizhchi album

தல 59 பிங்க் ரீமேக் தெரியும்.; தல 60 படம் எப்படி தெரியுமா..?

தல 59 பிங்க் ரீமேக் தெரியும்.; தல 60 படம் எப்படி தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith starrer Thala 60 movie news updatesஅஜித் நடிப்பில் உருவான விஸ்வாசம் படம் மக்களின் வரவேற்பை பெற்று இன்னும் தியேட்டரிகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தை அடுத்து போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார் அஜித்.

இது ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்திற்கு தற்காலிகமாக தல 59 என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடிக்க யுவன் இசையமைக்கிறார்.

இப்படத்தை அடுத்து தல 60 படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார் என்பதை பார்த்தோம்.

இந்த தல 60 படமானது அஜித் ரசிகர்களை கவரும் வகையில் மாஸ் மற்றும் கமர்ஷியலாக இருக்கும் என கூறப்படுகிறது.

Ajith starrer Thala 60 movie news updates

நாங்க ஆட்சிக்கு வரும்போது போலீஸ் யூனிபார்மை மாற்றுவோம்.. : சீமான்

நாங்க ஆட்சிக்கு வரும்போது போலீஸ் யூனிபார்மை மாற்றுவோம்.. : சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

We will change TN Police uniform while we come to rule says Seemanசுரேஷ் காமாட்சி இயக்கத்தில் ஸ்ரீபிரியங்கா நாயகியாக நடித்துள்ள படம் மிக மிக அவசரம். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இதன் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள சீமான் கலந்துக் கொண்டார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் பேசும்போது…

“பொதுவாகவே காவலர்கள் பற்றிய ஒரு வெறுப்பு அனைவருமே இருக்கிறது.. காவல்துறையில் சில குறைகள் இருக்கிறது உண்மைதான். குற்றவாளிகளை தண்டிப்பதைவிட, குற்றம் நடக்காமல் பார்த்துக்கொள்வது தான் காவல்துறையின் கடமையாக இருக்க வேண்டும்..

அதேசமயம் அதிகப்படியான பணிச்சுமை அவர்களுக்கு மன அழுத்தத்தைத் தருகிறது அவர்களுக்கு பண்டிகை விழா என எந்த கொண்டாட்டங்களும் கிடையாது..

காக்கியை பார்த்தாலே பலருக்கு வெறுப்பு வருகிறது. எங்கள் ஆட்சி வரும்போது போலீஸ் யூனிபார்மை மாற்றுவோம். வேறு கலர் கொடுப்போம்.

ஆண் காவலர்களுக்கு நிறைய சிரமங்கள் இருந்தாலும் அவர்களை விட பெண்களுக்கு அதிகம் சங்கடங்கள் இருக்கவே செய்கின்றன.

அதனால்தான் ஆண் காவலர்களுக்கு 8 மணி நேரம், பெண் காவலர்களுக்கு 6 மணி நேரம் மட்டுமே பணி செய்ய ஒதுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகிறோம்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது அங்கு இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது அவர்களிடம் பேசி போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்காக நானும் அமீர் உள்ளிட்டவர்களும் சென்றிருந்தோம்.

அப்போது அங்கே பாதுகாப்புக்காக வந்திருந்த பெண் காவலர்கள் எங்களைப் பார்த்து அழுதபடி நாங்கள் வீட்டை விட்டு வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது மாற்றுத் துணி கூட கொண்டு வரவில்லை.. எங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதுகூட எங்களுக்கு தெரியவில்லை.

தயவுசெய்து இந்த போராட்டத்தை சீக்கிரம் முடியுங்கள்.. அப்போதுதான் நாங்கள் வீடு திரும்ப முடியும் என கெஞ்சியதை பார்த்ததும் பெண் காவலர்களின் நிலை என்னவென்று தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.

காவலர்களுக்கு பணிச்சுமையைக் குறைத்து, நல்ல ஊதியம், நல்ல வீடு என அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்யும்போதுதான் அவர்களால் நேர்மையாக பணியாற்ற முடியும். தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சி மூலம்தான் லஞ்சம் ஊழலை ஒழித்து நல்லாட்சி கொடுக்க முடியும்.

இந்த படம் பார்த்துவிட்டு நீங்கள் சாலையில் போகும்போது பாதுகாவலுக்கு நிற்கும் பெண் போலீசாரை பார்த்தால் உங்களுக்கு அவர்கள் மீது மிகப்பெரிய மரியாதை ஏற்படும்.” எனப் பேசினார் சீமான்.

We will change TN Police uniform while we come to rule says Seeman

sri priyanka miga miga avasaram

நயன்தாராவுக்கு லேட்டா கிடைச்சது எனக்கு உடனே கிடைச்சிட்டு..: ஸ்ரீ பிரியங்கா

நயன்தாராவுக்கு லேட்டா கிடைச்சது எனக்கு உடனே கிடைச்சிட்டு..: ஸ்ரீ பிரியங்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Sri Priyanka speech at Miga Miga Avasaram trailer launchசுரேஷ் காமாட்சி இயக்கத்தில் ஸ்ரீபிரியங்கா நாயகியாக நடித்துள்ள படம் மிக மிக அவசரம். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இதன் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் நாயகி ஸ்ரீ பிரியங்கா பேசும்போது…

“நிறைய போராட்டங்களுக்கு பிறகு மிக மிக அவசரம் படத்தின் மூலம் மிகவும் துணிச்சலான தனி ஒரு பெண்ணாக பெண் சிங்கமாக இன்று நான் நின்றிருக்கிறேன்.

அதற்கு சுரேஷ் காமாட்சி சாருக்குத்தான் சொல்ல வேண்டும். எல்லோரும் ஏன் பெரிய படங்களில் நடிப்பதில்லை என கேட்கிறார்கள்.

இங்கே நிறைய பேருக்கு இந்த பெண் கதாநாயகியாக ஒரு முழுநீள படத்தையும் தாங்கிப் பிடிப்பாரா என்கிற சந்தேகம் இருக்கிறது.. ஆனால் என்னால் முடியும்.

தமிழ் பெண்ணான எனக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் இருக்கிறது என்பதை இந்த படம் சொல்லும். இன்றைக்கு படத்தின் போஸ்டர்களை வழியெங்கும் பார்த்துக் கொண்டு வரும்போது, இந்த விழாவில் இத்தனை ஜாம்பவான்கள் மத்தியில் இருக்கும்போது ஆஸ்கர் விருது வாங்கியது போல உணர்கிறேன்.

இந்த மாதிரி கதையும் கதாபாத்திரமும் நயன்தாராவிற்கு நீண்ட நாட்கள் கழித்து தான் கிடைத்தது.

ஆனால் எனக்கு குறுகிய காலத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது.. வெளியூரிலிருந்து வரும் கதாநாயகிகளின் திறமையை எந்தவிதத்தில் இங்கிருப்பவர்கள் கணித்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை..

ஆனால் தமிழ் பெண்ணான என்னாலும் பெரிய நடிகருடன், பெரிய படங்களில் நடிக்க முடியும் என்பதை இங்கு இருக்கும் இயக்குனர்கள் தான் நம்ப வேண்டும்” என்றார்.

நடிகையும் பிரபல மாடலுமான மீரா மிதுன் பேசும்போது…

“ஸ்ரீ பிரியங்கா வருத்தப்பட தேவையில்லை இங்கே தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களுக்கும் வெற்றி கிடைக்கும்.
ஆனால் கொஞ்சம் கால தாமதமாக கிடைக்கும்.. நம்மைப் போன்ற பெண்களைப் பார்த்துத்தான் இன்னும் தமிழ் பெண்கள் இந்த சினிமாவிற்குள் நம்பிக்கையுடன் நுழைவார்கள்.

அதற்கு நாம் ஒரு காரணமாக இருப்போம். ஆனால் இப்போதுள்ள படங்களில் குடும்பம் பந்தம் பற்றி காணப்படுவதில்லை அப்படிப்பட்ட படங்கள் வரும்போது தான் பெண்கள் வலுவான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்“ என கூறினார்.

Actress Sri Priyanka speech at Miga Miga Avasaram trailer launch

Miga Miga avasaram மிக மிக அவசரம்

அகோரியாக நடிக்கும் அனுபவம் ஜாக்கிஷெராப் பேட்டி

அகோரியாக நடிக்கும் அனுபவம் ஜாக்கிஷெராப் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jakki sherofகஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கும் பாண்டி முனி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..

படப்பிடிப்பில் அகோரி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஜாக்கி ஷெராப் ..

சாதாரண நடிகர்கள் கூட தன்னை மிக உயர்ந்தவர்களாக காட்டிக் கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் மிக உயர்ந்த இடத்தில் மதிக்கக் கூடிய நிலையில் இருக்கும் ஜாக்கி சாதாரண மனிதனாக எல்லோருடனும் பழகிக் கொண்டிருந்தது ஆச்சர்யம் தான்.

எல்லோருடனும் செல்பி எடுத்துக் கொண்டிருந்த அவரை மடக்கி பேசினோம்..

இந்த படம் பற்றிய உங்கள் கண்ணோட்டம் என்ன ?

· இதில் நான் அகோரியாக நடிக்கிறேன்..

டைரக்டர் கஸ்தூரிராஜா கதையை சொன்னவுடன் இது எனக்கு புது மாதிரியான காரக்டராக இருக்கும் என்று நினைத்து ஓ.கே.சொன்னேன்..

ஆரண்ய காண்டம் மாயவன் மாதிரி இது வேறு ஒரு கதைக்களம்…என் உருவத்தை மட்டும் அல்ல..என் நடை உடை பாவனை எல்லாவற்றையுமே இது மாற்றும் படமாக இருக்கும்..

டைரக்டர் என்ன சொன்னாரோ அதை அப்படியே நான் பிரதிபலிக்கிறேன்..

நானாவது இந்த கதையில் ஆறு மாதங்கள் தான் ஊறி இருக்கிறேன்..ஆனால் இயக்குனர் ஆறு ஆண்டுகளாக இதை டிரீம் சப்ஜெக்டாக சுமந்து கொண்டிருக்கிறார்…

சிவபக்த அகோரியாக நடிக்கிறேன்…நல்லது செய்யும் முனீஸ்வரன் என்ற அகோரிக்கும் எல்லோரையும் அழிக்க நினைக்கும் பாண்டி என்கிற பேய்க்கும் நடக்கிற போராட்டம் தான் கதை.

அகோரி என்றால் ஆ…ஊ என்று கத்தி கலாட்டா செய்யும் அகோரி வேடமல்ல..

அமைதியால் எதையும் வெல்ல முடியும் என்கிற சிவ பக்த அகோரி வேடம்.

எனக்கே இது புது வேடம் தான் டைரக்டர் சொன்னதை சிறப்பாக செய்திருப்பதாக உணர்கிறேன்.

நான் அடிக்கடி சென்னை வருவேன்..

80 ம் வருட நடிகர் நடிகைகள் சந்திப்பு நடக்கும் போதெல்லாம் வருவேன்..

ஒவ்வொரு நடிகர் நடிகைகளும் அவரவர் வீட்டிலிருந்து இட்லி சாம்பார் ரசம் என்று எடுத்து வந்து பரிமாறி அசத்தி விடுவார்கள்..ரேவதி ராதிகா எல்லாம் எனக்கு நல்ல நண்பர்கள்.

நிறைய பேர் அந்த நடிகை இந்த நடிகை எப்படி டான்ஸ் ஆடுகிறார்கள் என்று கேட்கிறார்கள்…அவர்கள் பேர் எல்லாம் எனக்கு தெரியாது…நான் நிறைய படங்களை பார்ப்பது கிடைதாது…

எல்லோருமே சிறப்பாக நடிக்கிறார்கள்..நல்லா டான்ஸ் ஆடுகிறார்கள்..இல்லா விட்டால் சினிமா துரத்தி விட்டிருக்குமே..

என்னை பொருத்தவரை இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் தான் என் எஜமானர்கள்..

ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் என்னை உட்புகுத்தி அதற்கு சம்பளம், உடை ,சாப்பாடு கொடுக்கிற அவங்களை என்றைக்கும் நான் மறக்க மாட்டேன்.

இவ்வாறு ஜாக்கி ஷெராப் கூறினார்..

படம் பற்றி டைரக்டர் கஸ்தூரி ராஜா கூறியபோது…

இந்த காரக்டருக்கு முதலில் நான் பேசியது ராஜ்கிரண் சாரிடம் தான்..

அவர் கதையை கேட்டு விட்டு இந்த கதை நிறைய வேலை வாங்கும் ..மலை ,காடு எல்லாம் ஏறி இறங்க வேண்டி இருக்கும்..அவ்வளவெல்லாம் கஷ்டப்பட முடியாது..என்று சொல்லி விட அதற்கப்புறம் வேறு சில நடிகர்களையெல்லாம் கடந்து ஜாக்கியிடம் வந்து நின்றது.

கதையை கேட்டு முடித்த அவர் இதோ வருகிறேன் என்று வீட்டுக்குள் போனவர் அரை மணி நேரமாக ஆளையே காணோம்.. இவரும் நடிக்க மாட்டார் போலிருக்கு..என்று வேறு நடிகர்களை மனதுக்குள் ஓட விட்டேன். வெளியே வந்த ஜாக்கி இடுப்பில் மஞ்சள் துணியை கட்டிக் கொண்டு இது மாதிரி தானே காஸ்டியூம் என்று கேட்க ஆடிப் போய் விட்டேன்..

என் கதைக்குள் இருந்த முனீஸ்வரன் கதாபாத்திரமாகவே மாறி இருந்தார் அந்தளவுக்கு சின்சியரான நடிகர் இவர். நடிகராக இல்லாமல் நல்ல நண்பராக பழகிக் கொண்டிருக்கிறோம். படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்திருக்கிறது. ஹாரர் படமாக பாண்டி முனி வளர்ந்து கொண்டிருக்கிறது என்றார் கஸ்தூரிராஜா.

காதல் திரைப்படங்களின் நிலையான வரிசையில் ரீல்

காதல் திரைப்படங்களின் நிலையான வரிசையில் ரீல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

reel movie stillsகதையில் இருக்கும் கதாபாத்திரங்களும் , அதன் தன்மையுமே ஒரு ரொமான்டிக் படத்தின் தரத்தை தீர்மானிக்கிறது. குறிப்பாக தேர்ந்த நடிகர்கள் மட்டுமல்லாமல், அறிமுககங்களையும் பயன்பத்திக்கொள்ளும் திறமையே இப்படங்களின் தனித்துவம் என்று கூறலாம். கதாபாத்திரங்களின் வலிமையை உணர்த்தும் திரைப்படங்களை தமிழ் சினிமா நிறைய கண்டுள்ளது . இத்தகைய காதல் திரைப்படங்களை நிலையாக கொடுத்துவரும் தமிழ் சினிமாவின் வரிசையில் , நம்பிக்கையோடு சேர தயாராகயிருக்கிறது “ரீல்”.

“காதல் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு புதியவை இல்லையென்றாலும், அதன் வடிவமைப்பே அவற்றை தனித்து காட்டுகிறது . தலைப்பு என்பது ஒரு படத்தின் முக்கிய அம்சம்,இப்படத்தின் தலைப்பான “ரீல்” என்பது எதற்காக என்று கேள்விக்கு படத்தின் கதையே பதில் கூறும். நடிகர்கள் உதய்ராஜ் மற்றும் அவந்திகா கதாபாத்திரத்தின் வலிமையை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். KPY புகழ் சரத் இப்படத்தில் முழு நேர நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் ,ஒரு குணச்சித்ர நடிகராகவும் இப்படம் வெளிப்படத்தும்.
படத்தின் இறுதியில் வரும் திருப்பங்களும், கூறப்பட்டிருக்கும் கருத்தும் மக்களை வெகுவாக கவரும். கோவை ,மெலுகொட் கோத்தகிரி மற்றும் மைசூர் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெறுகிறது” என்றார் படத்தின் இயக்குனர் முனுசாமி.

“ரீல்” படத்தின் கதையை T.N.சூரஜ் அவர்கள் எழுத , முனுசாமி இயக்குகிறார். ரொமான்டிக் திரைப்படங்களில் , இசையின் பங்களிப்பு சற்று அதிகமாக இருக்கும் , இப்படத்திற்கு சந்தோஷ் சந்திரன் பாடல்களையும் , அச்சு ராஜாமணி பின்னணி இசையும் கவனிக்கின்றனர். சுனல் பிரேம் ஒளிப்பதிவு செய்ய , சாய் சுரேஷ் படத்தொகுப்பு செய்கிறார். ஸ்ரீ முருகா மூவி மேக்கர் தயாரிக்கும் இப்படத்தை விரைவில் வெளிக்கொண்டுவர இருக்கின்றனர்.

More Articles
Follows