அமெரிக்கா செல்லும் ரஜினியை சந்தித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நான் அரசியலுக்கு வருவது உறுதி. விரைவில் கட்சியை அறிவிப்பேன் என ஒரு சில வரிகள்தான் பேசினார் ரஜினிகாந்த்.

அதற்குள்ளேயே ரஜினியை விமர்சித்து பலரும் பல விதமாக பேசி வருகிறார்கள்.

ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த எம்எல்ஏக்களை கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் ரஜினியை நோக்கி கேட்கின்றனர்.

பெரும்பாலான அரசியல் கட்சிகள் ரஜினியை டார்கெட் செய்தே தங்களது அரசியலை முன்னெடுத்து செல்ல நினைக்கின்றனர்.

இதை எல்லாம் கண்டுக் கொள்ளாத ரஜினி தன் மக்கள் மன்ற பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமித்து தொண்டர்கள் சேர்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று இரவு சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.

அங்கு 10 நாட்கள் தங்கிருந்து மருத்துவ பரிசோதனை செய்யவுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி, ரஜினியை இன்று காலை போயஸ் தோட்டத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.

அவர்கள் என்ன விவகாரம் குறித்து ஆலோசித்தார்கள் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. அமெரிக்காவில் கட்சி சம்பந்தமாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘ஆப்’ தொழில் நுட்பம் சார்ந்த பணிகளையும் ரஜினி பார்வையிட உள்ளாராம்.
மேலும் பல கட்ட நிபுணர்களையும் அரசியல் ஆலோசகர்களை சந்தித்து ஆலோசனை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியின் பாராட்டில் மெய் சிலிர்த்த மெர்க்குரி படக்குழுவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 50 நாட்களாக திரைப்பட தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் நடந்து வந்ததால் தமிழகத்தில் எந்த படங்களும் வெளியாகவில்லை.

ஆனால் வசனங்களே இல்லாத மெர்க்குரி படத்தை தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் ரிலீஸ் செய்தார் இதன் தயாரிப்பாளரும் இயக்குனருமான கார்த்திக் சுப்பராஜ்.

அதன்பின்னர் ஸ்டிரைக் முடிவுக்கு வரவே, ஏப்ரல் 20ஆம் தேதி அப்படம் தமிழகத்திலும் வெளியானது.

வசனங்களே இல்லாமல், சைலண்ட் த்ரில்லராக உருவான இப்படத்தில் பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையிலேயே பயணித்த இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தை பார்த்த நடிகர் ரஜனிகாந்த் படக்குழுவினரை தன் போயஸ் கார்டன் இல்லத்திற்கு வரவழைத்து பாராட்டியுள்ளார்.

படம் குறித்து ரஜினி கூறும் போது, பிரபுதேவா கலக்கிட்டாரு, கேமரா, இசை, ஸ்டன்ட் என எல்லாமே அருமை. மொத்தத்தில் சிறந்த படம் என்று பாராட்டியதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அதை கார்த்திக் சுப்புராஜ்தான் இயக்கவுள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் தான் இசையைமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Rajinikanth praises Karthik Subbarajs Mercury movie and his team

வெளிநாட்டு நடிகைக்காக கெட் அப்பை மாற்றும் விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி நடித்துள்ள ’காளி’ படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

இதனையடுத்து ’திமிரு பிடிச்சவன்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்த படங்களை அடுத்து அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் மூடர் கூடம்’ பட இயக்குனர் நவீன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்காக விஜய் ஆண்டனி தன்னுடைய வழக்கமான சுருள் முடி மற்றும் தாடி கெட் அப்பை மாற்றவிருக்கிறாராம்.

இதற்காக மும்பையில் இருந்து டெக்னீஷியன்களை வரவழைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தின் கதைப்படி வெளிநாட்டு ஹீரோயின் ஒருவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது.

தங்கப்பதக்கம் வென்ற சதீஷ் சிவலிங்கத்தை நேரில் பாராட்டிய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்றது.

போட்டியின் முடிவில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 3வது இடத்தை பிடித்தது.

இதில், ஆடவருக்கான பளு தூக்குதல் போட்டியில் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இவர் தமிழ்நாட்டின் வேலுர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சதீஷ்குமாரை பலரும் பாராட்டி வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

நேற்று சிவகார்த்திகேயனை சந்தித்த சதீஷ்குமார், அவரது டுவிட்டர் பக்கத்தில், `சிறந்த மனிதரை சந்தித்ததில் மகிழ்ச்சி. பதக்கத்துடன் அன்பரை சந்தித்தேன்.

அவரது அரவணைப்பு மற்றும் வார்த்தைகள் என்னை நிறைய ஊக்கப்படுத்தின. உங்களது அன்பாக பரிசுக்கு நன்றி சிவகார்த்திகேயன்’. இவ்வாறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Sivakarthikeyan praises Common Wealth Games Gold Medalist Sathishkumar Sivalingam

sathish kumar sivalingam oly‏ @imsathisholy
Such an amazing human being to meet.Truly loved to meet him with my CWG MEDAL.His warmth and words truly inspired me a http://lot.Star whom I admire and celebrate for his hard work and walks of life.Thx @Siva_Kartikeyan brother for your lovely gift

இரும்புத்திரை மே 11ல் ரிலீஸ்; அந்த தகவல் பொய் என விஷால் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் தயாரித்து நடித்துள்ள படம் `இரும்புத்திரை’.

பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுடன் சமந்தா, அர்ஜூன், டெல்லி கணேஷ், கோபி, ரோபோ ஷங்கர், வின்சென்ட் அசோகன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த படம் ரிலீசுக்கு தயாரான போதிலும் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற மே 11-ஆம் தேதி ரிலீஸ் என போஸ்டர்கள் வெளியானது.
ஆனால், அந்த தேதியில் வெளியாகாது. புதிய ரிலீஸ் தேதியை அறிவிப்பேன் என்று விஷால் தற்போது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Irumbu Thirai will not release on 11th May 2018 says Vishal

மே 4ல் தொடங்கும் விஸ்வாசம்; பயமுறுத்த தயாராகும் அஜித்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வீரம், வேதாளம், விவேகம் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து அதே வீ சென்டிமெண்டில் அஜித் சிவா இணைகின்ற படம் விஸ்வாசம்.

இமான் இசையமைக்க, நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ள இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் அறிவிப்பு வந்து ஒரு சில மாதங்கள் ஆகிவிட்டாலும் இதன் சூட்டிங் தொடங்கப்படாமல் இருந்து வந்தது.

தற்போது 50 நாட்கள் கோலிவுட் ஸ்டிரைக்கிற்கு பிறகு இதன் சூட்டிங் வருகிற மே 4ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கப்பட உள்ளதாம்.

இந்நிலையில் அஜித்தின் விஸ்வாசம் படப்பிடிப்பு மே மாதம் 4-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹைதராபாத்தில்தான் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது வழக்கமான அஜித்தின் காதல் மற்றும் ஆக்சன் கதையாக இல்லாமல் திகில் படமாக உருவாகவுள்ளதாம்.

Ajith and Nayanthara starring Viswasam movie updates

More Articles
Follows