சிவகார்த்திகேயனுக்காக 10 லாரி குப்பை கொண்டுவந்த இயக்குனர்

சிவகார்த்திகேயனுக்காக 10 லாரி குப்பை கொண்டுவந்த இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Art Director brought 10 lorry of Garbage for Velaikkaran movieதனி ஒருவன் படத்தைப் பார்த்த சிவகார்த்திகேயன், உங்கள் இயக்கத்தில் நடிக்க ஆசை என்று கேட்டுக் கொண்டதன்படி வேலைக்காரன் படத்தை இயக்கியுள்ளார் மோகன்ராஜா.

இப்படம் இந்த மாதமே வெளியாகும் என கூறப்பட்டு பின்னர் 2017 டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் சமூகம் சார்ந்த ஒரு கருத்தை வலியுறுத்தவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படத்திற்காக ஒரு சேரி போன்ற பகுதியை உருவாக்க நினைத்தாராம் இயக்குனர்.

எனவே அதை படமாக்க, நிஜமான குப்பைகளை 10 லாரிகளில் கொண்டுவந்து அந்த சேரி பகுதியை செட் போட்டு படமாக்கினாராம்.

Art Director brought 10 lorry of Garbage for Velaikkaran movie

ஜிமிக்கி கம்மல் பெண்ணே நீட் சமயத்தில் இது நியாயமா.? – விஜயகுமார்

ஜிமிக்கி கம்மல் பெண்ணே நீட் சமயத்தில் இது நியாயமா.? – விஜயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

uriyadi VijayKumarதமிழகத்தை நீட் தேர்வு போராட்டங்கள் ஆட்டுவித்து கொண்டிருக்கையில் திடீரென ஜிமிக்கி கம்மல் ஆட்டம் சில இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கேரள பெண்களின் இந்த அழகு நடனம் யூடிப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தமிழகத்திலும் பலரது பாராட்டை பெற்று வருகிறது.

இந்நிலையில் உறியடி பட இயக்குனர் விஜயகுமார், நீட் தேர்வு குறித்தும் இந்த ஜிமிக்கி கம்மல் குறித்தும் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

பாட திட்டத்தை மாற்றாமல் தேர்வு முறையை மாற்றி என்ன பயன்..? நம்மிடம் ஓட்டு வாங்கும் அரசியல்வாதிகள் இதற்கான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடாமல் இருப்பது ஏன்?

நீட் தேர்வு போராட்டத்தால் பல மாணவர்கள் சிறை சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த சமயத்தில் ஜிமிக்கி கம்மல் பாடல் டிரெண்ட் ஆகிவருகிறது. இதை பார்க்கும்போது நீட் ஆதரவாளர்கள் நம்மை பார்த்து கேலி செய்ய மாட்டார்களா? என கேட்டுள்ளார்.

இதனையறிந்த அந்த நடன பெண்மணி செர்லியும் நீட் தேர்வு போராட்டங்களில் கவனம் செலுத்த அனைவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Director Vijayakumar request to Jimikki Kammal dance fame Sherli

அனிதா வீட்டிற்கு சென்ற விஜய்யை பாராட்ட மாட்டேன் – சேரன்

அனிதா வீட்டிற்கு சென்ற விஜய்யை பாராட்ட மாட்டேன் – சேரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay director cheranநீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்றவர் மாணவி அனிதா.

ஆனால் நீட் தேர்வு முறையால் தோல்வியை சந்தித்த மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டார்.

எனவே அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் தினம் தினம் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் நடிகர் விஜய், அனிதாவின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து 1 லட்சம் ரூபாய் நிதியை அவரது தந்தையிடம் அளித்தார்.

இதுகுறித்து நடிகரும் இயக்குனருமான சேரன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

Cheran Pandian‏ @cherandreams 15m15 minutes ago

@actorvijay அனிதாவின் பெற்றோருக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னது மனதில் பதிகிறது.. பாராட்டமாட்டேன் ஏனெனில் இது உங்கள் கடமை. தொடருங்கள்.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

I wont appreciate Vijay for visiting Anithas father says Director Cheran

விவேகம் தந்த விபத்து; ஆப்ரேசன் முடித்த அஜித் எப்படி இருக்கிறார்.?

விவேகம் தந்த விபத்து; ஆப்ரேசன் முடித்த அஜித் எப்படி இருக்கிறார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajithசிவா இயக்கத்தில் அஜித் நடித்த விவேகம் படம் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

இப்படத்தின் சூட்டிங்கின் போது அஜித்துக்கு சிறு விபத்து ஏற்பட்டது.

‘விவேகம்’ சண்டைக்காட்சியின் போது தோள்பட்டை ஒன்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அதனைப் பொருட்படுத்தாது அஜித் நடித்து முடித்துக் கொடுத்தார்.

அப்போதே அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள அஜித்திடம் மருத்துவர்கள் வலியுறுத்தினர்.

ஆனால் தன்னால் படப்பிடிப்பு நின்றுவிடும் என்பதால் அப்போது அந்த அறுவை சிகிச்சையை தள்ளிவைத்த அஜித், தற்போது அதை செய்துக் கொண்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி இந்த ஆப்ரேசன் நடைபெற்றது.

இதன்பின்னர் அவர் நன்றாக ஓய்வுஎடுக்க வேண்டும் டாக்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எனவே பூரண குணம் அடைந்தவுடன் விரைவில் தன் அடுத்த படத்தை ஒப்புக் கொள்வார் என அஜித்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Ajith taking full rest after operation Next movie announcement will be soon

நடிகை தீக்‌ஷிதாவை மணக்கும் இசையமைப்பாளர் தரண்

நடிகை தீக்‌ஷிதாவை மணக்கும் இசையமைப்பாளர் தரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music Director DharanKumar wedlock with Dheekshita on 15th September 2017

போடா போடி, நாய்கள் ஜாக்கிரதை, பிஸ்தா உள்ளிட்ட 25 படங்களுக்கு இசையமைத்தவர் தரண்.

இவர் நடிகையும் ஆடை வடிவமைப்பாளருமான தீக்‌ஷிதாவை திருமணம் செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

நகர்வலம், ஆகம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தீக்‌ஷிதா என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் திருமணம் செப்டம்பர் 15ஆம் தேதியும் திருமண வரவேற்பு செப்டம்பர் 16ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

Music Director DharanKumar wedlock with Dheekshita on 15th September 2017

இது என் இந்தியா அல்ல… ஆஸ்கர் நாயகன் ஏஆர்.ரஹ்மான் ஆதங்கம்

இது என் இந்தியா அல்ல… ஆஸ்கர் நாயகன் ஏஆர்.ரஹ்மான் ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I expect Positive and Responsible India says AR Rahmanஅண்மைக்காலமாக அதிகளவில் நடக்கும் அராஜகம், ஊழல் மற்றும் அரசியல் நிகழ்வுகளை பார்த்தால் எந்தவொரு மனிதனும் நிச்சயம் கொதித்து எழுவான்.

இதுகுறித்து பிரபலங்களிடம் கேட்கும்போது அவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒன் ஹார்ட் படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் ஏஆர். ரஹ்மான் கலந்துக் கொண்டுள்ளார்.

அப்போது அவரிடம் பெங்களுர் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளிக்கும்போது… அது மிகவும் வருத்தம் அளிக்க கூடிய செய்தி. இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியாவில் நடக்கக்கூடாது.

இது என்னுடைய இந்தியா அல்ல. நான் பாசிட்டிவ்வான பொறுப்பான இந்தியாவை எதிர்பார்க்கிறேன் என ஆதங்கத்துடன் தன் கருத்தை தெரிவித்துள்ளார்” இந்த ஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மான்.

I expect Positive and Responsible India says AR Rahman

More Articles
Follows