அரவிந்த்சாமியுடன் த்ரிஷா; ‘சதுரங்கவேட்டை-2’ வில் கூடுதல் ட்விட்ஸ்டுகள்

அரவிந்த்சாமியுடன் த்ரிஷா; ‘சதுரங்கவேட்டை-2’ வில் கூடுதல் ட்விட்ஸ்டுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arvindswamy and trishaநடிகர் மனோபாலா தயாரிப்பில் வெளியான ‘சதுரங்க வேட்டை’ படம் பாக்ஸ் ஆபீசில் நல்ல லாபத்தை கொடுத்தது.

எனவே, தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கவிருக்கிறார் இவர்.

முதல் பாகத்தில் கிராமம் சார்ந்த ஏமாற்று வேலைகளை காட்டியிருந்தனர்.

தற்போது உருவாகவுள்ள இரண்டாம் பாகத்தில் தகவல் தொழில்நுட்ப மற்றும் அதனைச் சார்ந்த பல ஏமாற்று வேலைகளை காட்டப்போகிறார்களாம்.

இப்படத்திற்கு வினோத், கதை வசனம் எழுத, சலீம் பட இயக்குனர் நிர்மல் இயக்கவிருக்கிறார்.

இதில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்க, நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘பாக்யராஜ் இல்லன்னா அய்யனார் வீதி இல்லை’ – ஜிப்ஸி ராஜ்குமார்

‘பாக்யராஜ் இல்லன்னா அய்யனார் வீதி இல்லை’ – ஜிப்ஸி ராஜ்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bhagyaraj helped lot in Ayyanar Veethi project says Jipsy Rajkumarஜிப்ஸி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அய்யனார் வீதி.

சாட்டை யுவன் நாயகனாகவும், ஷாரா ரெட்டி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

கே.பாக்யராஜ் மற்றும் பொன்வண்ணன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சிங்கம்புலி, மீரா கிருஷ்ணன், முத்துக்காளை உள்ளிட்டோரும் உண்டு.

யு.கே.முரளி இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஸ்ரீசாய் சண்முகா பிக்சர்ஸ் சார்பில் செந்தில்வேல் தயாரித்திருக்கிறார்.

இப்படம் குறித்து ஜிப்ஸி ராஜ்குமார் கூறியதாவது…

“நான் ஒரு பத்திரிகையாளன். ஜிப்ஸி தியேட்டர் என்ற பெயரில் தெரு நாடகங்கள் நடத்தி வருகிறேன். அந்த அனுபவத்தில் சினிமா இயக்க வந்திருக்கிறேன்.

இப்படத்தை என் சொந்த ஊரான ராஜபாளையத்தில் இயக்கியிருக்கிறேன்.

ஒரு ஐய்யர், அய்யனாராவதுதான் இப்படத்தின் ஒன்லைன்.

கே.பாக்யராஜை படமாக்கியது என் பாக்கியம். அவர் ஸ்கிரிப்ட், வசனத்தில் நிறைய உதவிகளை செய்தார்.

அவர் இல்லாவிட்டால் இந்த அய்யானர் வீதி இல்லை” என்றார் ஜிப்ஸி ராஜ்குமார்.

தல-57 படங்கள் லீக்; ஆத்திரப்பட்ட அஜித்?

தல-57 படங்கள் லீக்; ஆத்திரப்பட்ட அஜித்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor ajith kumarசிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் தல 57 படத்தின் சூட்டிங் அண்மையில் ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்றது.

அப்போது இதுகுறித்த செய்திகள் அந்நாட்டு பத்திரிகைகளில் வெளியான செய்திகளை பார்த்தோம்.

மேலும் அந்த செய்திகளில் காட்சிகள், சூட்டிங் சம்பந்தப்பட்ட புகைப்படங்களும் வெளியானதாம்.

பலத்த பாதுகாப்பு இருந்தும் இந்த படங்கள் வெளியானது எப்படி? என படக்குழுவினரிடம் அஜித் ஆத்திரப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்று (செப். 23) இதன் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது.

தனுஷ் இயக்கும் பவர் பாண்டி படத்தின் கதை இதுதானா?

தனுஷ் இயக்கும் பவர் பாண்டி படத்தின் கதை இதுதானா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and rajkiranராஜ்கிரண் ஹீரோவாக நடிக்கும் ‘பவர்பாண்டி’ படத்தை தனுஷ் இயக்கவிருக்கிறார்.

இதில் பிரசன்னா, சாயாசிங் உள்ளிட்டோர் நடிக்க, சீன் ரோல்டான் இசையமைக்கிறார்.

ராஜ்கிரணின் மனைவியாக நதியா நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக பணிபுரியும் கலைஞர்களை பற்றிய படம்தான் இது என தெரிய வந்துள்ளது.

மேலும் அந்த கலைஞர்களுக்கு வயதான பிறகு அவர்களின் வாழ்க்கை முறையை பற்றியும் சொல்லவிருக்கிறார்களாம்.

இப்படத்தின் இயக்குனர் தனுஷை ராஜ்கிரண் செல்லமாக மருமகன் என்றுதான் அழைப்பாராம்.

சிம்பு படங்களிலேயே இதுதான் அதிகமாம்…

சிம்பு படங்களிலேயே இதுதான் அதிகமாம்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor simbu stillsஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இப்படத்திற்கு யுவன் இசையமைக்க, சிம்பு இதில் மூன்று வேடம் ஏற்கிறார்.

இதுவரை ஸ்ரேயா மற்றும் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டாம் கேரக்டருக்கான சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழக உரிமைக்கு ரூ. 25 கோடி வரை பேசப்பட்டு வருகிறதாம்.

இதுவரை சிம்பு படங்கள் இந்த விலைக்கு விற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் காதலர் தினத்தை (பிப்ரவரி 14) குறிவைத்து இப்படம் தயாராகி வருகிறது.

ஆஸ்கர் கதவை தட்டும் தனுஷின் படம்; திறக்கப்படுமா?

ஆஸ்கர் கதவை தட்டும் தனுஷின் படம்; திறக்கப்படுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush stillsஇந்திய அரசின் தேசிய விருது உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை குவித்த படம் விசாரணை.

வெற்றிமாறன் இயக்கிய இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார்.

தினேஷ், சமுத்திரக்கனி, கிஷோர், ஆடுகளம் முருகதாஸ், ஆனந்தி உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு ஜிவி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு செல்லும் படமாக ‘விசாரணை’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இத்தவலை உறுதி செய்துள்ள தனுஷ், படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

More Articles
Follows