தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
பிரசன்ன எஸ் குமார் ஒளிப்பதிவு செய்ய, அர்ஜுன் ரெட்டி புகழ் ரதன் இசையமைக்கிறார்.
இப்படத்தை இயக்கி மசாலா பிக்ஸ் பேனர் சார்பில் தானே தயாரிக்கிறார் ஆர் கண்ணன்.
இப்படத்திற்காக பல மணி நேரம் கஷ்டப்பட்டு ப்ரோஸ்தடிக் மேக்கப் செய்து கொள்கிறாராம் அதர்வா.
மேக்கப் துறையில் சிறந்த கலைஞர்களான ப்ரீத்திஷீல் சிங், மார்க் ட்ராய் டிஸோசா ஆகியோர் அதர்வாவுக்கு மேக் அப் போடுகின்றனர்.
இவர்கள் பத்மாவத், மாம் ஆகிய படங்களில் ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி இயக்குனர் கண்ணன் கூறியதாவது…
“இந்த கதையும், அதர்வாவின் கேரக்டரும் உருவான போது அதற்கு 3 விதமான தோற்றங்கள் தேவைப்பட்டது.
எனவே அதன்படி அதர்வாவின் கண்கள், மூக்கு தவிர அவரின் வாய் உட்பட சின்ன சின்ன அளவுகளை அளவெடுத்து சென்றனர் மேக் அப் மேன்கள்.
அதன்பின்னர் சூட்டிங்கின் போது ஒரு வகையான மாவை அதர்வாவின் மீது பூசி விடுவார்கள்.
அதர்வா ஐந்து மணி நேரம் சிலை போல அசையாமல் இருப்பார். அந்த நிலையில் மூச்சு விடுவது மிகவும் சிரமமான விஷயம், மூச்சு விடுவதற்கு ஒரு சிறு குழாய் அவர் மூக்கில் பொருத்தப்பட்டது.
அதை தொடர்ந்து ப்ரோஸ்தடிக் கேஸ்ட் செய்ய 30 நாட்கள் தேவைப்பட்டது.” என்றார்.
