முதன்முறையாக ஏ.ஆர். ரஹ்மானுடன் இணையும் சுந்தர் சி.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பு, நடிப்பு என கவனம் செலுத்தி வந்தாலும் இடையில் தன்னை வளர்த்து விட்ட டைரக்ஷனையும் விடாதவர் சுந்தர் சி.ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் மிகப்பிரம்மாண்டமாக படத்தை இயக்கவிருக்கிறார் இவர்.

இப்படத்தின் நாயகன், நாயகி யார்? என்ற உறுதியான தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.சரித்திர படமாக உருவாகவிருக்கும் இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாரிக்கின்றனர்.

இந்நிலையில் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மானை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.இவர்கள் இணைவது இதுவே முதன்முறையாகும்.

இதனை நடிகை குஷ்பூ தன் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

கத்தி ரீமேக்கில் விஜய்யாக சிரஞ்சீவி… சதீஷாக யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி தமிழில் சூப்பர் ஹட்டடித்தது.

தற்போது இது தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் 150வது படமாக உருவாகி வருகிறது.

வி.வி.விநாயக் இயக்க லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் ராம் சரண்.

ஹீரோயின் வேட்டை தொடர்ந்து நடைபெறும் வேலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சிரஞ்சீவியின் பிறந்த நாள் அன்று வெளியிடவுள்ளனர்.

இதில் சதீஷ் வேடத்தில் அலி நடிக்கிறார்.

தன்னுடைய கேரக்டரில் அலியை தவிர யார் நடித்தாலும் பொருத்தமாக இருக்காது என தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் சதீஷ்.

எம்.எஸ். சுப்புலட்சுமிக்காக ஐ.நா. சபை செல்லும் ஏ.ஆர். ரஹ்மான்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றதன் மூலம் இந்திய சினிமா இசையை உலகறிய செய்தவர் ஏ.ஆர். ரஹ்மான். இந்நிலையில் விரைவில் ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவிருக்கிறாராம் ரஹ்மான்.

பிரபல பாடகியான எம்.எஸ். சுப்புலட்சுமியின் 100வது பிறந்தநாள் விழா இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி ஐ.நா.சபையில் கொண்டாடப்படவுள்ளது. எனவே, எம்.எஸ். சுப்புலட்சுமியை கௌரவப்படுத்தும் வகையில் தனது சன்சைன் இசைக்குழுவுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்.

50 வருடங்களுக்கு முன்பு (1966) ஐ.நா. சபையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போனில் கர்ஜித்த கபாலி…. லைக்கா ராஜூ மகிழ்ச்சி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நீண்ட நாட்களாக அமெரிக்காவில் இருப்பதால், அவரது உடல் நிலை குறித்த வதந்திகள் கடந்த வாரம் மீடியாவை திணறச் செய்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து ரஜினி குடும்பத்தார் விளக்கம் அளித்த போதிலும், ரஜினி இன்னும் நாடு திரும்பவில்லை என்பதால், வதந்திகள் முழுமையாக மறையவில்லை.

இந்நிலையில் லைகா நிறுவனத்தின் தலைவர் ராஜூ மகாலிங்கம் ரஜினியை நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினாராம். அப்போது ரஜினியின் குரல் சிங்கம் கர்ஜிப்பது போல இருந்ததாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

ஜூலை 3ஆம் தேதி ரஜினிகாந்த் சென்னை திரும்பவுள்ளதாகவும் அப்போது ‘கபாலி’ ரிலீஸ் தேதியை கன்பார்ம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கௌரவ் படத்தை தொடர்ந்து எழில் இயக்கத்தில் உதயநிதி…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய், அஜித், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நாயகர்களின் படங்களை இயக்கியவர் எழில். இவரின் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படம் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ர்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம் எழில். தற்போது லைகா தயாரிப்பில் கௌரவ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார் உதயநிதி.

இதனையடுத்து எழில் இயக்கும் படத்தை தன் ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நடிப்பார் உதயநிதி என கூறப்படுகிறது.

கழிவறை கட்டினால் கபாலி டிக்கெட்… அரசாங்கத்தின் அதிரடி ஆஃபர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக கிரண்பேடி அண்மையில் பொறுப்பேற்றார்.

தன் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள இவர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில், தற்போது நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து புதுச்சேரியில் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் தன்னுடைய ட்விட்டரில் “கழிவறை கட்டுவோருக்கு இலவச சினிமா டிக்கெட் தரப்பட உள்ளது” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜவஹர் கூறியதாவது:

”புதுச்சேரி மண்ணாடிப்பட்டில் செல்லிப்பட்டு கிராமம் உள்ளது. அங்கிருந்த 772 வீடுகளில் 447 வீடுகளில் கழிவறை இல்லை.

எனவே கழிவறை கட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி அரசு ரூ. 20 ஆயிரம் மானியம் தருவதை தெரிவித்தோம்.

மேலும் கழிவறை கட்ட முன்வரும் குடும்பத்துக்கு ரஜினியின் ‘கபாலி’ படத்தின் 4 டிக்கெட்டுகள் தரவிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

More Articles
Follows