ஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்

ஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush gv prakash ar rahmanபுதிய முயற்சி எடுக்கும் போது, சிலர் பக்கபலமாக இருந்தால் கூடுதல் பலம் கிடைத்தது போல் உணர்வோம். ஆனால், திரைத்துறையில் புதிய முயற்சிகள் எடுக்கும் போது “ஏன் இவருக்கு இந்த வேலை” என்று பேசுவதற்கே பலர் இருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே புதிய முயற்சிக்கு நாங்கள் கைக் கொடுக்கிறோம் என்பார்கள். அப்படியொரு கூட்டணி இப்போது அமைந்திருக்கிறது.

‘அசுரன்’, ‘சூரரைப் போற்று’ என்று தொடரும் ஜி.வி.பிரகாஷின் இசைப் பாய்ச்சல் அடுத்தது ஹாலிவுட் பக்கம் திரும்பியிருக்கிறது. ஆம், ஆங்கிலத்தில் ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளார் உலக இசைக் கலைஞர்கள் மத்தியில் தனது தடத்தை வலுவாக பதிப்பார் என்று உறுதியாக நம்பலாம். ‘கோட் நைட்ஸ்’ என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பத்தில், ‘ஹை அண்ட் ட்ரை’ என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்தப் பாடல் செப்டம்பர் 17-ம் தேதி வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷின் இந்த ஹாலிவுட் பாய்ச்சலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தனுஷ் இணைந்துள்ளனர். ஆம்ல், 17-ம் தேதி இந்தப் பாடலை இருவரும் வெளியிடவுள்ளனர். இவர்கள் மட்டுமல்ல, பல்வேறு முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் ஜி.வி.பிரகாஷுக்காக ஒன்றிணைகிறார்கள். ஒவ்வொருவருடைய பெயராக அறிவிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

இந்தப் பாடல் ஜிவி பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது. இரண்டு விதமான உலகத்தின் கலவை இந்தப் பாடல். ஹை அண்ட் ட்ரை, ஜிவி பிரகாஷின் முதல் ஆங்கிலத் தனிப்பாடல். ஜிவி மற்றும் ஜூலியா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கான ப்ரோக்ராமிங் மற்றும் அரேஞ்மென்ட் (Programming and Arrangement) இரண்டையும் ஜிவி செய்துள்ளார்.

எலக்ட்ரானிக் பாப் வகை பாடலான இது காதலர்களுக்கு இடையேயான மனமுறிவில் இருக்கும் உணர்ச்சிகளுக்குள் ரசிகர்களை இழுத்துச் செல்லும். ஒரே நேரத்தில் காதலனின் அரவணைப்பிலும் அதே நேரம் குளிர்ச்சியான இரவில் தனிமையில் இருப்பது போலவும் பிரிந்து சென்ற காதலர்களுக்குள் இருக்கும் குழப்பத்தை உருவகப்படுத்திச் சொல்கிறது இந்தப் பாடல்.

இந்தப் பாடல் ஜிவி பிரகாஷின் சொந்த ஸ்டூடியோவில், ஜெஹோவாசன் அல்காரால் கலவை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்பக் கலைஞர் ராண்டி மெரில் பாடலை மாஸ்டரிங் செய்துள்ளார். இவர் அடெல், டெய்லர் ஸ்விஃப்ட், கேடி பெர்ரி, மரூன் 5 உள்ளிட்ட பல சர்வதேச இசைக் கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார்.

AR Rahman and dhanush to release gv prakash new english album

சர்வதேச விருதுகளை வென்ற ‘பச்சை விளக்கு’.; – ஆன்லைன் ரிலீஸுக்கு க்ரீன் சிக்னல்

சர்வதேச விருதுகளை வென்ற ‘பச்சை விளக்கு’.; – ஆன்லைன் ரிலீஸுக்கு க்ரீன் சிக்னல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pachai Vilakkuகாதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றுவதோடு, அதன் மூலம் அவர்களது குடும்பத்தாரை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை தோலுரித்ததோடு, இந்தியாவின் முதல் சாலை விதி திரைப்படம் என்ற பெருமையோடு வெளியான படம் ‘பச்சை விளக்கு’.

டாக்டர்.மாறன் இயக்கி நடித்த இப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றதோடு பத்திரிக்கையாளர்களிடமும் வெகுவாக பாராட்டு பெற்றது.

“மக்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படம்” என்று பல பத்திரிக்கைகள் பாராட்டிய இப்படம் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு பல விருதுகளை வென்றுள்ளது.

பூடான் நாட்டில் உள்ள பரோ என்ற இடத்தில் நடைபெற்ற ‘ட்ரக்’ என்ற சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று, சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்ற விருதைப் பெற்றுள்ளது.

மேலும், இந்தியாவில் நடைபெற்ற ‘ட்ரிப்விள்’ சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த படத்திற்கான விருதையும் இப்படம் வென்றுள்ளது.

அதேபோல், நியூயார்க், லண்டன் போன்ற இடங்களில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் அதிகாரப்பூர்வ தேர்வாக இப்படம் கலந்துக் கொண்டுள்ளது.

’பச்சை விளக்கு’ திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் சர்வதேச அங்கீகாரத்தை தொடர்ந்து, ஒடிடி நிறுவனங்கள் அப்படத்தை ரிலீஸ் செய்ய முன் வந்துள்ளது.

முன்னணி நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர்களின் படங்களை மட்டுமே ஒடிடி நிறுவனங்கள் வெளியிட ஆர்வம் காட்டி வந்த நிலையில், அறிமுக இயக்குநர் மற்றும் நடிகரின் படத்தை வெளியிட விருப்பம் தெரிவித்திருப்பது ‘பச்சை விளக்கு’ படத்திற்கு கிடைத்த மற்றொரு கெளரவம் ஆகும். காரணம், படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் அப்படி.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நாடகக் காதல் மூலம் பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்ததாக காவல்துறை வழக்கு பதிவு செய்தது. தமிழகத்தையே உலுக்கிய இந்த பிரச்சினை போல, நமக்கு தெரியாத பல நாடகக் காதல் பிரச்சினைகள் இங்கு நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.

அந்த நாடகக் காதலில் இருந்து பெண்கள் தங்களை எப்படி காத்துக் கொள்வது, என்பதை விவரித்திருக்கும் இப்படத்தை பெண்கள் நிச்சயம் பார்க்க வேண்டும்.

ஊடங்கள் பாராட்டிய ‘பச்சை விளக்கு’ படம் தற்போது உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருது வென்றிருப்பது படத்திற்கும், படக்குழுவினருக்கும் உற்சாகத்தை கொடுத்திருப்பதோடு, தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது என இயக்குநர் டாக்டர் மாறன் தெரிவித்தார்.

Doctor Marans Pachai Vilakku to release in ott

வெண்தாடி டூ ப்ளாக் தாடி.; வெப் சீரிஸ் சூட்டிங்கில் விஜய்சேதுபதி

வெண்தாடி டூ ப்ளாக் தாடி.; வெப் சீரிஸ் சூட்டிங்கில் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கிட்டதட்ட 3 மாதங்களுக்கு மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது.

கடந்த 3 மாதங்களாக ஊரடங்கில் சில தளர்வுகள் இருந்தாலும் செப்டம்பர் முதல் சினிமா சூட்டிங்குக்கு அனுமதியளிக்கப்பட்டது.

தமிழக அரசும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதியளித்து 75 பேருடன் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்தது.

சின்ன சின்ன பட்ஜெட் படங்களின் சூட்டிங் ஆரம்பமாகிவிட்டது.

ஆனால் முன்னணி நடிகர்களின் படங்களின் சூட்டிங் ஆரம்பமாகவில்லை.

இந்த நிலையில் டாப் ஹீரோ விஜய்சேதுபதி சூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டார்.

ஆனால் இது சினிமா சூட்டிங் இல்லையென்றும் ஆன்லைன் ஓடிடி நிறுவனத்திற்கான வெப் சீரிசின் படப்பிடிப்பு எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்குகிறார்.

ஊரடங்கில் வெண் தாடி, முடியுடன் இருந்த விஜய் சேதுபதி, தற்போது ப்ளாக் டை அடித்து மீண்டும் இளமையாக காணப்படுகிறார்.

Vijay Sethupathi in new web series updates

ஆபிஸ் இடிப்பு.; நடிகை கங்கனா ரணாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு

ஆபிஸ் இடிப்பு.; நடிகை கங்கனா ரணாவத்துக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kangana ranautதோனி படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்தை அடுத்து மும்பையை பாதுகாப்பற்ற நகரமாக உணருவதாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியிருந்தார்.

இதற்கு மகாராஷ்டிரத்தில் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இனி கங்கனா மும்பைக்கு வரக்கூடாது என்று சிவசேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

இதனால் கோபமடைந்த கங்கனா ‘மும்பை என்ன பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரா, நான் வரக் கூடாது என்பதற்கு? நிச்சயமாக மும்பைக்கு வருவேன். முடிஞ்சா என்னை தடுத்துப் பாருங்கள்’ என சவால் விடுத்தார்.

இதனையடுத்து கங்கனாவுக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்தனர்.

ஆனாலும் சிவசேனா அவருக்கு மிரட்டல் விடுத்து வந்த்து.

இது அரசியல் மற்றும் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையில்… சஞ்சய் ரௌத் இது தொடர்பாக கூறியதாவது: அந்தப் பெண் (கங்கனா) மகாராஷ்டிர மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

ஏனெனில், மும்பையை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு அவா் பேசியுள்ளாா். இது ஒட்டுமொத்த மகாராஷ்டிர மக்களையும் அவமதிக்கும் செயல். தனது பேச்சுக்காக அவா் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டால், அவரை மன்னிப்பது தொடா்பாக யோசித்து முடிவெடுப்போம். ஆமதாபாத் நகரை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டுப் பேசும் துணிவு அவருக்கு உண்டா என்று அவா் கேள்வி எழுப்பினார்.

இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள பிரபலங்களுக்கு அவர்களின் தகுதிகளுக்கு ஏற்ப எக்ஸ், ஒய், இசட் பிரிவுகளில் காவல் பாதுகாப்பு வழங்கப்படும்.

கங்கனாவின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் செப்டம்பர் 9 அன்று மும்பைக்கு வரும் கங்கனாவுக்கு 24 மணி நேரமும் துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு அளிக்கவுள்ளார்கள்.

மேலும் இமாசலப் பிரதேச அரசும் கங்கனாவுக்குத் தனியாகப் பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளது. கங்கனா மும்பை செல்லும்போது அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என இமாசலப் பிரதேசத்தின் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள தனது ஆஃபிஸின் புகைப்படத்தைப் பதிவிட்ட கங்கனா, மாநகராட்சி நிர்வாகத்தினர் இடித்து விடுவார் என்று அச்சம் தெரிவித்திருந்தார். அதற்கு மும்பை மாநகராட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்… அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறி கங்கனாவின் அலுவலகக் கட்டடத்தை மும்பை மாநகராட்சி நிர்வாகத்தால் இடிக்கப்பட்டுள்ளது.

Kangana Ranaut granted Y-plus category security

உங்க பொழப்புக்கு ஹிந்தி.. நாங்க படிக்க கூடாதா-? ஐஸ்வர்யா ராஜேஷை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

உங்க பொழப்புக்கு ஹிந்தி.. நாங்க படிக்க கூடாதா-? ஐஸ்வர்யா ராஜேஷை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aishwarya rajeshகடந்த சில நாட்களாக ஹிந்தி எதிர்ப்பு பிரச்சாரங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

‘I AM A தமிழ் பேசும் INDIAN’ என்ற வெள்ளை நிற டி-ஷர்ட்டும் ‘ஹிந்தி தெரியாது போடா’ என்ற சிவப்பு நிற டி-ஷர்ட்டும் திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் தன் பங்குக்கு ஹிந்தி எதிர்ப்பை தெரிவித்தார்.

ஆனால் இதுவே அவருக்கு பிரச்சினையானது.

கடந்த 2017ல் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹிந்தியில் ‘டாடி’ என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.

மேலும் மும்பையில் அப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது ஹிந்தியில் பேசி தனக்கும் ஹிந்தி தெரியும் என கூறியிருந்தார்.

அந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

அதில்…, “உங்க பொழப்புக்கு மட்டும் ஹிந்தி வேண்டும்.. ஆனால் மற்றவர்கள் படிப்பதற்கு ஹிந்தி கூடாதா..? என ஐஸ்வர்யாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Aishwarya Rajesh double stands on hindi issue

வாத்தியாரை மிஞ்சுவார் தளபதி..; அமைச்சர்களுக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி போஸ்டர்

வாத்தியாரை மிஞ்சுவார் தளபதி..; அமைச்சர்களுக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யின் ஆரம்ப கால சினிமாக்களில் ரஜினி ரசிகராகவே அறியப்பட்டார். இதனால் ரஜினி ரசிகர்களும் விஜய் படத்தை ரசிக்க ஆரம்பித்தனர்.

தற்போது ரஜினியின் சூப்பர் ஸ்டார் இடத்திற்கு விஜய் ஆசைப்படுவதால் ரஜினிக்கு எதிராக விஜய் ரசிகர்கள் கிளம்பிவிட்டனர்.

இதனை விஜய்யும் கண்டிப்பதில்லை. கண்டுக்கவும் இல்லை என கூறப்படுகிறது.

இதனால் மெர்சல் உள்ளிட்ட படங்களில் எம்ஜிஆர் ரசிகராகவே வலம் வர ஆரம்பித்தார் விஜய்.

இதனையடுத்து விஜய் ரசிகர்களும் தளபதியை வாத்தியார் எம்ஜிஆருக்கு அடுத்த இடத்திற்கு கொண்டு செல்ல ஆரம்பித்துவிட்டனர்.

அண்மையில் விஜய் சங்கீதா திருமண நாள் வந்தபோது புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி என டிசைன் செய்து போஸ்டர்களை ஒட்டினர்.

மேலும் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் எம்ஜிஆர் போட்டோக்களில் விஜய் முகத்தை வைத்து டிசைன் செய்து போஸ்டர்கள் நாளைய தமிழகமே.. வாத்தி கம்மிங் என்றெல்லாம் போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்துள்ளனர்.

இதை எல்லாம் ஆளும் அதிமுக கட்சி நேரடியாக கண்டுக்கவில்லை என்றாலும் எம்ஜிஆர் இடத்திற்கு விஜய்யால் வர முடியாது என அமைச்சர்கள் மூலம் கருத்து தெரிவித்தனர்.

இதனால் இளைய தளபதியின் இளைய ரத்தங்கள் சூடாகிவிட்டன.

அமைச்சர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்… வாத்தியாரை மிஞ்சுவார் தளபதி…. எம்ஜிஆரை மிஞ்சுவார் விஜய் என போஸ்டர்கள் அடித்து ஒட்டி வருகின்றனர்.

இனி என்ன என்ன நடக்க போகுதோ…??

pic

vijay-poster-thumbnail

MGR on vijay posters creates controversy

More Articles
Follows