தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அப்படத்தின் போது டைரக்டர் விஜய்-அமலா பாலுக்கிடையே காதல் உருவாக, இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2014-இல் திருமணம் செய்து கொண்டனர்.
பெரும்பாலும் திருமணத்திற்கு பிறகு நடிகைகள் நடிப்பதில்லை. ஆனாலும் அமலா பால் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பை தொடர்ந்தார்.
இது விஜய் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகின.
ஆனால், இதுவரை இருவர் தரப்பிலும் எவ்வித மறுப்பு செய்தியும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.