ஹாலிவுட் திரையுலக பெருமகன் அசோக் அமிர்தராஜின் தாயார் மரணம்

ஹாலிவுட் திரையுலக பெருமகன் அசோக் அமிர்தராஜின் தாயார் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)கடந்த ஏப்ரல் 20ம் தேதி, ஈஸ்டர் வார இறுதியில், உயர் ஆளுமை கொண்ட திருமதி. மேகி அமிர்தராஜ், சென்னையில் தனது இல்லத்தில் காலமானார்.

இவர் ஹாலிவுட்டின் வெற்றிகரமான, புகழ்வாய்ந்த இந்திய வம்சாவளி தயாரிப்பாளரும், டென்னிஸ் வீரருமான அசோக் அமிர்தராஜ் மற்றும் அவரது சகோதரர்களான இந்திய விம்பிள்டன் நட்சத்திரங்கள், விஜய் மற்றும் ஆனந்த் அமிர்தராஜின் தாயார் ஆவார்.

திருமதி அமிர்தராஜ் ஒரு சிறந்த ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும், கனவு காண்பவராகவும், ஒழுக்கமானவராகவும், நல்ல மனைவியாகவும், சிறந்த தாயாகவும் திகழ்ந்தார்.

ஒரு மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஒரு சுதந்திரமான பெண்மணி என்ற போதிலும், திருமதி அமிர்தராஜ் தனது குடும்பத்திற்கே எப்போதும் முன்னிரிமை அளித்தவர். தனது இரு குழந்தைகளுக்கும் தனது சுய சம்பாத்தியத்திலிருந்து இரண்டு டென்னிஸ் மட்டைகளை வாங்கியவர். 1950/60 களில் எப்படி ஒரு பெண் இத்தனை பெரிய கனவுகளுடன் இருந்திருப்பார்? ஸ்டேர்லிங் சாலையில் காத்தாடிகளின் பின்னால் ஓடிக்கொண்டிருந்த மூன்று சிறுவர்களை, மூன்று டென்னிஸ் நட்சத்திரங்களாக, இரண்டு ஐக்கிய நாட்டு சபை தூதுவர்களாக (தற்போது அசோக் அமிர்தராஜ், அதற்கு முன்னர் விஜய் அமிர்தராஜ்), ஒரு ஹாலிவுட் திரையுலகப் பெருமகனாக உருவாக்கியிருக்கிறார். இவையனைத்தும் மேகியின் படைப்புகள், சிறுவர்கள் மூவரும் அதற்கு துணையாக இருந்தனர்.

திருமதி அமிர்தராஜ் தனது மகன்களிடம் குடும்பத்தின் மதிப்பு, முக்கியத்துவம், அதன் வேர்கள் குறித்து உயர்ந்த எண்ணங்களை விதைத்திருந்தார். அதன் காரணமாக மூவரும், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்தாலும், கிறிஸ்துமஸ் மற்றும் புது வருட கொண்டாட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பெற்றோருடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இத்தகைய ஆழமான குடும்ப பிணைப்பு தற்போது அவர்களது பேரக் குழந்தைகளுக்கும் விதைக்கபடுகிறது. மேகி மற்றும் ராபர்ட் அமிர்தராஜின் மரபுகள், குழந்தைகளின் மூலம் பேரக் குழந்தைகளையும் சென்றடைகிறது.

‘வேள்பாரி’ கதையில் நடிக்க ஆர்வம் காட்டும் தனுஷ்..?

‘வேள்பாரி’ கதையில் நடிக்க ஆர்வம் காட்டும் தனுஷ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush interested in Historical Epic Velpaari Novelவெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் என நடித்து வருகிறார் தனுஷ்.

இதன் பின்னர் ராம்குமார், கார்த்திக் சுப்புராஜ் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.

இந்த படங்களை முடித்துவிட்டு சரித்திர படமொன்றையும் இயக்கி நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், பிரபல நாளிதழ் ஒன்றில் தொடராக வந்த வேள்பாரி என்ற கதையில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம்.

வெங்கடேசன் என்பவர் இந்த தொடரை எழுதி வருகிறார்.

இயற்கைக்கும், மனித பேராசைகளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் பற்றிய கதை தான் இந்த ‘வேள்பாரி’ என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush interested in Historical Epic Velpaari Novel

“இத்தனை வருட காலத்தில் நான் இதுவரை நடிக்காத கேரக்டர் இது”; நடிகை சச்சு பெருமிதம்..!

“இத்தனை வருட காலத்தில் நான் இதுவரை நடிக்காத கேரக்டர் இது”; நடிகை சச்சு பெருமிதம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectகிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ்’ சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’. ‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’ ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சீனியர் நடிகை சச்சு இந்தப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்..

படத்தின் கதைப்படி, முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவர் தான் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்களை கொண்டு ஒரு மருந்து கண்டுப்பிடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவ குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது.

ஷில்பாவின் பாட்டியாக வரும் சச்சு, அந்த நிறுவனத்தை அணுகி தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளகிறார். பாட்டி சச்சு, இப்போது அழகான பேத்தியாக மாறிவிடுகிறார். அதன்பின் படத்தில் நடக்கும் கலாட்டாக்கள் தான் கதை.

இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சச்சு கூறியதாவது,

“எம்.ஜி.ஆர் – சிவாஜி காலம்தொட்டு கிட்டத்தட்ட ஐந்து தலைமுறையாக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.. இப்போதுள்ள இயக்குனர்கள் எனக்கென்று ஒரு கதாபாத்திரம் இருப்பதாக கூறி என்னை அழைப்பதையே மிக பெருமையாக நினைக்கிறேன்.. இப்போதைய கலைஞர்கள் எங்களுக்காக என எதையும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.. ஆனால் நான் அவர்களுக்கு ஏற்றாற்போல் என்னை மாற்றிக்கொள்கிறேன்.

அதனால் தான் இந்த படத்தில் ஒரு புதுவிதமான கதாபாத்திரம் என்றதும் என்னால் எளிதில் ஒப்புக்கொள்ள முடிந்தது. இத்தனை வருட காலத்தில் நான் இதுவரை நடிக்காத கேரக்டர் இது. வயதானாலும் கூட பியூட்டி பார்லர் சென்று தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் இந்த கதாபாத்திரம் போன்றே இப்போதும் கூட நிஜத்தில் நிறைய பெண்களை பார்த்திருக்கிறேன்.. அதைத்தான் இந்தப்படத்தில் பிரதிபலித்திருக்கிறேன்..

பெண்கள் எந்த வயதில் இருந்தாலும் தங்கள் அழகை பேணிக்காப்பதில் அக்கறை காட்டவேண்டும். அதற்கு பியூட்டி பார்லர் தான் போக வேண்டுமென கட்டாயமில்லை.. இயற்கையான முறையிலேயே தங்களது அழகை வெளிப்படுத்தலாம்.. இந்த விஷயத்தில் அறிவியல் தொழில்நுட்பத்தை எங்கே எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என ஒரு வரைமுறை இருக்கிறது. சில தவறான இடங்களில் அதை பயன்படுத்தும் போது ஏற்படும் பின்விளைவுகள் என்ன அதன் பிரச்சனைகள் என்ன என்பதை தான் இந்த பேரழகி ‘ஐ எஸ் ஓ’ படத்தில் முக்கியமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜயன். அறிவியல் கதை என்றாலும் அதை சீரியசாக இல்லாமல் நகைச்சுவை கலந்து ஒரு பாட்டி பேத்தியின் கதையாக அனைவரும் பார்க்கும் விதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் விஜயன்” என்கிறார் சச்சு.

CROWD FUNDINGல் தயாரான நெடுநல்வாடை-க்கு கிடைத்த பாராட்டுக்கள்

CROWD FUNDINGல் தயாரான நெடுநல்வாடை-க்கு கிடைத்த பாராட்டுக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nedunalvaadai movie got award news and updatesஅறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் பூராமு, இளங்கோ, அஞ்சலி நடித்த ‘நெடுநல்வாடை’ படம் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றது.

இப்படத்தை பார்த்த அனைவரும் தங்கள் பாராட்டுக்களை தெரித்தனர்.

இதனிடையில் பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் 26 நாடுகளிலிருந்து 106 திரைப்படங்கள் கலந்துகொண்ட (Innovatie Film Acadamy (IFA) ‘நெடுநல்வாடை’ படம் அனைவரது பாராட்டையும், விருதையும் பெற்றுள்ளது.

அதன்பின்னர் இயக்குனர் செல்வக்கண்ணன் பேசியதாவது,

பெரிய, பல நாடுகளில் இருந்து, பல மொழிகளில் இருந்து வந்திருக்கும் முக்கியமான இயக்குனர்கள், சினிமாத்துறையில் இருந்து வந்திருப்போர்கள் முன்னாடி எங்கள மாதிரி புதியவர்கள் நிக்கிறோம்கிறது எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு.

எங்களை அங்கீகரித்த குழுவினருக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நன்றி.

தமிழ் சினிமா துறையில் உருவான முதல் CROWD FUNDING திரைப்படம் நெடுநல்வாடை.

என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பேசினார்.

Nedunalvaadai movie got award news and updates

‘இராவண கோட்டம்’ படத்தில் சாந்தனுக்கு ஜோடியாக ஆனந்தி

‘இராவண கோட்டம்’ படத்தில் சாந்தனுக்கு ஜோடியாக ஆனந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kayal Anandhi joins Shanthanus Ravana Kottamமதயானை கூட்டம்’ படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன், 6 ஆண்டுகளுக்கு பிறகு `இராவண கோட்டம்’ என்ற படத்தை இயக்கவுள்ளார்.

சாந்தனு நடிக்கவுள்ள இப்படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது.

இதில் சாந்தனு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கவுள்ளார்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

Kayal Anandhi joins Shanthanus Ravana Kottam

சிவகார்த்திகேயனை அடுத்து மீண்டும் சூர்யாவை இயக்கும் பாண்டிராஜ்

சிவகார்த்திகேயனை அடுத்து மீண்டும் சூர்யாவை இயக்கும் பாண்டிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pandiraj plans to direct Suriya again for his new movieகார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார்.

இப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்திருந்தார். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

தற்போது சன் டிவி தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் பாண்டிராஜ்.

இந்த நிலையில் சூர்யாவுக்காக ஒரு பக்காவான கிராமத்து கதையை உருவாக்கி வைத்திருக்கிறாராம் பாண்டிராஜ்.

இதற்கு முன்பே சூர்யா நடித்து தயாரித்து பசங்க 2 படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pandiraj plans to direct Suriya again for his new movie

More Articles
Follows