தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அடிப்படை வசதிகளே இல்லாத கிராமங்கள் உள்ளன.
அதில் அட்டப்பாடி என்ற கிராமமும் ஒன்று. அதற்கு துணை கலெக்டராக இருப்பவர் உமேஷ் கேசவன்.
அந்த கிராமத்தில் அவர் ஆய்வுகளை மேற்கொண்ட போது, கல்வி மற்றும் அடிப்படை தேவைகளில் இந்த கிராமம் மிகவும் பின் தங்கியிருந்தாலும், அங்குள்ள மக்கள் நடிகர் விஜய்யை நன்கு அறிந்து வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் இதனை தன் பேஸ்புக்கத்திலும் பதிவிட்டு இருந்தார்.
இதனையறிந்த விஜய், அவரை சந்தித்து பேசியுள்ளார். மேலும் அந்த கிராமம் பற்றிய விவரங்களை கேட்டறிந்தாராம்.
இருவரும் சுமார் ஒரு மணி நேரம் இருவரும் உரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் விரைவில் அட்டப்பாடி கிராமத்திற்கு விஜய் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.