ஒரே நேரத்தில் 4 படங்கள்; *ராக்கெட்* வேகத்தில் அசோக் ரங்கநாதன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

க்யூ சினிமாஸ் சார்பில் அஷோக் ரங்கநாதன் மூன்று படங்கள் தயாரிக்கிறார்.

இதில் ராக்கெட் என்ற படத்தை எழுதி இயக்கி தயாரித்து அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது.

பிரபு கிருத்திகா ஜெயப்பிரகாஷ் கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்துள்ளனர். அடுத்ததாக பிரபல ஹீரோ, ஹீரோயின், முன்னனி நடிகர் நடிகையரை வைத்து எழுதி இயக்கி தயாரிக்கிறார்.

மற்றொரு படத்தை இயக்குனர் வேலுப்பிரபாகரன் உதவி இயக்குனர் அகரன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

இதில் நடிக்க இந்திய அளவில் இருக்கும் ஒரு நடிகையிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. நிச்சயம் இப்படம் பேசப்படும்.

கதையை கேட்ட மாத்திரமே படம் பண்ண முடிவு செய்யப்பட்டு வேலைகள் நடக்கிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பித்து, ஒரே கட்ட படப்பிடிப்பாக நடத்தி முடிக்க திட்டமிடப்படுகிறது.

இதற்கிடையே பூர்ணா, கிஷோர், “தீரன் அதிகாரம் ஒன்று” வில்லன் அபிமன்யூ சிங் மற்றும் பலர் நடித்த “குந்தி” என்ற மொழி மாற்று படத்தை இம்மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்.

சிவகார்த்திகேயனுக்காக விட்டுக் கொடுத்த அனிருத்; #நண்பேன்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பொன்ராம்-சிவகார்த்திகேயேன்-சூரி ஆகியோர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி வரும் திரைப்படம் சீமராஜா.

இந்த திரைப்படத்தில் சமந்தா நாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் நெப்போலியன், சிம்ரன் சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில் இசை வெளியீட்டு விழா கடந்த 3 ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இசை வெளியீட்டு விழா நடைபெறும் அதே நாளில் சீமராஜா படத்தின் டீசரையும் படக்குழுவினர் வெளியிட்டனர்.

அதே நாளில் நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் கோலமாவு கோகிலா படத்தின் திட்டம் போட தெரியல என்ற பாடல் வெளியாக இருப்பதாக படக் குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெளியிடப்படவில்லை.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள இசையமைப்பாளர் அனிருத்…

“இன்று (ஆகஸ்ட் 3) என் இனிய நண்பன் சீமராஜாவின் நாள். அதனால், ‘திட்டம் போடத் தெரியல’ பாடல் நாளை வெளியாகும்” என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் பதிவிட்ட சிவகார்த்திகேயன்“உங்கள் அன்புக்கு நன்றி. உங்களுடைய பாடலுக்கும் வரவேற்பு கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் திட்டம் போடத் தெரியல பாடலும் வெளியாகிவிட்டது.

Breaking முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் இணையும் ஹிப்ஹாப் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா படம் செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாகிறது.

இதனையடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதனையடுத்து தற்போது ராஜேஷ்.எம் இயக்கத்தில் காமெடி படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.

இதில் நயன்தாரா, ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்கின்றன்ர.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளரை தற்போது அறிவித்துள்ளனர்.

நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

தினேஷ் கிருஷ்ணன் என்பவர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

விஜய்சேதுபதிக்கு ஆத்ம திருப்தி கொடுத்த *மேற்குத் தொடர்ச்சி மலை*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய்சேதுபதி தனது சொந்த தயாரிப்பில் மேற்குத் தொடர்ச்சி மலை என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.

இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தை லெனின் பாரதி இயக்கியுள்ளார்.

இதில் தேனி அந்தோணி ராஜ் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் காயத்ரி கிருஷ்ணா, அபு வலையன்குளம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பல்வேறு நாடுகளில் இப்படம் திரையிடப்பட்டு விருதுகளை வென்றுள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்து வீடியோ வெளியிட்டிருக்கும் விஜய் சேதுபதி, இப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது… “இந்த படம் எளிய மக்களுக்கான படம். ரொம்ப அழகா வந்திருக்கு, என்னை பொறுத்தவரைக்கும் இந்த மாதிரி படம் செய்ததில்லை. ஆத்ம திருப்தியோடு இருக்கிறேன்.

இந்த படத்தின் கதையை கேட்டு இசையமைத்து கொடுத்த இசைஞானி இளையராஜாவிற்கு நன்றி. படம் உங்களிடம் நிறைய பேசும்” என தெரிவித்துள்ளார்.

Vijay Sethupathi talks about his production Merku Thodarchi Malai movie

ஜிவி. பிரகாஷ் படத்திற்கு *ஜெயில்* டைட்டில் வைத்த வெயில் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

4ஜி. ஐங்கரன், அடங்காதே, குப்பத்துராஜா, 100% காதல், சர்வம் தாளமயம், ரெட்டைகொம்பு, கறுப்பர் நகரம் என பல படங்களில் நடித்தும் இதில் ஒரு சில படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

அடுத்ததாக இவர் தேசிய விருதுபெற்ற இயக்குனர் வசந்தபாலன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார் என்பதைபார்த்தோம்.

இதில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் அபர்ணதி நாயகியாகவும், பள்ளிப்பருவத்திலே நாயகன் நந்தன் ராம், பசங்க பாண்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஜெயில் என தலைப்பிட்டு டிசைன் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

வசந்தபாலன் இயக்கிய ‘வெயில்’ படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பாளாராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vasantha Balan and GV Prakash teams up for Jail movie

கில்லர் க்ளைமாக்ஸ்; டார்லிங் வரலட்சுமிக்கு விஷால் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“இரும்புத்திரை’ படத்தை அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2′ படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

இதில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லியாக வரலட்சுமி நடித்து வருகிறார்.

இப்படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரலட்சுமி அவரது காட்சிகளை நடித்து முடித்துள்ளார்.

இதுகுறித்து விஷால் தெரிவித்துள்ளதாவது…

சண்டக்கோழி-2 படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டோம். இன்றுடன் வரலட்சுமி சரத்குமாரின் காட்சிகள் முடிந்துவிட்டது.

கில்லர் கிளைமாக்ஸ். டார்லிங் வருவுக்கு நன்றி. நான் பார்த்த சிறந்த நடிகை அவர். அக்டோபர் 18ஆம் தேதி ரிலீசுக்காக காத்திருப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Vishal thanks to Darling Varalakshmi for Completing Sandakozhi 2

Vishal‏Verified account @VishalKOfficial
Wow. Coming to the final leg of shoot for #sandaikozhi2 n #pandemkodi2 it’s a wrap for @varusarath.its gonna be a Gud one.killer climax fight.:) 🙂 thank u so much darling Varu. one of the most professional actresses I’ve come across. Lookin fwd to #oct18.god bless

More Articles
Follows