அரியர் மாணவர்களின் அரசனே… எடப்பாடியாரை வாழ்த்திய மாணவர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலால் உலகமே திணறி வருகிறது.

ஆனால் பள்ளி பயிலும் மாணவர்கள் மட்டும் ஏதோ ஒரு வகையில் கொண்டாட்டம் தான் எனலாம்.

ஏனென்றால் பள்ளித் இறுதித் தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் 10ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவித்திருந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

இதனையடுத்து காலேஜ் மாணவர்களும் தங்களை ஆல் பாஸ் ஆக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

ட்விட்டர் தளங்களில் ட்ரெண்ட்டிங்கிலும் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் செமஸ்டர் தேர்வு எழுத பதிவு செய்திருந்த அரியர் வைத்த மாணவர்கள் ஆல் பாஸ் என நேற்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

இதனையடுத்து அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி இருந்தால் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு ஈரோடு அருகே கொல்லம்பாளையத்தில் திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழக முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து கல்லூரி மாணவர்கள் பேனர்கள் வைத்திருந்தனர்.

அரியர் மாணவர்களின் அரசனே என வாசகங்களை டிசைன் செய்துள்ளனர்.

ஜனவரி 2021ல் வீராட் கோலி-அனுஷ்கா ஷர்மா வீட்டில் 3வது நபர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிரிக்கெட் வீரர் வீராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி இத்தாலியில் நடைபெற்றது.

தற்போது தன் மனைவி அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருப்பதை விராட் கோலி தெரிவித்துள்ளார்

இவர்களது குடும்பத்தில் மூன்றாவதாக ஒருவர் வருவதை விராட் கோலி தெரிவித்துள்ளார்.

அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி 2021-ல் அனுஷ்கா ஷர்மா குழந்தையை பிரசவிக்க இருப்பதாக வீராட் கோலி மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்

நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்த ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று (27 August) நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பாக பல நலத்திட்ட உதவிகள், இரத்த தானம், மரக்கன்றுகள் நடுதல், புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.

மதுரை அம்மன் சைவ உணவக வளாகத்தில் நடிகர் சூரியின் சகோதரர் திரு.லட்சுமணன் அவர்கள் தலைமையிலும், திருநெல்வேலியில் திரு. உதயகுமார் அவர்கள் தலைமையிலும், நாகர்கோவிலில் திரு.சதீஷ்ராஜா அவர்கள் தலைமையிலும் சென்னையில் சூரி நற்பணி இயக்கத்தின் சார்பாக திரு. ஆதீஸ்வரன் தலைமையிலும் இன்று கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மதிய உணவு வழங்கினர்.

நாகர்கோவிலில் திரு.சதீஷ்ராஜா அவர்கள் தலைமையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசி காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினர். பாண்டிச்சேரியில் முதியோர் இல்லத்தில் திரு.சதீஷ்ராஜா மதிய உணவும் வழங்கினார்.

தருமபுரி, கரூர் மாவட்டங்களில் நற்பணி இயக்கம் சார்பாக அரசு மருத்துவமனையில் இரத்த தான முகாம் மூலம் இரத்த தானம் வழங்கினர்.

கடலூர்,தருமபுரி மாவட்டங்களில் நற்பணி இயக்கம் சார்பாக முதியோர் இல்லத்தில் மதிய உணவு மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் நற்பணி இயக்கம் சார்பாக ஆதரவற்றோருக்கு இனிப்புகள், மதிய உணவு வழங்கப்பட்டன.

மதுரை மற்றும் பாண்டிச்சேரியில் நற்பணி இயக்கம் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் சனிடைசர் வழங்கப்பட்டன

நடிகர் சூரி அவர்களுடைய சகோதரர் திரு.லட்சுமணன் அவர்களுக்கும் இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது

மாஸ்டர் பட தயாரிப்பாளரின் மகளை மணந்தார் அதர்வா தம்பி ஆகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரும் விஜய்யின் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகா பிரிட்டோ.

இவருக்கும் நடிகர் முரளியின் மகனும் நடிகருமான அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் என்பவருக்கும் கடந்த 24-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

ஆகாஷ் முரளி – சினேகா பிரிட்டோ திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

கொரோனா பிரச்னை முடிவுக்கு வந்ததும் நண்பர்கள் & திரையுலகினர் என அனைவரையும் அழைத்து வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

முருகதாஸ்-அட்லி பார்முலாவில் மீண்டும் லோகேஷுடன் இணையும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் நடித்து வெளியான கடந்த 8-10 படங்களை பார்த்தால் இயக்குனர் பெயர்களில் முருகதாஸ் மற்றும் அட்லி பெயரே அதிகளவில் இடம் பிடித்திருக்கும்.

இவர்கள் இருவருக்கும் மாறி மாறி பட வாய்ப்புகளை வழங்கி வந்தார் விஜய்.

தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை அட்லி இயக்கியிருந்தார்.

துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை முருகதாஸ் இயக்கியிருந்தார். தற்போது தளபதி 65 படத்தையும் முருகதாஸே இயக்கவுள்ளார்.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் முருகதாஸ் அட்லி பார்முலாவை போல மீண்டும் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜீக்கு வாய்ப்பு வழங்கவிருக்கிறாராம் விஜய்.

முருகதாஸின் தளபதி 65 படத்தை முடித்துவிட்டு தளபதி 66 படத்திற்காக இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இதுகுறித்த உறுதியான தகவல்கள் இல்லை.

கௌதம் மேனன் பட நாயகியை மணக்கும் ஓவியாவின் எக்ஸ் லவ்வர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பான போதே அதில் பங்கேற்ற ஓவியா ஆரவ் இருவரின் காதல் பற்றி ஊரே பேசியது.

ஆரவ்விடம் ஓவியா தன் காதலை ஓபனாக அறிவித்தார். பின்னர் அந்த பேச்சு அப்படியே ஓய்ந்து போனது.

தற்போது இருவரும் அவரவர் திசைகளில் பிரிந்து சென்றுவிட்டனர்.

‘மார்கெட் ராஜா எம்பிபிஎஸ்’, ‘ராஜ பீமா’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார் ஆரவ்.

இந்த நிலையில் ராஹீ என்பவரை திருமணம் செய்யவிருக்கிறாராம் ஆரவ்.

கௌதம் மேனன் இயக்கிய ஜோஷ்வா படத்தில் வருண்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் ராஹீ.

ஆரவ் மற்றும் ராஹீ இருவரது திருமணம் செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More Articles
Follows