தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலக அரங்கில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். இவரது இசைக்கென்று உலகெங்கும் ரசிகர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.
இந்த நிலையில் மிகப்பிரமாண்டமான இசைக் கச்சேரியை நடத்தவிருக்கிறார் ரஹ்மான்.
7 ஆண்டுகளுக்கு பிறகு AR RAHMAN இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக மலேஷியா கோலாலம்பூரில் DMY creation என்கின்ற நிறுவனம் வருகின்ற 2023 ஜனவரி மாதம் 28 ஆம் தேதி நடத்துகிறது.
இந்த அறிவிப்பை மிகவும் புதுமையான முறையில் DMY creation chairman Dato Mohamed Yusoff அவர்களே 10,000 அடி உயரத்தில் இருந்து ஹெலிஃகாப்டர் மூலமாக பாரசூட்டில் இருந்து குதித்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த முறையில் வெளியிடுவது மலேஷியாவில் இதுவே முதல் முறை ஆகும்.
இந்த சாதனை ‘மலேஷியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ‘அதிக உயரத்தில் இருந்து குதிக்கப்பட்ட சாதனையாக வெளியிடப்பட்டுள்ளது.