சூர்யா பட டப்பிங்கை தொடங்கினார் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ்

சூர்யா பட டப்பிங்கை தொடங்கினார் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலையுலகில் மூன்று தலைமுறையாக ஒரு குடும்பம் நடிப்பில், பாரம்பரியமாக ஜொலிப்பது, மிகப்பெரும் சாதனை.

நடிகர் விஜயகுமார், அருண் விஜய் மற்றும் இப்போது அவர்களது, தொடர்ச்சியாக அடுத்த தலைமுறையில் ஆர்ணவ் விஜய் வரை நடிப்பு அக்குடும்பத்தில் மரபாக, அழகாக வளர்க்கப்படுகிறது.

2D Entertainment நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படத்தில், தாத்தா-தந்தை-மகன் மூவரும் திரையில் இணைந்து நடிக்கும் செய்தி, ரசிகர்களிடம் பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், ஆர்ணவ் விஜய் இன்று தனது காட்சிகளுக்கான, டப்பிங் பணிகளை செய்யத் தொடங்கினார்.

இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலைகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

இயக்குநர் சரவ் சண்முகம் எழுதி இயக்கியுள்ள இந்தப்படம், குழந்தைகளை மையப்படுத்தி, 100% குடும்பங்கள் கொண்டாடும் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.

மொத்த படக்குழுவும் இப்படம் உலக ரசிகர்கள் ரசிக்கும் படியான படமாகவும், மன அழுத்தத்தை நீக்கும், பொழுதுபோக்கு திரைப்படமாகவும் இருக்குமென உறுதியாக நம்புகிறது.

இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் ஊட்டியை சுற்றிய பகுதியில் நடத்தப்பட்டுள்ளது.

சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கிறது. ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், RB Films யின் S.R.ரமேஷ் பாபு உடன் இணைந்து இணை தயாரிப்பு செய்கிறார்கள்.

நிவாஸ் கே பிரசன்னா (இசை), கோபிநாத் (ஒளிப்பதிவு), மேகா (எடிட்டிங்), மைக்கேல் (தயாரிப்பு வடிவமைப்பாளர்), வினோதினி பாண்டியன் (உடைகள்) ஆகியோர் தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றியுள்ளனர்.

Arun Vijay son Arnav starts dubbing for his debut film

உங்க பெயர் முத்துராமலிங்கம்.? அப்படின்னா சினிமாவில் நடிக்க சூப்பர் சான்ஸ் இதோ..

உங்க பெயர் முத்துராமலிங்கம்.? அப்படின்னா சினிமாவில் நடிக்க சூப்பர் சான்ஸ் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மேஸ்ட்ரோ இசைஞானி
இளையராஜா இசைமழையில்
ஜல்லிக்கட்டு மூவிஸ் பக்தியுடன் வழங்கும் ஜெ.எம்.பஷீர் நடிப்பில் தேசியதலைவர் – மறைக்கப்பட்ட வரலாறு

திரைக்கதை, வசனம், இயக்கம் R.அரவிந்த்ராஜ் B.A., DFTech.

முத்துராமலிங்கதேவர் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’
என்ற பெயரில் பிரமாண்டமாக படபிடிப்பு சென்னையில் நடை பெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மதுரை ராமநாதபுரம் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் படபிடிப்பு நடக்க உள்ளது.

இதில் தேவர் தோன்றும் ஒரு பிரமாண்ட காட்சி 1000 பேர்பங்கேற்க படமாக்கபட உள்ளது.

இதற்காக படக்குழு ஐயாவின்
பெயரை கொண்ட 1000 பேரை படபிடிப்பில் பங்கேற்க வேண்டி
விளம்பரம் கொடுத்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் முத்துராமலிங்கம் என்ற பெயருள்ள 1000 பேர் கலந்து கொண்டு நடிக்க உள்ளனர்.

அதற்கான பிரமாண்ட செட் சிவகங்கையில் போடபட்டு வருகிறது.

இதில் 100 பேர் மொட்டை போடுவது போல் நடிக்க போவதாக தகவல். தென் மாவட்டம் படப்பிடிப்பால் கலை கட்ட போகிறது.

97102 34567, 90478 82233
என்ற எண்ணிற்க்கு உங்கள் புகைப்படம்
மற்றும் அடையாள அட்டையை அனுப்பவும்.

Here’s Chance to act in Tamil film

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ ட்ரெய்லர்.; எடிட்டிங்கில் மிரட்டிய லாரன்ஸ் கிஷோர்

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ ட்ரெய்லர்.; எடிட்டிங்கில் மிரட்டிய லாரன்ஸ் கிஷோர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நெற்றிக்கண்’. இது நயனின் 65-வது திரைப்படமாகும்

நயன்தாரா பார்வையற்றவராக அவரை மிரட்டும் வில்லனாக அஜ்மல் நடித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் தனது Rowdy Pictures நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். இது அவரது முதல் தயாரிப்பாகும்.

சித்தார்த், ஆண்ட்ரியா நடித்த ‘அவள்’ படத்தை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் இப்படத்தினை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.

இந்த ட்ரெய்லர் இந்தளவு சூப்பர் ஹிட்டடிக்க முக்கிய காரணம் அமைந்தது படத்தின் படத்தொகுப்பு தான்.

ஷார்ப்பான எடிட்டிங் செய்து கை அனைவரையும் மிரள வைத்திருக்கிறார் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர்.

அவள் படத்தில் தொடங்கி இராவண கோட்டம், தேன், தி நெக்ஸ்ட் டோர் உள்ளிட்ட வெற்றி படங்களுக்கு இவரே எடிட்டிங்க் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெற்றிக்கண் தொழில்நுட்ப கலைஞர்கள்..

இசை – கிரிஷ், ஒளிப்பதிவு – N.கார்த்திக் கணேஷ், கலை இயக்கம் – S.கமலநாதன், சண்டை இயக்கம் – C.மகேஷ், படத் தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர், ஒலியமைப்பு – விஜய் ரத்தினம், உடை வடிவமைப்பு – சைதன்யா, ராவ், தினேஷ் மனோகரன், வசனம் – நவீன் சுந்தரமூர்த்தி, விளம்பர வடிவமைப்பு – கபிலன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா D one, இணை தயாரிப்பு – K.S.மயில்வாகணன், தயாரிப்பு மேற்பார்வை – V.K.குபேந்திரன், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – G முருகபூபதி, M.மணிகண்டன்.

இத்திரைப்படம் டிஸ்னி-ஹாட் ஸ்டார் ஓடிடியில் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி வெளியாகிறது.

Editor Lawrence Kishore got appreciation for his recent work

இந்திய சுதந்திர தினம் 75.. கப்பலோட்டிய தமிழன் வஉசி 150..; ஜிவி.பிரகாஷ் அருண்ராஜா ஆகியோரின் புதிய முயற்சி

இந்திய சுதந்திர தினம் 75.. கப்பலோட்டிய தமிழன் வஉசி 150..; ஜிவி.பிரகாஷ் அருண்ராஜா ஆகியோரின் புதிய முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சுதந்திரதின 75வது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் ஆகஸ்டு 15-லிருந்து துவங்குகிறது.

கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டமும் வரும் செப்டம்பர் 5-லிருந்து தொடங்குகிறது.

இந்திய சுதந்திர போருக்கு எப்படி தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்ததோ, அதுபோல இந்திய சுதந்திரதின கொண்டாட்டத்திற்கும், தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

50-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசையில் வைரமுத்து அவர்களின் வரிகளில் பரத்பாலா அவர்களின் இயக்கத்தில், ‘தாய்மண்ணே வணக்கம்’ – ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் வெளியிடப்பட்டு இந்திய அளவில் பிரபலமானது.

வரும் 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழர்களின் தியாகத்தை உணர்த்தும் விதமாகவும் இந்தியாவெங்கும் இருக்கும் சுதந்திர வீரர்களின் பெருமைகளை போற்றும்படியும் ஏ.ராஜசேகர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் அருண்ராஜா காமராஜ் வரிகளில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் பிரமாண்டமாக மற்றுமொரு பாடல் உருவாகிறது.

தமிழில் தொடங்கி இந்தியாவில் திரைப்படங்கள் உருவாகும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஒரியா, மராட்டி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, குஜராத்தி, கொங்கனி உள்ளிட்ட 12 மொழிகளில் இந்த பாடல் உருவாகிறது.

இந்தியாவில் உள்ள முன்னணி திரைப்பட கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இப்பாடல் உருவாக்கத்தில் பங்கு கொள்ளவிருக்கிறார்கள்.

கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இயற்கை எழில் கொஞ்சும் பல்வேறு இடங்களிலும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களிலும் இப்பாடல் படமாக்கப்பட இருக்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காட்சி ஊடகங்களிலும் இப்பாடல் திரையிடப்பட இருக்கிறது.

இப்படப்பிடிப்பின் சிறப்பு நிகழ்வாக கனெக்டிங் இந்தியா வித் கலர்ஸ் (Connecting India With Colors) என்ற தலைப்பில் உலக சாதனை முயற்சியாக 6 கி.மீ. நீளத்திற்கு கேன்வாஸ் பெயிண்டிங் (Canvas Painting) வரையப்படுகிறது.
தமிழகம் தொடங்கி இந்தியாவெங்கும் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களின் வரலாற்று நிகழ்வுகள் வரையப்படுகிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 75 முன்னணி ஓவியக்கலைஞர் வரைகிறார்கள்.

இந்த உலக சாதனையை (Guinness book of records, limca book of records and Asian book of records) -ல் பதிவு செய்யப்போகிறோம்.

இந்த பாடலின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் (FIRST LOOK MOTION POSTER) வெளியீடு வரும் செப்டம்பர் 5-ல் தொடங்கும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது ஆண்டு விழாவில் வெளியிடப்பட இருக்கிறது.

இவ்விழாவில் வ.உ.சி. எழுதிய அனைத்து நூல்களையும் உள்ளடக்கிய வ.உ.சி பெட்டகம்’ வெளியிடப்பட இருக்கிறது.

வ.உ.சி-யின் 150வது ஆண்டை குறிக்கும் பொருட்டு உலகெங்கும் இருக்கும் 150 தமிழ் ஆளுமைகள் எழுதும் ‘வ.உ.சி 150’ என்ற புத்தகம் வெளியிடப்படவிருக்கிறது.

இந்தியாவில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களில் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு தான் முதன் முதலில் அரசியல் வாழ்க்கை வரலாறு 1906-ல் எழுதப்பட்டது.

வெள்ளையர்களால் இந்தியாவில் தடை செய்யப்பட்டு லண்டன் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுவிட்ட அந்த நூலை மீட்டெடுத்து ( நூலகர் மற்றும் ஆய்வாளர் திரு.ரங்கையா முருகன்) தமிழில் தமிழ்பெருஞ்சொல் வ.உ.சி. என்றும் ஆங்கிலத்தில் தி பிக் வேர்ட் வி.ஒ.சி. THE BIG WORD V.O.C.என்றும் வெளியிடுகிறோம்.

இவையனைத்தும் ஆடியோ புத்தகமாகவும் (AUDIO BOOK ), வீடியோ புத்தகமாகவும் (VIDEO BOOK), கிண்டில் வர்ஷனாகவும் (KIDLE VERSION) வ.உ.சி. செயலியாகவும் (V.O.C. MOBILE APP) இலவசமாக டிஜிட்டலில் பதிவேற்றுகிறோம்.

மாபெரும் இந்நிகழ்வை நல்லறிஞர்களின் துணை கொண்டு சக்ரா அறக்கட்டளை நிறுவனர் சக்ரா ராஜசேகர் மற்றும் விதை புத்தக வெளியீட்டு நிறுவனர் ஆ.சுப்ரமணியன் இணைந்து முன்னெடுத்திருக்கிறார்கள்.

GV Prakash and Arun Raja joins for special song

‘நெருப்பா இருப்பான்…’ ஹிப் ஹாப் ஆதியை நினைத்து மயங்கிய மாதுரி

‘நெருப்பா இருப்பான்…’ ஹிப் ஹாப் ஆதியை நினைத்து மயங்கிய மாதுரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிப் ஹாப் ஆதியின் “சிவகுமாரின் சபதம்” படத்திலிருந்து, முதலில் வெளியிடப்பட்ட இரண்டு சிங்கிள் பாடல்களின் பெரு வெற்றியை தொடர்ந்து, மூன்றாவது பாடலாக “நெருப்பா இருப்பான்” தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ரொமாண்டிக் வகை பாடலை பத்மலதா பாடியுள்ளார். படத்தில் கதாநாயகி (மாதுரி ) கதாநாயகனை (ஆதி) காதலித்து, அவரது அழகை மற்றும் போற்றத்தக்க பண்பை, நினைத்துருகி பாடுவதாக வரும் பாடல் இது.

முதல் இரண்டு பாடல்கள் போலவே, இப்பாடலும் ரசிகர்களிடம் பேராதரவு பெற்று வருகிறது.

முதன்மை பாத்திரத்தில் நடிப்பது மற்றும் இசையமைப்பதோடு, ஹிப்ஹாப் தமிழா இப்படத்திற்கு கதை, திரைக்கதை, பாடல்கள், எழுதி படத்தை இயக்கவும் செய்துள்ளார்.

அருண்ராஜா DF. Tech (ஒளிப்பதிவு), தீபக் S. துவாரகநாத் (படத்தொகுப்பு), சந்தோஷ் (நடன இயக்குனர்), ஸ்ரீஜித் சாரங் (கலரிஸ்ட்), வாசுதேவன் (கலை இயக்குனர்), Nectar Pixels Media (VFX), தபஸ் நாயக் (ஒலி கலவை), நிகில் மேத்யூஸ் (ஒலி பொறியாளர்), Sync Cinema (SFX), அமுதன் பிரியான் (டிசைன்ஸ்), அஸ்வந்த் ராஜேந்திரன் (நிர்வாக தயாரிப்பாளர்) ஆக பணியாற்றியுள்ளனர்.

TG தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜீன் தியாகராஜன் ஆகியோர் SathyaJyothi Films சார்பில் ஹிஃபாப் தமிழா மற்றும் Indie Rebels உடன் இணைந்து சிவக்குமார் சபதம் படத்தை தயாரித்துள்ளனர்.

Hiphop Aadhi starrer Sivakumarin Sabadham has unveiled the third single Neruppa Iruppan

சர்ஜுன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக அதர்வா அசத்தும் ‘துணிந்த பின்’

சர்ஜுன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக அதர்வா அசத்தும் ‘துணிந்த பின்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில், முன்னணி நடசத்திரமாக வலம் வரும் இளம் நடிகர் அதர்வா முரளி.

விரைவில் வெளியாகவுள்ள “நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தில் தைரியம் பற்றிய பகுதியில், இயக்குநர் சர்ஜுன் KM இயக்கியுள்ள “துணிந்த பின்” கதையில் அனுபவமில்லாமல் தடுமாறும் காவல் அதிகாரி ‘வெற்றி’ பாத்திரத்தில் அதர்வா நடித்துள்ளார்.

தமிழின் முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள “நவரசா” ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது.

இயக்குநர் சர்ஜூன் KM உடன் இணைந்து பணிபுரிந்த அனுபவம் மற்றும் வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்தது பற்றி, நடிகர் அதர்வா முரளி கூறியதாவது..

இயக்குநர் சர்ஜுன் இந்த படத்தின் திரைக்கதையை பற்றி விவரிக்கும் போது, எந்த உணர்வை பற்றிய கதையை சொல்லப்போகிறார், என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன்.

இந்தப் படம் தைரியத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளது என்று அவர் விவரித்த பின்னர், என் மனம் சந்தோஷத்தின் உச்சிக்கு சென்றது.

நான் ஸ்பெஷல் டாஸ்க் போர்சில் உள்ள ஒரு சிறப்பு அதிகாரியாக (Special Task Force officer) நடிக்கவுள்ளேன், என்று கூறியபோது ஆடம்பர காவல் அதிகாரி உடையில், மிக ஸ்டைலாக என்னை நானே கற்பனை செய்து கொண்டேன்.

இந்தப்படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

இயக்குநர் சர்ஜுன் உடன் பணி புரிந்தது மற்றும் வெற்றி என்ற கதாபாத்திரத்தை செய்தது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது.

“நவரசா” மனித உணர்வுளில் 9 ரசங்களான, கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு, ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறும் ஆந்தாலஜி திரைப்படமாகும்.

தமிழின் 40 க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், ஆளுமைமிக்க இயக்குநர்கள் பங்களிப்பில், இந்தியாவின் மிக முக்கிய படைப்பாக, “நவரசா” உருவாகியுள்ளது.

Justickets நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர்.

ATHARVAA RECALLS HIS EXPERIENCE WORKING WITH FILMMAKER SARJUN KM FOR THE UPCOMING NETFLIX ANTHOLOGY ‘NAVARASA’

More Articles
Follows